தோழர்களால் தங்களது அன்பிற்குரிய மூத்த சகோதரி என்று கருதவும் அழைக்கவும்பட்ட தோழர் ரேகா சின்கா இந்த ஆண்டு மே மாதம் 18- ம் நாள் மாலை 3.45 மணியளவில் பாட்னா நகரில் போரிங் கால்வாய் சாலையில் உள்ள வைஷ்ணவி பிளாஸா அடுக்குமாடிக் குடியிருப்பில் அவர் வசித்த வீட்டில் காலமானார். நீண்ட நாட்கள் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் அவரது மரணம் நேர்ந்தது. அனைவராலும் நன்கு அறியப்பட்ட மார்க்சிய சிந்தனையாளர் சிப்தாஸ்கோஷ் அவர்களின் சிந்தனைகளின் தாக்கத்தால் உத்வேகம் பெற்று உழைக்கும் வர்க்கப் போராட்டப் பதாகையை தனது இறுதி மூச்சுவரை அயர்வின்றி உயர்த்திப் பிடித்த அவரது வாழ்க்கைப் பயணம் இவ்வாறு முடிந்தது.
பல்வேறு எதிர்மறை நிலைகளை துணிச்சலுடனும் லட்சிய வேட்கையுடனும் எதிர்கொண்ட அவர் உழைக்கும் வர்க்க இயக்கம் உருவாக்கிய ஒரு அசாதாரணமான பெண் தலைவர் ஆவார். தொழிற்சங்க இயக்கம் பல்வேறு வகையான சந்தர்ப்பவாதப் போக்குகளுக்கு இரையாகி உள்ள இன்றைய நிலையில் தோழர் ரேகா சின்காவைப் போல் தான் கையிலெடுத்த லட்சியத்தை அர்ப்பணிப்புத் தன்மையுடன் எடுத்துச் செல்பவர்கள் மிகவும் குறைவே.
தோழர் ரேகா சின்காவைப் பீடித்திருந்த கொல்லும் தன்மை வாய்ந்த நோய் அவரை செயலிழந்தவராக ஆக்கிய வேளை வரை அவர் அமைப்பு ரீதியாக ஒருங்கு திரட்டப்படாத கட்டிடத் தொழிலாளர் இயக்கத்தை தனிப்பட்ட முதலாளிகளுக்கு எதிராகவும் காவல்துறை மற்றும் அரசு நிர்வாகத்தின் அடாவடித்தனங்களை எதிர்கொண்டும், சீரிய முறையில் தலைமையேற்று நடத்தினார்.
அவ்வாறு கட்டிடத் தொழிலாளர் இயக்கத்திற்கு தலைமைப் பொறுப்பேற்றிருந்த கால கட்டத்தில் தனது சொந்த நலனை சிறிதளவு கூடப் பொருட்படுத்தாத அர்ப்பணிப்புத் தன்மை வாய்ந்த தலைவராக விளங்கினார். 1960 மற்றும் 1970-களில் ஏறக்குறைய 10 ஆண்டு காலம் அவர் சப்பை மஸ்தூர் சங்கம் எனப்படும் அப்போதைய கிழக்கிந்திய ரயில்வேயின் தானாப்பூர் மண்டலத்தின் தலைவராகச் செயல்பட்டார்.
அரசியல் ரீதியாக அவர் எஸ்.யு.சி.ஐ கட்சியின் பாட்னா கிளையில் பல ஆண்டுகள் செயல்பட்டார். அக்கட்சியின் பெண்கள் அமைப்பின் தலைமைப் பொறுப்பிலிருந்த ஒரு நிர்வாகி என்ற ரீதியில் பல்வேறு பெண்களின் இயக்கங்களையும் அவர் தலைமையேற்று நடத்தி தனது பங்கினை சீரிய முறையில் ஆற்றினார்.
எஸ்.யு.சி.ஐ-லிருந்து அரசியல் வேறுபாடுகள் காரணமாக விலகிய பின்னர் அவர் ஒரு உண்மையான புரட்சிகர உழைக்கும் வர்க்கக் கட்சியாக கம்யூனிஸ்ட் தொழிலாளர் செயல்பாட்டுப் பொது மேடையைக் கட்டியமைக்கும் அரும்பணியில் தன்னைப் பெரிதும் ஈடுபடுத்திக் கொண்டார். அவரது மரணம் கம்யூனிஸ்ட் தொழிலாளர் செயல்பாட்டுப் பொதுமேடையை ஒரு கட்சியாக உருவாக்க தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளுக்கு ஒரு பெரிய பின்னடைவாகும்.
அவரது மரணத்தைஒட்டி அகில இந்திய அளவிலான இரங்கல் கூட்டம் வைஷ்ணவி பிளாஸா அடுக்குமாடிக் குடியிருப்பில் அனுஷ்டிக்கப்பட்டது. அவரது மரணம் குறித்த இரங்கல் செய்தியை தோழர் விப்பின் மகத்தோ முன்மொழிந்தார். அதனை தோழர்கள் சந்திரிகா பிரசாத், ராம்நாராயண் பாஸ்கர் ஆகியோரும் திருவாளர்கள் அபை சவுத்திரி, ஆர்.கே. சர்மா ஆகியோரும் திருமதி அனுராதா அவர்களும் வழிமொழிந்து தங்ளது மறைந்துவிட்ட தலைவருக்கான மரியாதையைச் செலுத்தினர்.
இறுதி மூச்சு வரை உழைக்கும் வர்க்கப் பணியில் தன்னை அர்ப்பணித்த தோழர் ரேகா சின்காவிற்கு சிவப்பு அஞ்சலி
Posted by
மாற்றுக்கருத்து
on 3 நவம்பர், 2009
எழில்மிகு அரங்கில் தியாகத்தின் அடையாளமாம் பகத்சிங்கின் நினைவு தினப் பொதுக் கூட்டம்
Posted by
மாற்றுக்கருத்து
ஆண்டு தோறும் இடைவிடாது சி.டபிள்யு.பி மற்றும் அதன் வெகுஜன அமைப்புகளால் அனுஷ்டிக்கப்பட்டு வரும் பகத்சிங் நினைவுதினம் இந்த ஆண்டு மார்ச் 29-ம் நாள் மதுரை நகருக்கு அருகில் உள்ள சமயநல்லூரில் சிறப்புற அனுஷ்டிக்கப்பட்டது.
சி.டபிள்யு.பி. தோழர் ராமநாதன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த திரு. நாகராஜன், அ.இ.அ.தி.மு.க-வை சேர்ந்த வழக்கறிஞர் திரு. மலையாளம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தோழர் பகத்சிங் ஆகியோருடன் சி.டபிள்யு.பி மற்றும் அதன் வெகுஜன அமைப்புகளான உழைக்கும் மக்கள் போராட்டக்கமிட்டி, பகத்சிங் மாணவர் இளைஞர் கூட்டமைப்பின் தோழர்கள் வரதராஜ் (உழைக்கும் மக்கள் போராட்டக்கமிட்டி), அமெரிக்கன் கல்லூரி மாணவர் திரு. கோபிநாதன் (பகத்சிங் மாணவர் இளைஞர் கூட்டமைப்பு), தோழர் பிரேம்குமார் மற்றும் 'கேளாத செவிகள் கேட்கட்டும்' ஆசிரியர் தோழர் த. சிவக்குமார் ஆகியோர் உரையாற்றினர். சிறப்புரை சி.டபிள்யு.பி. மாநில அமைப்பாளர் தோழர் ஆனந்தன் அவர்களால் ஆற்றப்பட்டது.
தோழர் ராமநாதனின் தலைமையுரைக்குப் பின் முதலில் உரையாற்றிய திராவிடர் கழகப் பொறுப்பாளர் திரு நாகராஜன் தனது உரையில் மாவீரன் என்று அழைக்கப்படும் ஒரே தகுதி படைத்தவர் உலக வரலாற்றிலேயே தியாகி பகத்சிங் ஒருவர்தான் என்று எடுத்துரைத்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் தோழர் பகத்சிங் தனது உரையில் பகத்சிங் எவ்வாறு மாணவர்கள் அரசியலில் ஈடுபட வேண்டும் என்பதை வலியுறுத்தினார் என்பதையும் அத்தனை நெஞ்சுரமும் உறுதியும் படைத்த தியாகியின் இதயம் மென்மையான உணர்வுகளான காதல், அன்பு போன்றவற்றையும் எவ்வாறு சரியாக அணுகி அந்த உன்னதமான மனித குணங்களையும் உயர்த்திப் பிடித்தது என்பதையும் நெகிழ்ச்சியுடன் எடுத்துரைத்தார்.
சி.டபிள்யு.பி. தோழர் பிரேம்குமார் தனது உரையில் சி.டபிள்யு.பி-யும் அதன் வெகுஜன அமைப்புகளும் தொடர்ந்து இடைவிடாது பகத்சிங் நினைவுதினத்தை அனுஷ்டிப்பதற்குக் காரணம் அவர் வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிட்ட அதே வேளையில் எவ்வாறு உழைக்கும் வர்க்கத் தலைமைக்கு அந்தப் போராட்டம் சென்று அது மனிதனை மனிதன் சுரண்டும் அவலத்திற்கே முற்றுப்புள்ளி வைப்பதாக அமையவேண்டும் என்று விரும்பினார் என்பதற்காகவும் ஆகும் என்று கூறினார். இன்று எந்த மாணவர், இளைஞர், மக்கட் பகுதியை சமூக மாற்றத்தைக் கொண்டு வருவதில் முன்னிலை வகிக்கக்கூடிய பகுதி என்று பகத்சிங் கருதினாரோ அந்தப் பகுதியினரிடமும் உலகமயம், வேற்றிட வேலைவாய்ப்பு ஆகியவற்றின் காரணமாக அதிகப் பணம் ஈட்டவேண்டும் என்ற முதலாளித்துவ மனநிலை தோன்றி வளர்ந்து வருவதையும் அவர்களின் சமூக உணர்வு மங்கி மறைந்து கொண்டுள்ளதையும் வேதனையுடன் குறிப்பிட்டார்.
அடுத்து உரையாற்றிய மாணவத் தோழர் திரு. கோபிநாதன் அமெரிக்கன் கல்லூரியின் வளாகம் விலை பேசப்படுவதை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தை நினைவுகூர்ந்தார். துன்பகரமான அப்போராட்டமே பகத்சிங் மாணவர்-இளைஞர் கூட்டமைப்பு என்ற அமைப்பை அமெரிக்கன் கல்லூரி மாணவர்களுக்கு அறிமுகம் செய்த இன்பகரமான பணியையும் செய்தது என்பதை சுவாமி விவேகானந்தரின் வார்த்தைகளான துன்பங்களுக்கும் வாழ்த்துக்கள் இன்பங்களுக்கும் வாழ்த்துக்கள் என்பதை மேற்கோள் காட்டி எடுத்துரைத்தார். மற்ற அமைப்புகள் எல்லாம் தங்களது அரசியல் ஆதாயத்திற்காக அப்போராட்டத்தை அணுகிய வேளையில் எவ்வாறு அந்த அமைப்பு மட்டும் சுயநல நோக்கம் எதுவுமில்லாது அப்போராட்டத்தை ஆதரித்தது என்பதையும் எடுத்துக்கூறினார்.
'கேளாத செவிகள் கேட்கட்டும்' ஆசிரியர் தோழர் த. சிவக்குமார் தனது உரையில் முக்கியமான இரண்டு விசயங்களை மட்டும் வலியுறுத்தினார். அதாவது பகத்சிங் உள்நாட்டு முதலாளித்துவச் சுரண்டல் அபாயம் விடுதலை பெற்றவுடன் இந்தியாவில் தோன்றவிருப்பதை உணர்ந்தவராக இருந்ததோடு மட்டுமின்றி அதனை முறியடிக்கவல்ல ஒரு கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டும் நடைமுறை வேலையிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார் என்பதைச் சுட்டிக் காட்டினார்.
மேலும் கண்ணோட்டம் உன்னதமானதாக இருந்தாலும் நடைமுறையில் சோசலிச ரீதியிலான சமூகம் எப்படி உள்ளது என்பதை அக்கால கட்டத்தில் சோசலிசம் நடைமுறையில் இருந்த ஒரே நாடான சோவியத் யூனியனுக்கு ஒரு நம்பகமான தோழரை அனுப்பி அறிந்து கொள்ளவும் முயன்றார். அதற்காக அவர் வெள்ளை போலீசாரின் வாயைப் பிடுங்கி அதைச் செய்யவல்ல பொருத்தமான தோழரான பிருத்விசிங் என்பவர் குஜராத்தில் இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ளவும் செய்தார்.
சிறையில் இருந்தவாரே தனது தோழர்கள் மூலம் பிருத்வி சிங்-கிற்கு ஆள் அனுப்பி அவரிடம் தனது விருப்பத்தைத் தெரிவிக்கவும் செய்தார். தன்மேல் பகத்சிங் கொண்டிருந்த அபரிமிதமான நம்பிக்கையினால் நெகிழ்ந்து போன பிருத்விசிங் சோவியத் யூனியன் சென்று அங்கு ஒரு பல்கலைக்கழக மாணவராகச் சேர்ந்து சோசலிச நடைமுறை அறிந்து சில ஆண்டுகள் கழித்து திரும்பவும் செய்தார். ஆனால் அவர் திரும்பிய வேளையில் பகத்சிங் தூக்கிலிடப்பட்டு தியாக மரணத்தை தேடிக்கொண்டுவிட்டார்.
இவ்வாறு பகத்சிங் உயர்ந்த லட்சியங்களால் வழிநடத்தப்பட்டவராக மட்டும் இல்லாமல் அவற்றின் நடைமுறையிலும் கண்ணும் கருத்துமாக எவ்வாறு இருந்தார்; அச்சம் என்பது அறவே இல்லாத அவருடைய மனநிலை இன்றுள்ள காவல்துறையினரைக் காட்டிலும் பல மடங்கு திறமை படைத்தவர்களாக இருந்த வெள்ளை காவல்துறையினரிடமிருந்தும் தகவல்களை அறிந்து கொள்ளும் தனித் திறமை பொருந்தியவராக அவரை எவ்வாறு ஆக்கியது என்பதையும் எடுத்துரைத்தார்.
காலத்தின் போதாமையைக் கருத்திற்கொண்டு தோழர் வரதராஜ் பகத்சிங்கின் கருத்துக்களைக் கடைப்பிடிக்கப்படுவதன் அவசியத்தை வலியுறுத்தியதோடு தனது உரையினை ரத்தினச் சுருக்கமாக முடித்துக் கொண்டார்.
தோழர் ஆனந்தனின் சிறப்புரை
இறுதியாக சிறப்புரை ஆற்றிய தோழர் ஆனந்தன் தனது உரையில் பகத்சிங்கை எதற்காக உயர்த்திப் பிடிக்கிறோம்? வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிட்டு என்றோ உயிர்நீத்த அவரை இன்றும் நாம் உயர்த்திப் பிடிப்பதன் காரணம் என்ன? இன்றைய நிலையில் மாமேதை மார்க்ஸ் போன்றவர்களின் கருத்துக்கள் என்றுமில்லாத அளவிற்கு பொருத்தமும் வழிகாட்டும் தன்மையும் கொண்டவையாக உலக அளவில் சிந்தனையாளர்கள் மற்றும் உழைக்கும் மக்களால் பார்க்கப்படும் வேளையில் அதே கருத்துக்களை கொண்டிருந்த பகத்சிங்கை உயர்த்திப் பிடிப்பதன் காரணம் என்ன? என்ற கேள்விகளுக்கான பதிலாக தனது வாதத்தை முன்வைத்தார்.
உலக அரங்கில் இன்றும் எந்த வகையான சர்ச்சைக்கும் இடமின்றி தியாகத்தின் திருவுருவமாய் போற்றப்படும் சே-க்வேரா -வின் தியாகத்திலிருந்து எள்ளளவும் குறையாத தியாக சிந்தையுடன் விளங்கிய பகத்சிங்-கை அவரது தியாகத்திற்காக மட்டுமே நினைவு கூர்ந்தால் கூட அதுவும் சாலப் பொருத்தமுடையதாகத்தான் இருக்கும்.
இருந்தாலும் அதற்காக மட்டும் அவரை நாம் நினைவு கூர்ந்து அவரது நினைவு தினத்தை அனுஷ்டிக்கவில்லை.
இன்று முதலாளித்துவ உலகத்தையே நடுநடுங்கச் செய்து கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடிக்கான காரணம் இந்த முதலாளித்துவப் பொருளாதார முறையே என்று அனைவரும் ஒப்புக் கொள்ளுகின்றனர்.
ஆனால் அக்கருத்தை 150 ஆண்டுகளுக்கு முன்பு வலியுறுத்திக் கூறிய மாமேதை மார்க்ஸின் நூல்களை படித்தறியாமலேயே சோவியத் சோசலிசப் புரட்சியையும் அது குறித்த கருத்துக்களையும் தெரிந்து கொண்டிருந்த அளவிலேயே 1925-ம் ஆண்டு வாக்கிலேயே முதலாளித்துவ அமைப்பு பல தீர்க்க முடியாத சமூகப் பிரச்னைகளை உருவாக்கவல்லது என்பதை அறிந்தவராக பகத்சிங் இருந்தார்.
பகத்சிங் உயர்த்திப் பிடித்த உண்மையான மதச்சார்பின்மைக் கண்ணோட்டம்
தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள இன்றைய நிலையில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி மதச்சார்பின்மை என்பதை தனது முக்கிய முழக்கமாக முன் வைக்கிறது. பல சமரசங்களுக்கும் திரிபுகளுக்கும் ஆட்பட்டு நிலைகுலைந்த நிலையில் காங்கிரஸ் கட்சியால் முன்வைக்கப்படும் அந்த முழக்கத்தை அப்பழுக்கற்ற விதத்தில், உண்மையான மதச்சார்பின்மை மனிதனுக்கு அப்பாற்பட்ட சக்தியை அங்கீகரிக்காமல் இருக்கும் தன்மையிலேயே உள்ளது என்ற அடிப்படையில் உயர்த்திப் பிடித்தவர் பகத்சிங் ஆவார்.
மார்க்ஸின் மதம் குறித்த கருத்தான மதம் இதயமற்ற இந்த உலகின் இதயமாக உள்ளது; ஆன்மாவற்ற இந்த சமூக அமைப்பின் ஆன்மாவாக மக்களை பார்க்கச் செய்கிறது. அது மக்களை மயக்கத்தில் ஆழ்த்தி வைக்கும் அபினி செய்யும் வேலையை செய்கிறது என்ற கருத்தினை ஒத்த கருத்தினை 'நான் ஏன் நாத்திகவாதி' என்ற தனது புகழ் பெற்ற கட்டுரையில் உயர்த்திப் பிடித்தவர் பகத்சிங். அவர் இன்று மக்களை வாட்டிவதைக்கும் வகுப்புவாத ஜாதிய பிரச்னைகளுக்கு எதிராக காந்தியவாத சமரசத்திலிருந்து அடிப்படையில் விலகி நின்ற ஒரு உயர்ந்த மக்கள் ஒற்றுமைக் கண்ணோட்டத்தை உயர்த்திப் பிடித்தார்.
இவ்வாறு இன்று நாம் சந்தித்துக் கொண்டிருக்கும் முதலாளித்துவச் சுரண்டலின் விளைவான பொருளாதார நெருக்கடி, மதச்சார்பின்மை, வகுப்புவாத எதிர்ப்பு, ஜாதிய ஒழிப்பு ஆகியவற்றை தன்னகத்தே கொண்டு இன்றும் சமூகத்திற்கு வழிகாட்ட வல்லதான கருத்துக்களை பகத்சிங் கொண்டிருந்தார். இவையே பகத்சிங்கை நாம் நினைவு கூறுவதற்கும் அவரை உயர்த்திப் பிடிப்பதற்குமான முழு முதற்காரணங்களாகும்.
பகத்சிங்கின் கருத்து வேர்களே உண்மையான கம்யூனிஸ்டுகளை உருவாக்கவல்லவை
இந்திய மண்ணில் சுயசிந்தனையுடன் மக்களின் பிரச்னைகளை அலசி ஆராய்ந்து பார்த்து அத்தனை இளம் வயதில் அதற்கான தீர்வு கம்யூனிசமே என்பதை உணர்ந்து அதன் நடைமுறைக்காக பாடுபட்ட ஒரு மாபெரும் வழிகாட்டி என்பதாலும் இந்திய மண்ணில் அவரது கருத்துக்களை வேரெனப்பற்றி ஒரு உண்மையான கம்யூனிஸ்ட் இயக்கத்தை வளர்த்தெடுப்பதே- கம்யூனிசம் ஒரு அந்நிய கண்ணோட்டம் என்ற கருத்து அர்த்தமற்ற விதத்தில் பெரிய அளவில் முன் வைக்கப்படும் இன்றைய சூழ்நிலையில் - மிகச் சரியானதாக இருக்கும் என்ற அடிப்படையிலேயே சி.டபிள்யு.பி. பகத்சிங்-கை நினைவு கூர்கிறது.
வளர்க்கப்படும் பாஸிசம் - தகர்க்கப்படும் தார்மீக முதுகெலும்பு
இன்று ஒருபுறம் இந்திய ஆளும் வர்க்கத்தின் அரசு எந்திரம் மக்கள் இயக்கங்களின் மேல் பாசிஸ அடக்கு முறையைக் கட்டவிழ்த்து விடுவதையும், மறுபுறம் சமூக மாற்றத்தை முன்னெடுத்துச் செல்லும் தன்மை வாய்ந்த உழைக்கும் வர்க்கத்தின் தார்மீக முதுகெலும்பினை முறிக்கும் விதத்தில் வாக்கிற்கு பணம் கொடுக்கும் போக்கு வளர்ந்து வருவதையும் பகத்சிங்கின் வழித்தோன்றல்களாகிய நாம் தீவிரமாகக் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும்.
அரசின் அடக்குமுறைக்கு நீதிமன்ற வளாகங்களும், கல்லூரி வளாகங்களும் கூட தப்பவில்லை. அதற்கு சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் வழக்கறிஞர் மீது நடந்த தாக்குதல்களும் மதுரை அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் மீது நடந்த தாக்குதல்களுமே சான்று.
ஆளும் முதலாளி வர்க்கம் அன்னிய முதலீட்டைக் கவர்வதற்காக தொழில் அமைதி நாட்டில் முழுமையாக நிலவுவதாகக் காட்ட விரும்புகிறது. அதற்காக தொழிற்சங்கம் அமைக்கும் அடிப்படை உரிமையை நிலைநாட்ட விரும்பிய குர்காவுன் தொழிலாளர்கள் காட்டுத் தனமாக அடித்து நொறுக்கப்பட்டனர்.
அதே பாணியில் தமிழக அரசும் மாணவர்கள் மற்றும் வழக்கறிஞர்களின் போராட்டங்களின் மீது பாசிஸத் தாக்குதல்கள் தொடுப்பதன் மூலம் சுமங்கலித் திட்டம் போன்ற திட்டங்கள் மூலம் சுரண்டப்படும் பெண் பஞ்சாலைத் தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும், அது போன்ற பல்வேறு தரப்பு மக்களின் பிரச்னைகளுக்காகவும் உழைக்கும் வர்க்க இயக்கம் ஏதாவது தோன்றினால் அது அத்தகைய கடும் அடக்குமுறையைச் சந்திக்க நேரும் என்று காட்ட விரும்புகிறது.
இன்று இடதுசாரி, கம்யூனிஸ்ட் என்ற பெயர்களில் நமது நாட்டில் செயல்படும் அமைப்புகள் மக்கள் இயக்கங்களின் பங்கும் பகுதியுமாகத் தேர்தல்களைப் பார்ப்பதை விடுத்து தேர்தல் முறையின் பங்கும் பகுதியுமாகத் தங்களை ஆக்கிக் கொண்டுவிட்டன. அதனால் உழைக்கும் மக்களின் விடுதலைப் பாதையில் நடைபோடும் தன்மை வாய்ந்த இயக்கங்கள் நடத்தத் திராணியற்றவையாக அவை ஆகிவிட்டன. இந்த நிலையைச் சாதகமாக்கிக் கொண்டு அனைத்து வகை மக்கள் போராட்டங்களையும் அடக்கு முறையின் மூலம் எதிர்கொள்பவையாக இன்றைய மத்திய மாநில அரசுகள் ஆகிவிட்டன.
இந்த நிலையை மாற்ற பகத்சிங்கின் பாதையில் நடைபோட்டு மக்கள் இயக்கப்பாதையில் பயணிப்பதே நம் கடமை. அதற்கான உறுதி ஏற்கும் தினமாகவே பகத்சிங் நினைவு தினத்தை நாம் அனுஷ்டிக்கிறோம் என்று கூறி தனது உரையை தோழர் ஆனந்தன் நிறைவு செய்தார்.
பார்த்த மாத்திரத்திலேயே பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோர் செய்த தியாத்தின் உன்னத உயரத்தை உணர்த்தும் வகையில் அற்புதமாக அமைக்கப்பட்டிருந்த பொதுக்கூட்ட மேடையும், உரையாற்றிய அனைவருமே நடைமுறை அரசியலை பேசுகிறோம் என்ற பெயரில் நாய்ச் சண்டை போட்டுக்கொண்டிருக்கும் இக்காலக்கட்டத்தில் தியாக தினத்தின் மாண்பு சிறிதளவும் குறையாத விதத்தில் தரமாக தங்களது வாதங்களை முன்வைத்ததும் கூட்டத்தில் கலந்து கொண்ட நூற்றிற்கும் மேற்பட்ட மக்களையும், ஆங்காங்கே நின்று உரைவீச்சுக்களை செவிமடுத்துக் கொண்டிருந்த மற்ற பலரையும் வெகுவாகக் கவர்ந்தது.
சி.டபிள்யு.பி. தோழர் ராமநாதன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த திரு. நாகராஜன், அ.இ.அ.தி.மு.க-வை சேர்ந்த வழக்கறிஞர் திரு. மலையாளம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தோழர் பகத்சிங் ஆகியோருடன் சி.டபிள்யு.பி மற்றும் அதன் வெகுஜன அமைப்புகளான உழைக்கும் மக்கள் போராட்டக்கமிட்டி, பகத்சிங் மாணவர் இளைஞர் கூட்டமைப்பின் தோழர்கள் வரதராஜ் (உழைக்கும் மக்கள் போராட்டக்கமிட்டி), அமெரிக்கன் கல்லூரி மாணவர் திரு. கோபிநாதன் (பகத்சிங் மாணவர் இளைஞர் கூட்டமைப்பு), தோழர் பிரேம்குமார் மற்றும் 'கேளாத செவிகள் கேட்கட்டும்' ஆசிரியர் தோழர் த. சிவக்குமார் ஆகியோர் உரையாற்றினர். சிறப்புரை சி.டபிள்யு.பி. மாநில அமைப்பாளர் தோழர் ஆனந்தன் அவர்களால் ஆற்றப்பட்டது.
தோழர் ராமநாதனின் தலைமையுரைக்குப் பின் முதலில் உரையாற்றிய திராவிடர் கழகப் பொறுப்பாளர் திரு நாகராஜன் தனது உரையில் மாவீரன் என்று அழைக்கப்படும் ஒரே தகுதி படைத்தவர் உலக வரலாற்றிலேயே தியாகி பகத்சிங் ஒருவர்தான் என்று எடுத்துரைத்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் தோழர் பகத்சிங் தனது உரையில் பகத்சிங் எவ்வாறு மாணவர்கள் அரசியலில் ஈடுபட வேண்டும் என்பதை வலியுறுத்தினார் என்பதையும் அத்தனை நெஞ்சுரமும் உறுதியும் படைத்த தியாகியின் இதயம் மென்மையான உணர்வுகளான காதல், அன்பு போன்றவற்றையும் எவ்வாறு சரியாக அணுகி அந்த உன்னதமான மனித குணங்களையும் உயர்த்திப் பிடித்தது என்பதையும் நெகிழ்ச்சியுடன் எடுத்துரைத்தார்.
சி.டபிள்யு.பி. தோழர் பிரேம்குமார் தனது உரையில் சி.டபிள்யு.பி-யும் அதன் வெகுஜன அமைப்புகளும் தொடர்ந்து இடைவிடாது பகத்சிங் நினைவுதினத்தை அனுஷ்டிப்பதற்குக் காரணம் அவர் வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிட்ட அதே வேளையில் எவ்வாறு உழைக்கும் வர்க்கத் தலைமைக்கு அந்தப் போராட்டம் சென்று அது மனிதனை மனிதன் சுரண்டும் அவலத்திற்கே முற்றுப்புள்ளி வைப்பதாக அமையவேண்டும் என்று விரும்பினார் என்பதற்காகவும் ஆகும் என்று கூறினார். இன்று எந்த மாணவர், இளைஞர், மக்கட் பகுதியை சமூக மாற்றத்தைக் கொண்டு வருவதில் முன்னிலை வகிக்கக்கூடிய பகுதி என்று பகத்சிங் கருதினாரோ அந்தப் பகுதியினரிடமும் உலகமயம், வேற்றிட வேலைவாய்ப்பு ஆகியவற்றின் காரணமாக அதிகப் பணம் ஈட்டவேண்டும் என்ற முதலாளித்துவ மனநிலை தோன்றி வளர்ந்து வருவதையும் அவர்களின் சமூக உணர்வு மங்கி மறைந்து கொண்டுள்ளதையும் வேதனையுடன் குறிப்பிட்டார்.
அடுத்து உரையாற்றிய மாணவத் தோழர் திரு. கோபிநாதன் அமெரிக்கன் கல்லூரியின் வளாகம் விலை பேசப்படுவதை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தை நினைவுகூர்ந்தார். துன்பகரமான அப்போராட்டமே பகத்சிங் மாணவர்-இளைஞர் கூட்டமைப்பு என்ற அமைப்பை அமெரிக்கன் கல்லூரி மாணவர்களுக்கு அறிமுகம் செய்த இன்பகரமான பணியையும் செய்தது என்பதை சுவாமி விவேகானந்தரின் வார்த்தைகளான துன்பங்களுக்கும் வாழ்த்துக்கள் இன்பங்களுக்கும் வாழ்த்துக்கள் என்பதை மேற்கோள் காட்டி எடுத்துரைத்தார். மற்ற அமைப்புகள் எல்லாம் தங்களது அரசியல் ஆதாயத்திற்காக அப்போராட்டத்தை அணுகிய வேளையில் எவ்வாறு அந்த அமைப்பு மட்டும் சுயநல நோக்கம் எதுவுமில்லாது அப்போராட்டத்தை ஆதரித்தது என்பதையும் எடுத்துக்கூறினார்.
'கேளாத செவிகள் கேட்கட்டும்' ஆசிரியர் தோழர் த. சிவக்குமார் தனது உரையில் முக்கியமான இரண்டு விசயங்களை மட்டும் வலியுறுத்தினார். அதாவது பகத்சிங் உள்நாட்டு முதலாளித்துவச் சுரண்டல் அபாயம் விடுதலை பெற்றவுடன் இந்தியாவில் தோன்றவிருப்பதை உணர்ந்தவராக இருந்ததோடு மட்டுமின்றி அதனை முறியடிக்கவல்ல ஒரு கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டும் நடைமுறை வேலையிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார் என்பதைச் சுட்டிக் காட்டினார்.
மேலும் கண்ணோட்டம் உன்னதமானதாக இருந்தாலும் நடைமுறையில் சோசலிச ரீதியிலான சமூகம் எப்படி உள்ளது என்பதை அக்கால கட்டத்தில் சோசலிசம் நடைமுறையில் இருந்த ஒரே நாடான சோவியத் யூனியனுக்கு ஒரு நம்பகமான தோழரை அனுப்பி அறிந்து கொள்ளவும் முயன்றார். அதற்காக அவர் வெள்ளை போலீசாரின் வாயைப் பிடுங்கி அதைச் செய்யவல்ல பொருத்தமான தோழரான பிருத்விசிங் என்பவர் குஜராத்தில் இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ளவும் செய்தார்.
சிறையில் இருந்தவாரே தனது தோழர்கள் மூலம் பிருத்வி சிங்-கிற்கு ஆள் அனுப்பி அவரிடம் தனது விருப்பத்தைத் தெரிவிக்கவும் செய்தார். தன்மேல் பகத்சிங் கொண்டிருந்த அபரிமிதமான நம்பிக்கையினால் நெகிழ்ந்து போன பிருத்விசிங் சோவியத் யூனியன் சென்று அங்கு ஒரு பல்கலைக்கழக மாணவராகச் சேர்ந்து சோசலிச நடைமுறை அறிந்து சில ஆண்டுகள் கழித்து திரும்பவும் செய்தார். ஆனால் அவர் திரும்பிய வேளையில் பகத்சிங் தூக்கிலிடப்பட்டு தியாக மரணத்தை தேடிக்கொண்டுவிட்டார்.
இவ்வாறு பகத்சிங் உயர்ந்த லட்சியங்களால் வழிநடத்தப்பட்டவராக மட்டும் இல்லாமல் அவற்றின் நடைமுறையிலும் கண்ணும் கருத்துமாக எவ்வாறு இருந்தார்; அச்சம் என்பது அறவே இல்லாத அவருடைய மனநிலை இன்றுள்ள காவல்துறையினரைக் காட்டிலும் பல மடங்கு திறமை படைத்தவர்களாக இருந்த வெள்ளை காவல்துறையினரிடமிருந்தும் தகவல்களை அறிந்து கொள்ளும் தனித் திறமை பொருந்தியவராக அவரை எவ்வாறு ஆக்கியது என்பதையும் எடுத்துரைத்தார்.
காலத்தின் போதாமையைக் கருத்திற்கொண்டு தோழர் வரதராஜ் பகத்சிங்கின் கருத்துக்களைக் கடைப்பிடிக்கப்படுவதன் அவசியத்தை வலியுறுத்தியதோடு தனது உரையினை ரத்தினச் சுருக்கமாக முடித்துக் கொண்டார்.
தோழர் ஆனந்தனின் சிறப்புரை
இறுதியாக சிறப்புரை ஆற்றிய தோழர் ஆனந்தன் தனது உரையில் பகத்சிங்கை எதற்காக உயர்த்திப் பிடிக்கிறோம்? வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிட்டு என்றோ உயிர்நீத்த அவரை இன்றும் நாம் உயர்த்திப் பிடிப்பதன் காரணம் என்ன? இன்றைய நிலையில் மாமேதை மார்க்ஸ் போன்றவர்களின் கருத்துக்கள் என்றுமில்லாத அளவிற்கு பொருத்தமும் வழிகாட்டும் தன்மையும் கொண்டவையாக உலக அளவில் சிந்தனையாளர்கள் மற்றும் உழைக்கும் மக்களால் பார்க்கப்படும் வேளையில் அதே கருத்துக்களை கொண்டிருந்த பகத்சிங்கை உயர்த்திப் பிடிப்பதன் காரணம் என்ன? என்ற கேள்விகளுக்கான பதிலாக தனது வாதத்தை முன்வைத்தார்.
உலக அரங்கில் இன்றும் எந்த வகையான சர்ச்சைக்கும் இடமின்றி தியாகத்தின் திருவுருவமாய் போற்றப்படும் சே-க்வேரா -வின் தியாகத்திலிருந்து எள்ளளவும் குறையாத தியாக சிந்தையுடன் விளங்கிய பகத்சிங்-கை அவரது தியாகத்திற்காக மட்டுமே நினைவு கூர்ந்தால் கூட அதுவும் சாலப் பொருத்தமுடையதாகத்தான் இருக்கும்.
இருந்தாலும் அதற்காக மட்டும் அவரை நாம் நினைவு கூர்ந்து அவரது நினைவு தினத்தை அனுஷ்டிக்கவில்லை.
இன்று முதலாளித்துவ உலகத்தையே நடுநடுங்கச் செய்து கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடிக்கான காரணம் இந்த முதலாளித்துவப் பொருளாதார முறையே என்று அனைவரும் ஒப்புக் கொள்ளுகின்றனர்.
ஆனால் அக்கருத்தை 150 ஆண்டுகளுக்கு முன்பு வலியுறுத்திக் கூறிய மாமேதை மார்க்ஸின் நூல்களை படித்தறியாமலேயே சோவியத் சோசலிசப் புரட்சியையும் அது குறித்த கருத்துக்களையும் தெரிந்து கொண்டிருந்த அளவிலேயே 1925-ம் ஆண்டு வாக்கிலேயே முதலாளித்துவ அமைப்பு பல தீர்க்க முடியாத சமூகப் பிரச்னைகளை உருவாக்கவல்லது என்பதை அறிந்தவராக பகத்சிங் இருந்தார்.
பகத்சிங் உயர்த்திப் பிடித்த உண்மையான மதச்சார்பின்மைக் கண்ணோட்டம்
தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள இன்றைய நிலையில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி மதச்சார்பின்மை என்பதை தனது முக்கிய முழக்கமாக முன் வைக்கிறது. பல சமரசங்களுக்கும் திரிபுகளுக்கும் ஆட்பட்டு நிலைகுலைந்த நிலையில் காங்கிரஸ் கட்சியால் முன்வைக்கப்படும் அந்த முழக்கத்தை அப்பழுக்கற்ற விதத்தில், உண்மையான மதச்சார்பின்மை மனிதனுக்கு அப்பாற்பட்ட சக்தியை அங்கீகரிக்காமல் இருக்கும் தன்மையிலேயே உள்ளது என்ற அடிப்படையில் உயர்த்திப் பிடித்தவர் பகத்சிங் ஆவார்.
மார்க்ஸின் மதம் குறித்த கருத்தான மதம் இதயமற்ற இந்த உலகின் இதயமாக உள்ளது; ஆன்மாவற்ற இந்த சமூக அமைப்பின் ஆன்மாவாக மக்களை பார்க்கச் செய்கிறது. அது மக்களை மயக்கத்தில் ஆழ்த்தி வைக்கும் அபினி செய்யும் வேலையை செய்கிறது என்ற கருத்தினை ஒத்த கருத்தினை 'நான் ஏன் நாத்திகவாதி' என்ற தனது புகழ் பெற்ற கட்டுரையில் உயர்த்திப் பிடித்தவர் பகத்சிங். அவர் இன்று மக்களை வாட்டிவதைக்கும் வகுப்புவாத ஜாதிய பிரச்னைகளுக்கு எதிராக காந்தியவாத சமரசத்திலிருந்து அடிப்படையில் விலகி நின்ற ஒரு உயர்ந்த மக்கள் ஒற்றுமைக் கண்ணோட்டத்தை உயர்த்திப் பிடித்தார்.
இவ்வாறு இன்று நாம் சந்தித்துக் கொண்டிருக்கும் முதலாளித்துவச் சுரண்டலின் விளைவான பொருளாதார நெருக்கடி, மதச்சார்பின்மை, வகுப்புவாத எதிர்ப்பு, ஜாதிய ஒழிப்பு ஆகியவற்றை தன்னகத்தே கொண்டு இன்றும் சமூகத்திற்கு வழிகாட்ட வல்லதான கருத்துக்களை பகத்சிங் கொண்டிருந்தார். இவையே பகத்சிங்கை நாம் நினைவு கூறுவதற்கும் அவரை உயர்த்திப் பிடிப்பதற்குமான முழு முதற்காரணங்களாகும்.
பகத்சிங்கின் கருத்து வேர்களே உண்மையான கம்யூனிஸ்டுகளை உருவாக்கவல்லவை
இந்திய மண்ணில் சுயசிந்தனையுடன் மக்களின் பிரச்னைகளை அலசி ஆராய்ந்து பார்த்து அத்தனை இளம் வயதில் அதற்கான தீர்வு கம்யூனிசமே என்பதை உணர்ந்து அதன் நடைமுறைக்காக பாடுபட்ட ஒரு மாபெரும் வழிகாட்டி என்பதாலும் இந்திய மண்ணில் அவரது கருத்துக்களை வேரெனப்பற்றி ஒரு உண்மையான கம்யூனிஸ்ட் இயக்கத்தை வளர்த்தெடுப்பதே- கம்யூனிசம் ஒரு அந்நிய கண்ணோட்டம் என்ற கருத்து அர்த்தமற்ற விதத்தில் பெரிய அளவில் முன் வைக்கப்படும் இன்றைய சூழ்நிலையில் - மிகச் சரியானதாக இருக்கும் என்ற அடிப்படையிலேயே சி.டபிள்யு.பி. பகத்சிங்-கை நினைவு கூர்கிறது.
வளர்க்கப்படும் பாஸிசம் - தகர்க்கப்படும் தார்மீக முதுகெலும்பு
இன்று ஒருபுறம் இந்திய ஆளும் வர்க்கத்தின் அரசு எந்திரம் மக்கள் இயக்கங்களின் மேல் பாசிஸ அடக்கு முறையைக் கட்டவிழ்த்து விடுவதையும், மறுபுறம் சமூக மாற்றத்தை முன்னெடுத்துச் செல்லும் தன்மை வாய்ந்த உழைக்கும் வர்க்கத்தின் தார்மீக முதுகெலும்பினை முறிக்கும் விதத்தில் வாக்கிற்கு பணம் கொடுக்கும் போக்கு வளர்ந்து வருவதையும் பகத்சிங்கின் வழித்தோன்றல்களாகிய நாம் தீவிரமாகக் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும்.
அரசின் அடக்குமுறைக்கு நீதிமன்ற வளாகங்களும், கல்லூரி வளாகங்களும் கூட தப்பவில்லை. அதற்கு சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் வழக்கறிஞர் மீது நடந்த தாக்குதல்களும் மதுரை அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் மீது நடந்த தாக்குதல்களுமே சான்று.
ஆளும் முதலாளி வர்க்கம் அன்னிய முதலீட்டைக் கவர்வதற்காக தொழில் அமைதி நாட்டில் முழுமையாக நிலவுவதாகக் காட்ட விரும்புகிறது. அதற்காக தொழிற்சங்கம் அமைக்கும் அடிப்படை உரிமையை நிலைநாட்ட விரும்பிய குர்காவுன் தொழிலாளர்கள் காட்டுத் தனமாக அடித்து நொறுக்கப்பட்டனர்.
அதே பாணியில் தமிழக அரசும் மாணவர்கள் மற்றும் வழக்கறிஞர்களின் போராட்டங்களின் மீது பாசிஸத் தாக்குதல்கள் தொடுப்பதன் மூலம் சுமங்கலித் திட்டம் போன்ற திட்டங்கள் மூலம் சுரண்டப்படும் பெண் பஞ்சாலைத் தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும், அது போன்ற பல்வேறு தரப்பு மக்களின் பிரச்னைகளுக்காகவும் உழைக்கும் வர்க்க இயக்கம் ஏதாவது தோன்றினால் அது அத்தகைய கடும் அடக்குமுறையைச் சந்திக்க நேரும் என்று காட்ட விரும்புகிறது.
இன்று இடதுசாரி, கம்யூனிஸ்ட் என்ற பெயர்களில் நமது நாட்டில் செயல்படும் அமைப்புகள் மக்கள் இயக்கங்களின் பங்கும் பகுதியுமாகத் தேர்தல்களைப் பார்ப்பதை விடுத்து தேர்தல் முறையின் பங்கும் பகுதியுமாகத் தங்களை ஆக்கிக் கொண்டுவிட்டன. அதனால் உழைக்கும் மக்களின் விடுதலைப் பாதையில் நடைபோடும் தன்மை வாய்ந்த இயக்கங்கள் நடத்தத் திராணியற்றவையாக அவை ஆகிவிட்டன. இந்த நிலையைச் சாதகமாக்கிக் கொண்டு அனைத்து வகை மக்கள் போராட்டங்களையும் அடக்கு முறையின் மூலம் எதிர்கொள்பவையாக இன்றைய மத்திய மாநில அரசுகள் ஆகிவிட்டன.
இந்த நிலையை மாற்ற பகத்சிங்கின் பாதையில் நடைபோட்டு மக்கள் இயக்கப்பாதையில் பயணிப்பதே நம் கடமை. அதற்கான உறுதி ஏற்கும் தினமாகவே பகத்சிங் நினைவு தினத்தை நாம் அனுஷ்டிக்கிறோம் என்று கூறி தனது உரையை தோழர் ஆனந்தன் நிறைவு செய்தார்.
பார்த்த மாத்திரத்திலேயே பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோர் செய்த தியாத்தின் உன்னத உயரத்தை உணர்த்தும் வகையில் அற்புதமாக அமைக்கப்பட்டிருந்த பொதுக்கூட்ட மேடையும், உரையாற்றிய அனைவருமே நடைமுறை அரசியலை பேசுகிறோம் என்ற பெயரில் நாய்ச் சண்டை போட்டுக்கொண்டிருக்கும் இக்காலக்கட்டத்தில் தியாக தினத்தின் மாண்பு சிறிதளவும் குறையாத விதத்தில் தரமாக தங்களது வாதங்களை முன்வைத்ததும் கூட்டத்தில் கலந்து கொண்ட நூற்றிற்கும் மேற்பட்ட மக்களையும், ஆங்காங்கே நின்று உரைவீச்சுக்களை செவிமடுத்துக் கொண்டிருந்த மற்ற பலரையும் வெகுவாகக் கவர்ந்தது.
இலங்கைத் தமிழர் பிரச்னை - ஓர் ஆய்வு (இரண்டாம் பகுதி)
Posted by
மாற்றுக்கருத்து
on 17 செப்டம்பர், 2009
விடுதலைக்குப்பின் இலங்கை அரசு எதிர்கொண்ட கடும் நெருக்கடிகள் அதன் ஒரு விளைவாக தோன்றிய வேலையின்மைப் பிரச்னை ஆகியவற்றிற்கான அமைப்பு ரீதியான காரணத்தை மூடிமறைத்து சிங்கள மக்களின் வாய்ப்புகள் பறிபோவதற்கு உண்மையான காரணம் அங்கு வாழும் ஒப்புநோக்குமிடத்து முன்னேறியதாக தோற்றமளித்த தமிழ் இனத்தைச் சேர்ந்த மக்களே என்ற நாசகரமான எண்ணத்தை சிங்கள மக்களிடையே சிங்கள ஆட்சியாளர்கள் பெரிதாக்கி பரவச் செய்ததே என்பதை கடந்த இதழில் பார்த்தோம்.
பிரிவினையை ஆழப்படுத்திய தரப்படுத்துதல் திட்டம்
அதனை அடிப்படையாகக் கொண்டு உயர்கல்வி பெறுவதிலும் அதைக் கொண்டு வேலைச் சந்தையில் போட்டியிடுவதிலும் தமிழர் எண்ணிக்கையை குறைக்கத் திட்டமிட்டனர். அதாவது சிங்களர்களும் தமிழர் அளவிற்கு முன்னேறுவதற்கு சலுகைகள் வழங்குகிறோம் என்ற அடிப்படையில் தரப்படுத்துதல் என்ற பாரபட்சமான திட்டத்தைக் கொண்டுவந்தனர்.
1972ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்த தரக்கட்டுப்பாடு திட்டத்தின்படி மருத்துவக் கல்வியில் சேர விரும்பும் ஒரு மாணவர் அவர் தமிழராக இருந்தால் 400க்கு 250 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். ஆனால் அவர் சிங்களராக இருந்தால் 229 மதிப்பெண்கள் பெற்றிருந்தாலே போதும். தகுதி அடிப்படையில் 30 சதவீத இடங்கள் மட்டுமே நிரப்பப்படும். 55 சதவீத இடங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்கட் தொகை அடிப்படையில் சிங்கள தமிழ் மக்களிடையே ஒதுக்கீடு செய்யப்பட்டது. மீதமுள்ள 15 சதவீத இடங்கள் கல்வி ரீதியில் பின் தங்கிய மாவட்டங்களுக்கு என்ற அடிப்படையில் ஒதுக்கப்பட்டது. இந்த அடிப்படையில் தமிழ் மாணவர்கள் மிகக் கூடுதல் மதிப்பெண்கள் பெற்றால் கூட அவர்கள் இலங்கையில் உள்ள கல்லூரிகளில் இடம் பிடிக்க முடியாது என்ற நிலை தோன்றியது.
நாட்டை இரண்டாக்கிய ஒற்றை ஆட்சி மொழி திட்டம்
மேலும் நாம் ஏற்கனவே பார்த்த சிங்களம் மட்டுமே ஆட்சிமொழி என்ற கொள்கை அரசியல் சட்டப்பிரிவு 33ன் கீழ் 1956ம் ஆண்டு இலங்கை ஆட்சியாளர்களால் கொண்டுவரப்பட்டது. அதன் பின்னர் தமிழ் மக்களின் கிளர்ச்சிகளைத் தொடர்ந்து 1958ம் ஆண்டு தமிழ் மொழி (விசேச சட்டம்)கொண்டுவரப்பட்டது. அதன்படி தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் தமிழும் ஆட்சி மொழி என அறிவிக்கப்பட்டது. அது சிங்களமே இலங்கையின் ஆட்சி மொழி என்பதைப் பாதிக்காத வகையில் அமல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்பின்னர் 1972ம் ஆண்டில் சிங்களம் ஆட்சி மொழியாக தமிழ் மொழி பெயர்ப்பு வசதியுடன் இருக்கும் என அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் 1978ம் ஆண்டு வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளைத் தவிர்த்து பிற அனைத்துப் பகுதிகளுக்கும் சிங்களமே ஆட்சி மொழி என்றும், ஆங்கிலம் இணைப்பு மொழி என்றும் அறிவிக்கப்பட்து. ஒட்டு மொத்தத்தில் மொழியை மையமாக வைத்து சிங்கள, தமிழ் மக்களிடையே வேற்றுமையைப் பேணும் போக்கு ஆட்சியாளர்களால் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டது.
இந்த இரண்டு நடவடிக்கைகளும் தமிழ் மக்களை நடைமுறை ரீதியாகவும் உணர்வுமட்டத்திலும் பெரிதும் பாதித்தன. வறண்ட பகுதியில் வாழ்ந்து கொண்டு கல்வியறிவின் மூலமாக மட்டுமே தங்களை நிலைநாட்ட முடியும் என்ற நிலையிலிருந்த தமிழ் மக்களுக்கு கல்வி உரிமையையே பறிப்பது என்ற அரசின் நடவடிக்கை கடும் அதிர்ச்சியை தந்தது. மேலும் ஆட்சி மொழிக் கொள்கை உணர்வு ரீதியில் தமிழ் மக்களை மிகப் பெரிதாக பாதித்தது.
கல்விக்காக நாடுவிட்டு நாடு செல்லும் துயரம்
இந்த நிலையில் இலங்கை தமிழ் மக்களில் வசதியுடையவர்கள் தங்களது பிள்ளைகளை கல்விக்காக இந்தியா போன்ற நாடுகளுக்கு அனுப்பினர். தரமான கல்விபெற வேண்டி ஒரு நாட்டைவிட்டு இன்னொரு நாடு செல்வது என்பது இயல்பாகவே எல்லா நாடுகளிலும் காணப்படக் கூடிய ஒரு நடைமுறை, ஆனால் தங்கள் நாட்டிலேயே தரமான கல்வி பெறுவதற்கு ஏற்ற நிறுவனங்கள் இருந்தும்கூட அதே வகை கலை மற்றும் விஞ்ஞான கல்வியைப் பயில்வதற்காக தனது நாட்டைவிட்டு அண்டைநாட்டுக்கு சென்றாக வேண்டும் என்ற அரசு ஏற்படுத்திய நிர்ப்பந்த நிலை அந்த மாணவர் மற்றும் அவர்களின் பெற்றோர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை இயல்பாகவே ஏற்படுத்தியது. அவர்களைத் தவிர பொருளாதார வசதியின்மை காரணமாக படிப்பதற்காக தகுதி இருந்தும் தங்களை ஒத்த சிங்கள மாணவர்களைக் காட்டிலும் கூடுதல் மதிப்பெண்கள் பெற்றிருந்தும் உயர்கல்விக்காக வெளிநாடுகளுக்கும் செல்ல முடியாது கல்வியை இழந்து நிற்கும் மாணவர்களின் மனநிலை இன்னும் எவ்வளவு கொதிப்படைந்ததாக இருக்கும். இச்சூழ்நிலைகளே தமிழ் மக்களிடையேயும் இன உணர்வினைப் பெருமளவு தூண்டியிருந்தது.
தமிழர் விடுதலை முன்னணி
இந்த மோசமான வளர்ச்சிப் போக்குகள் தமிழர் விடுதலை முன்னணி போன்ற அமைப்புகள் உருவாகக் காரணமாக இருந்தன. அந்த அமைப்புகள் அவற்றிற்கு இருந்த பல்வேறு வரையறைகளுக்கு உட்பட்டே இப்பிரச்னையை எடுக்க வேண்டியிருந்தது. அவர்களுக்கு தனிநாடு கோரிக்கையை எழுப்புவதில் பெரும் சிக்கல் இருந்தது. நாடு முழுவதும் விரவிக்கிடந்த தமிழர்களின் நலன் தனிநாடு கோரிக்கையை எடுத்த எடுப்பில் முன்வைப்பதன் மூலம் பாதிக்கப்படும் என்ற சூழ்நிலை அவர்களின் கரங்களைப் பெருமளவு கட்டிப் போட்டது.
அது மட்டுமல்ல தமிழர்களில் வளர்ச்சியடைந்த பகுதியினர் தங்களது தொழில் வாய்ப்புகளுக்கு தமிழர் பகுதிகளோடு இலங்கை போன்ற ஒரு பெரிய சந்தையைக் கொண்ட நாடு இருப்பது அவசியம் என்றும் கருதினர். எனவே தமிழர் விடுதலை முன்னணி கோட்பாடு ரீதியான தேசிய சுயநிர்ணய உரிமை கேள்வியை முன்வைக்காமல் பல சமயங்களில் தங்களுக்கு சலுகை அளிக்க முன்வரும் சிங்கள ஆளும் வர்க்க கட்சிகளுடன் நேரடி அல்லது இலைமறை காய்மறை உறவு வைத்துக் கொள்வதன் மூலமே இப்பிரச்னைகளுக்கான தீர்வினைப் பெற விரும்பின. அந்த அடிப்படையில் ஒரு வரம்பிற்குட்பட்ட சமூக இயக்கத்தை அதுவும் நாடாளுமன்ற அரசியலில் பயன்படும் விதத்திலேயே அவர்கள் கையில் எடுத்தனர்.
அத்தகைய இயக்கங்களுக்கு செவிமடுத்து ஒருபுறம் அரசியலுக்காக இனவேற்றுமையை வளர்த்தாலும் மறுபுறம் அத்தகைய நடவடிக்கை முழு சமூக அமைதியையே பாதிக்கும் அளவிற்கு சென்றுவிடக்கூடாது என்ற அடிப்படையில் தமிழ் அமைப்புகளின் கோரிக்கைகள் சிலவற்றை பரிசீலிக்கும் நிலையிலிருந்த சில சிங்கள ஆட்சியாளர்களுக்கு பல எதிர்ப்புகள் சிங்கள தீவிரவாத அமைப்புகளால் உருவாக்கப்பட்டன.
சிங்கள வெறிவாத புத்தபிக்குகள்
சிங்கள தீவிரவாத அமைப்புகள் என்று கூறும்போது அதில் மிக முக்கியமானது இலங்கை புத்தபிக்குகளின் அமைப்பாகும். இலங்கை புத்த மதத்தில் பெரும் பகுதியினர் புத்த மதத்தின் 'மகாயன' பிரிவை சேர்ந்தவர்கள் அல்ல. அவர்கள் 'ஹினாயன' பிரிவை சேர்ந்தவர்கள். அந்த அடிப்படையில் அவர்கள் சமூக அக்கறை இல்லாதவர்கள்; குறுகிய தன்னலவாத மனநிலை கொண்டவர்கள் .அவர்களைப் பொறுத்தவரை மதரீதியாக தங்களிடம் இருந்து வேறுபட்ட ஹிந்து மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்த தமிழ் மக்களுக்கு வழங்கப்படும் எந்த சலுகையும் ஜீரணிக்க முடியாததாக இருந்தது. உபதேசிக்கும் போது தங்களது மதக்கோட்பாடு 'அஹிம்சை' என்று அவர்கள் கூறிக் கொண்டாலும் அதன்படி பூச்சி புழுக்களுக்குக்கூட தீங்கு செய்யாதவர்களாக தங்களைக் காட்டிக் கொண்டாலும் நடைமுறையில் மனித கொலைகள் கூடச் செய்பவர்களாகவே அவர்கள் இருந்தனர்.
பல தமிழர் விரோத வன்முறை சம்பவங்களில் அவர்கள் முன்னணியில் இருந்தனர். இலங்கையின் ஜனாதிபதிகளிலேயே மிக உயர்ந்தவராக மதிக்கப்படும் திரு.பண்டாரநாயகா புத்தபிக்கு ஒருவராலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது கொலைக்கு திட்டம் தீட்டிக் கொடுத்து அதன் காரணகர்த்தாவாக இருந்தவர் என்ற அடிப்படையில் புத்த மதத்தின் வேறொரு முக்கியமான புத்தத் துறவி ஆயுள்தண்டனை அனுபவித்து வந்தார்.
இது தவிர கொழும்பில் நடைபெற்ற ஒரு தமிழர் மாநாட்டை சீர்குலைக்கும் விதத்தில் மாநாடு நடந்த அரங்கை சுற்றிலும் இளம் புத்தபிக்குகள் பலர் நின்று கொண்டு கல்வீச்சில் ஈடுபட்டு அந்த மாநாட்டையே நடைபெறவியலாமல் செய்த - எந்த மதத்தின் அடிப்படை உணர்விற்கும் ஒத்துவராத செயல் அங்கு புத்தத் துறவிகளால் அரங்கேற்றப்பட்டது.
உலக அளவில் முதலாளித்துவம் மிகவும் பிற்போக்கானதாக ஆகிவிட்ட நிலையில் தோன்றி வளர்ந்த இந்தியா, இலங்கை போன்ற நாடுகளின் முதலாளித்துவ-ஜனநாயகம் அரைவேக்காட்டுத் தன்மை கொண்டதாகவே இருந்தது. மதத்தை அரசியலில் இருந்து பிரிப்பது என்ற ஜனநாயகத்தின் மிக அடிப்படையான கோட்பாடு இந்நாடுகளில் அமுலாகவில்லை.
மக்களின் பின்தங்கிய மனநிலை காரணமாக மதவாத எண்ணப்போக்குகளும் மதப்பிரச்சாரகர்களின் மேல் குருட்டுத்தனமான அபிமானமும் மரியாதையும் மிகுந்தே இருந்தன. இதனை மையமாகக்கொண்டு மதவாதிகள் குறிப்பிடத்தக்க செல்வாக்கினை இவ்விருநாட்டு அரசியல் களத்திலும் செலுத்தினர்; இன்னும் செலுத்திக் கொண்டும் உள்ளனர். இலங்கையின் இனப்பிரச்னை இத்தனை கடுமையாக ஆனதற்கு அந்நாட்டின் புத்த மத நிறுவனமும் ஒரு முக்கிய காரணமாகும்.
இனவெறி பாதையில் இடதுசாரி ஜே.வி.பி.
இது தவிர சில சிங்கள இடதுசாரி தீவிரவாத அமைப்புகளும் தமிழ்விரோத மனநிலையை வளர்த்து வந்தன. அவைகளில் மிக முக்கியமான அமைப்பு ரோகன விஜயவீராவின் ஜே.வி.பி என்று அழைக்கப்படும் "ஜனதா விமுக்தி பெருமனா' என்ற அமைப்பாகும். அந்த அமைப்பினர் புத்த பிக்குகளை போல் அல்லாது வேறு காரணங்களுக்காக தமிழ் விரோத மனநிலையை வளர்த்தனர். ஒருபுறம் தமிழர்களின் அவர்களது மக்கள் தொகை விகிதத்திற்கு அதிகமான வளர்ச்சி சிங்கள இளைஞர்களை குழப்பி அவர்களது மனதில் தமிழ் விரோத எண்ணத்தை உருவாக்குவதற்கு ஜே.வி.பி-யால் பயன்படுத்தப்பட்டது.
அது தவிர தனது அண்டைநாடான இந்தியாவின் மேலாதிக்க மனப்பான்மையும் அதன் செல்வாக்கு மண்டலத்திற்கு இலங்கையைக் கொண்டுவர அது மேற்கொள்ளும் முயற்சிகளும் ஜே.வி.பி அமைப்பினால் கடுமையான வெறுப்புடன் பார்க்கப்பட்டன. அதன் காரணமாக அந்த அமைப்பு குறிப்பாக மலையகத் தமிழர்களை இந்திய ஏகாதிபத்தியத்தின் ஏஜெண்டுகள் என்று பார்த்தது.
ரோகன விஜயவீரா மாஸ்கோ பல்கலைகழகத்தின் மாணவராக இருந்த போதிலும் கம்யூனிஸ்ட அரசியலில் ஈடுபாடு உடையராக தன்னைக் காட்டிக் கொண்ட போதிலும் சேகுவாரோவை தனது ஆதர்ச புரட்சியாளராக அறிவித்துக் கொண்டிருந்தாலும் அவருடைய அரசியல் பக்குவமற்ற பார்வையினை மலையகத் தமிழர்கள் குறித்த அவருடைய அணுகுமுறை கேவலமாக வெளிக்காட்டியது. நிலவிய முதலாளித்துவ அரசியலில் குறுக்குவழியில் அதிகாரத்திற்கு வரவேண்டும் என்பதற்காக அவர் சிங்கள தேசிய வெறி உணர்வினை தனது அமைப்பின் உணர்ச்சிபூர்வ பிரச்சாரங்களின் மூலமாக அதாவது இங்கு சில இடதுசாரி அமைப்புகள் தமிழ் இன உணர்வினை தூண்டும் விதத்தில் தூண்டினார்.
போராளி அமைப்புகளின் உதயம்
இந்த அமைப்புகளின் கடுமையான எதிர்ப்பின் காரணமாகவும் இலங்கையை அடுத்தடுத்து ஆண்ட கட்சிகள் தமிழர் பிரச்னையை ஓரளவேனும் தீர்க்க எடுத்த நடவடிக்கைகள் முடக்கப்பட்டன. இதன் விளைவாக தமிழ் இளைஞர்களின் மனதில் ஒரு கடுமையான வெறுப்பும் விரக்தியும் மேலோங்கி நின்றது. தமிழர் விடுதலை முன்னணி போன்ற நாடாளுமன்றவாத கட்சிகள் கடைபிடித்த சிங்கள ஆளும் வர்க்கத்துடனான சமரசப்போக்கு அவர்களுக்கு உடன்பாடானதாக இல்லை. எனவே அவர்களது குட்டி முதலாளித்துவத் தன்மை வாய்ந்த மனக்கொதிப்பினை உரியவிதத்தில் பிரதிபலித்த பல இளைஞர் அமைப்புகள் உருவாயின.
அவற்றில் மிக முக்கியமானது "பிளாட்' என்ற அமைப்பாகும். அந்த அமைப்புகள் தமிழ் உரிமைக்காக ஒருபுறம் போர்க்குணம் மிக்க போராட்டங்களை நடத்தியதோடு அப்பாவி தமிழ் மக்கள் இராணுவத்தால் தாக்கப்படும் போது அதனை எதிர்த்து தாக்கவும் செய்தனர். இந்த போக்குகள் இதை ஒத்த வேறுபல அமைப்புகள் உருவாவதற்கும் வழிவகுத்தன.
இந்தியா-இலங்கை உறவு
வெளிப்படையாக இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் அத்தனை பெரிய பூசல் நிலவுவது போன்ற சூழ்நிலை தெரியாதிருந்த போதிலும் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் ஒரு விரிசல் என்பது இருந்து கொண்டே இருந்தது. அதற்கு பொருளாதார, அரசியல் ரீதியான காரணங்கள் பல இருந்தன. பொருளாதார ரீதியாக இந்திய அரசு இந்திய ஏகபோகங்களின் வசம் குவிந்திருந்த உபரி மூலதனத்திற்கு முதலீட்டுத்தளம் தேடும் வேலையில் ஈடுபட்டிருந்தது. அந்த மூலதனத்தை அது தென்கிழக்கு ஆசியாவில் தன்நாட்டை சுற்றியிருந்த சிறு நாடுகளில் பெருமளவு செய்வதே சுலபமானது என்று அது கருதியது. அப்படிப்பட்ட நாடுகளில் இலங்கையும் ஒன்றாக இருந்தது. எனவே இலங்கையை அது தனது செல்வாக்கு மண்டலத்திற்குள் வைத்திருக்க விரும்பியது.
ஆனால் சிங்கள மக்களின் மனநிலை இந்திய நாடு, அதன் ஒரு தேசிய இனமாக தமிழர்களைக் கொண்டிருந்ததையும் அதே தமிழ் இனத்தை சேர்ந்த ஒரு குறிப்பிடத்தக்க அளவிலான தங்கள் நாட்டின் மக்கட்பகுதி இருந்ததையும், தங்களது கல்வி ரீதியான வளர்ச்சியோடு கோடிக்கணக்கான தங்கள் இன மக்கள் அருகில் இந்திய நாட்டில் இருக்கிறார்கள் என்பதால் பெருமிதத்துடன் இருப்பதையும் ஒருவித எரிச்சலுடன் பார்த்தது. அத்துடன் நாம் ஏற்கனவே பார்த்தது போல் இலங்கையின் ஜே.வி.பி. போன்ற அமைப்புகள் தமிழர்களை இந்தியா தனது ஏகாதிபத்திய நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு ஒரு சாதனமாக பயன்படுத்துகிறது என்ற எண்ணப்போக்கையும் பரப்பிவிட்டிருந்தன. இதன் விளைவாக இலங்கையின் ஆட்சியாளர்கள் தங்களுக்கு தேவையான பொருளாதார உதவி போன்றவற்றை பெறுவதற்கு இந்தியாவை தவிர்த்த வேறு பிரிட்டன், அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளையே நாடினார்கள்.
போராளி குழுக்களுக்கு இந்தியா அளித்த ஆதரவு
இந்த மனநிலையில் இருந்த இலங்கையை தன் வழிக்குக் கொண்டுவர இந்தியா விரும்பியது. இலங்கையில் தோன்றிய இனப்பிரச்னை அதனுடைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு ஒரு ஏற்ற கருவியாகப் பயன்பட்டது. இந்திய அரசு, இலங்கைத் தமிழரிடையே தோன்றிய போர்க்குணமிக்க அமைப்புகள் பலவற்றிற்கு பல்வேறு வகையான உதவிகளை தனது இந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் செய்யத் தொடங்கியது. தமிழ்நாட்டின் பல இடங்களில் அந்த அமைப்புகள் பயிற்சி முகாம்கள் அமைத்துக்கொள்ள அனுமதி வழங்கியது. அவற்றிற்கு ஆயுத உதவியும் செய்தது.
இதன் விளைவாக இலங்கை அரசிற்கு தோன்றிய சிக்கல் இன்னும் தீவிரமாகியது. இவ்வாறு இந்திய அரசு இலங்கைத் தமிழ் இளைஞர்களுக்கு உதவி வழங்கியதும், ஆயுதங்கள் அளித்ததும் திருமதி. இந்திரா காந்தி அவர்களின் ஆட்சி காலத்தில் பெருமளவு நடைபெற்றன. இது அத்தனை இரகசியமாக செய்யப்படவில்லை. இந்த நடவடிக்கை சிங்கள தமிழ் இன வேறுபாட்டினை இன்னும் அதிகப்படுத்தி சிங்களர் மத்தியில் தமிழ் வெறுப்புணர்வை மேலும் அதிகப்படுத்தியது.
மாகாண கவுன்சில்கள்
இந்த கட்டத்தில் சிங்கள ஆட்சியாளர்களும் சில வகையான தீர்வுகளுக்கு வர உடன்பட்டனர். அதாவது மாவட்ட வாரியான கவுன்சில்கள் அமைத்து அவற்றிற்கு சில அதிகாரங்கள் வழங்க அவை முன்வந்தன. அதன் மூலம் அதிகார பகிர்வு என்பது ஓரளவு தமிழர் வசிக்கும் பகுதிகளிலும் தமிழர்களுக்கும் கிடைக்கும். அது நாம் முழுக்க முழுக்க சிங்களர்களால் ஆளப்படுகிறோம் என்ற தமிழ் மக்கள் கொண்டிருந்த உணர்விலிருந்து அவர்களை மீட்டெடுக்கும் என்று எண்ணினர்.
ஆனால் தமிழர் பகுதிக்கு மட்டும் இந்த அதிகாரப்பகிர்வினை கொடுத்தால் அது தமிழ் ஆதரவு போக்கு என்ற உணர்வினை சிங்கள மக்களிடம் ஏற்படுத்திவிடும் என்பதால் நாடு முழுவதிற்கும் அமலாக்கப்பட்டது. மொத்தத்தில் 12 மாவட்ட கவுன்சில்கள் அமைக்கப்பட்டன. அவற்றில் மூன்று மாவட்ட கவுன்சில்கள் தமிழர் வாழும் பகுதிகளில் இருக்கும் என்று முடிவு செய்யப்பட்டது. இதில் விசித்திரம் என்னவென்றால் தங்களுக்கு மாவட்ட கவுன்சில்கள் வேண்டும் என்று சிங்கள மக்கள் கோராமலேயே அவர்களுக்கு மாவட்ட கவுன்சில் கிடைத்ததுதான்.
இதுபோன்ற கண்துடைப்பு நடவடிக்கைகள் தமிழ் மக்கள் மனதில் அவர்களின் கல்வி உரிமை பறிக்கப்பட்டதாலும் மொழி உணர்வு சிங்களம் மட்டுமே ஆட்சிமொழி என அறிவிக்கப்பட்டதால் பெரிதும் புண்பட்டிருந்ததாலும் ஏற்பட்டிருந்த காயங்களுக்கு போதிய மருந்தாய் இல்லை. எனவே போர்க்குணமிக்க இளைஞர் நடவடிக்கைகள் தமிழ் பகுதிகளில் மென்மேலும் அதிகரித்தன. இந்த நடவடிக்கைகளை இராணுவ ரீதியாக எதிர்கொள்வதற்கு அரசிற்கு பெரும் இராணுவ செலவு ஏற்பட்டது. அதனால் பணவீக்கமும் விலைஉயர்வும் இலங்கையின் பொருளாதாரத்தை வாட்டி வதைக்கத் தொடங்கின.
கருப்பு ஜீலை
இந்நிலை ஒட்டு மொத்தமாக மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை இலங்கையின் ஆட்சியாளர்கள் மேல் தோற்றுவித்தது. மக்கள் ஏறக்குறைய வெடித்துக் கிளம்பும் கிளர்ச்சி மனநிலையுடன் இருந்தனர். இந்நிலையில்தான் இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய கோரமான கருப்பு ஜுலை என அழைக்கப்படும் ஜுலை 23 - 1983 சம்பவங்கள் ஜெயவர்தனா அரசால் திட்டமிட்டு மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காகவும் அவர்களுக்குள் இன பிளவினையும் வெறுப்பையும் ஏற்படுத்தும் நோக்கத்தோடும் தூண்டிவிடப்பட்டன.
அன்று யாழ்ப்பான நகருக்கு வெளியே ரோந்து சென்று கொண்டிருந்த இலங்கை இராணுவத்தின் ஜீப் ஒன்றில் குண்டு வெடித்ததில் இரண்டு சிங்கள ராணுவ வீரர்களுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன. அப்போது அந்த ஜீப்பிற்குப் பின்னால் வந்து கொண்டிருந்த ராணுவ வாகனங்களில் வந்த ராணுவ வீரர்கள் வாகனத்திலிருந்து இறங்கி குண்டு வெடித்ததற்கு காரணமானவர்களைத் தேடிய போது எல்.டி.டி.ஈ அமைப்பினருக்கும் அவர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. அதில் 13 சிங்கள , ராணுவ வீரர்களும் ராணுவ அதிகாரிகளும், விடுதலைப் புலிகள் சிலரும் உயிரிழந்தனர்.
இத்தாக்குதல் எல்.டி.டி.ஈ தளபதி கிட்டுவால் நடத்தப்பட்டது. உயிரிழந்த சிங்கள ராணுவ வீரர்களின் உடலைத் தகனம் செய்வதற்காக கொழும்பிற்குக் கொண்டு சென்று அங்கு மக்களின் பார்வைக்கு அவற்றை வைத்து அப்போது ஆட்சியிலிருந்த ஜெயவர்தனே தலைமையிலான யு.என்.பி அரசாங்கம் தமிழ் மக்கள் மீது கொலை வெறித்தாக்குதலைக் கட்டவிழ்த்துவிட்டது. தலைநகர் கொழும்பில் தொடங்கிய இத்தாக்குதல் படிப்படியாக கல்லி, மாதரை, கம்பலா, நாவலப்பிட்டி, புசல்வா, கண்டி, நுவரேலியா, பதுல்லா, அனுராதபுரம் என அனைத்து இடங்களுக்கும் பரவியது. பல தமிழருக்குச் சொந்தமான வீடுகளும், வியாபார நிறுவனங்களும் தீக்கிரையாக்கப்பட்டன. வாகனங்களில் பயணம் செய்தவர்கள் வாகனங்களோடு சேர்த்து வைத்துக் கொளுத்தப்பட்டனர்.
இதன் தொடர்ச்சியாக வெளிக்கடைச் சிறையில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடைக் காவல் கைதிகளாக இருந்த 53 தமிழர்கள் சிங்களக் கைதிகளால் கொலையுண்டனர். தமிழ் கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த அறைகளின் சாவிகளை எளிதில் சிங்களக் கைதிகள் எடுக்கும் வண்ணம் சிறைக்காவலர்கள் வைத்திருந்து தாக்குதலுக்கு உதவினர். நாடுமுழுவதும் நடந்த தாக்குதல் அனைத்தையும் காவல்துறை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. ஆளும் யு.என்.பி. கட்சியினர் கலவரக்காரர்களோடு கைகோர்த்துச் செயல்பட்டனர். ஒட்டு மொத்தத்தில் இக்கலவரத்தில் 3000 பேர்வரை உயிரிழந்ததாக அதிகார பூர்வமற்ற தகவல்கள் கூறின. 18000 வீடுகளுக்கு மேல் சேதமடைந்தன. தீக்கிரையாக்கப்பட்ட வீடுகளில் பற்றி எரிந்த தீயை அணைக்க வந்த தீயணைப்பு வாகனங்களும் கலவரக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டன.
ஜீலை 23 அன்று தொடங்கிய கலவரத்தை 29ம் தேதி வரை முழுவீச்சில் நடக்க அனுமதித்துவிட்டு 29ம் தேதியன்று கலவரத்தைக் கட்டுப்படுத்த என்று துப்பாக்கிச் சூடு ஒன்றினை நடத்தி கலவரத்தை அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது. அத்துப்பாக்கிச் சூட்டில் 15 சிங்கள கலவரக்காரர்கள் கொல்லப்பட்டனர். சிங்கள வெறியர்கள் இத்தகைய மிருகத்தணத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது தாக்குதலுக்கு ஆளாகி ஒளிய இடமின்றி அலைந்த பல தமிழர்களுக்கு சாதாரண சிங்கள மக்கள் பலரும், முஸ்லீம் குடிமக்களும் புகலிடம் தந்து காப்பாற்றினர்.
ஆயிரக்கணக்கில் இக்கலவரத்தில் தமிழ் மக்கள் கொலையுண்டதோடு அவர்களின் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள உடைமைகளும் சூறையாடவும், களவாடவும்பட்டன. பல லட்சகணக்கான மக்கள் அரசு முகாம்களில் தஞ்சமடைந்தனர், லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்தியாவிற்கு அகதிகளாக வந்து குவிந்தனர்.
இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்யாமல் வைத்திருந்து அதனை கொழும்பிற்கு கொண்டு சென்று மக்களின் பார்வைக்கு வைத்து அதன்மூலம் தமிழ் எதிர்ப்பு வெறி உணர்வினை எவ்வளவு தூரம் தூண்ட முடியுமோ அவ்வளவு தூரம் தூண்டி இலங்கை வரலாற்றின் களங்கமாய் இன்றும் என்றும் விளங்கப்போகும் இரத்தக்களரியை சிங்கள வெறிவாத அமைப்புகளின் துணையோடு இலங்கை ஜனாதிபதி ஜெயவர்தனே கிளப்பிவிட்டார்.
இந்தியா, இலங்கை தமிழ் இளைஞர்களுக்கு முகாம்கள் அமைக்கவும் இராணுவ பயிற்சி பெறவும் அனுமதி அளித்த வேளைகளில்கூட தமிழ்நாட்டின் சாதாரண மக்கள் இலங்கை தமிழர் பிரச்னை பற்றியோ அங்கு நடந்துவரும் இன ஒடுக்குமுறை அதற்கு எதிரான போராட்டம் ஆகியவை குறித்தோ பெரிதும் அறியாதவர்களாகவே இருந்தனர். ஆனால் 1983ல் இலங்கையில் அரசின் திட்டமிட்ட சதியினால் கட்டவிழ்த்துவிடப்பட்ட தமிழர் மீதான வன்முறை முன்னெப்போதும் கண்டிராத அளவில் ஒரு சகோதரத்துவ உணர்வினை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது.
தமிழக மக்களின் சகோதரத்துவ எழுச்சி
இலங்கை தமிழருக்கு ஆதரவாக செயல்பட்ட தமிழ் அமைப்புகளுக்கு நன்கொடைகள் குவிந்தன. இலங்கை தமிழ் அமைப்புகள் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கண்காட்சிகள் நடத்தி இலங்கை தமிழ் மக்களின் அவல நிலையினை தமிழ்நாட்டு மக்களிடம் கொண்டுவந்தன. மறைந்த திரு. ஆண்டன் பாலசிங்கம் போன்றவர்கள் இலங்கை தமிழர் போராட்டத்தினை மார்க்சிய அடிப்படையிலும் விளக்கிக் கூறினர். அயர்லாந்து விடுதலை இயக்கத்தை மார்க்ஸ் ஆதரித்து எழுதியது இலங்கை தமிழர் போராட்டத்திற்கு ஆதரவாக மேற்கோளாகக் காட்டப்பட்டது. இக்கால கட்டத்தில்தான் இலங்கை தமிழர் விடுதலை எழுச்சியின் மிக ஆக்கபூர்வமான தோற்றம் பொலிவுடன் உலகெங்கிலும் தூக்கி நிறுத்தப்பட்டது.
இலங்கை அரசியல் வரலாற்றிலும் இக்காலகட்டம் ஒரு மிக முக்கிய திருப்பு முனையாக இருந்தது. அதாவது அதுவரை பிளாட், டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற ஆயுதம் தாங்கிய அமைப்புகள் டி.யு.எல்.எப் என்ற ஆயுதமேந்தாத தமிழ் ஆதரவு அரசியல் இயக்கத்தோடு எத்தனை முரண்பாடுகள் இருந்தாலும் அவற்றை ஆயுதம் தாங்கிய பூசல்களின் மூலமாக வெளிகாட்டாமல் செயல்பட்டுவந்தன. ஆனால் 1983 கலவரங்களுக்கு பின்பு தமிழர் போராட்டத்தின் தலைமை எல்.டி.டி.ஈ அமைப்பின் கரங்களுக்கு பிரதானமாக சென்றுவிட்டது. அதாவது இன்னும் சரியாக கூறுவதானால் இயக்கத்தின் தலைமை எல்.டி.டி.ஈ அமைப்பின் துணிச்சல்மிக்க ஆயுத நடவடிக்கைகளால் தட்டிபறிக்கப்பட்டது.
மக்கள் இயக்க பின்னணி இல்லாமல் உருவான எல்.டி.டி.ஈ.
எந்த ஒரு நாட்டிலும் எந்தவொரு ஆயுதம் தாங்கிய கிளர்ச்சியும் அதனால் பயன்பெரும் மக்கள் மத்தியில் வேரூன்றியுள்ள - பரந்துபட்ட மக்களின் போராட்ட வலிமையினைப் பறைசாற்றவல்ல- இயக்கங்களின் பின்னணியிலேயே நடைபெற்றுள்ளன. ஆனால் இலங்கையை பொறுத்தவரை எல்.டி.டி.ஈ தலைமை இலங்கை தமிழ்மக்களின் போராட்டத்தில் தலைஎடுத்த நாள் முதற்கொண்டு சாதாரண தமிழ் மக்களின் ஒற்றுமையினை சாத்வீக முறையில் இயக்கங்கள் மூலம் பறைசாற்றும் போக்கு படிப்படியாக மட்டுபடுத்தப்பட்டது. நாளடைவில் அது அறவே இல்லாமலும் போய்விட்டது.
இதற்கிடையில் இந்திய அரசின் ஆதரவோடும் இந்திய தமிழ்மக்களின் மாபெரும் தார்மீக ஒத்துழைப்போடும் இலங்கை அரசை எல்.டி.டி.ஈ-யின் இராணுவ நடவடிக்கைகள் ஆட்டம்காணச் செய்தன. எங்கே தனது ஒட்டுமொத்த செல்லுபடித்தன்மையும் நிலைகுலைந்துவிடுமோ என்று எண்ணிய இலங்கை ஆட்சியாளர்களும் அவர்களின் தலைவர் ஜே.ஆர்.ஜெயவர்தனேயும் இப்பிரச்னையில் தலையிட்டு இதன் தீர்வுக்கு இராணுவ, பொருளாதார ரீதியாக உதவக்கோரி இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு படைஎடுக்கத் தொடங்கினர். ஆனால் ஜெயவர்தனே எதிர்பார்த்த ஒத்துழைப்பு அந்நாடுகளில் இருந்து அவருக்கு கிட்டவில்லை.
அந்நாடுகள் அவை முதலாளித்துவ ஏகாதிபத்திய அமைப்புகளாக இருப்பதால் அந்தந்த நாடுகளின் ஏகாதிபத்திய முதலாளித்துவ நலன்களை மனதிற்கொண்டே செயல்படுபவைகளாக இருந்தன. அதாவது இலங்கையை போன்ற ஒரு மிகச்சிறு சந்தை வளத்தை கொண்டுள்ள நாட்டுடன் உறவை மேம்படுத்துவதற்காக இந்தியா போன்ற மிகப்பெரும் சந்தைவளம் கொண்ட முதலாளித்துவ ரீதியில் ஒரு பெரும் பொருளாதார சக்தியாக உருவாகி வளர்ந்துவருகிற நாட்டுடன் ஒரு உரசலை ஏற்படுத்திக் கொள்ள அந்நாடுகள் விரும்பவில்லை. எனவே அந்நாடுகள் இலங்கை ஆட்சியாளர்களை இந்தியா பக்கம் இப்பிரச்னைக்கான தீர்வைக்கோரி அணுகுமாறு தள்ளின. இந்தியாமீது மனப்பூர்வமான எந்த உறவையும் கொண்டிருக்க விரும்பாதவராக இருந்த போதிலும் வேறுவழியின்றி இந்தியாவை அணுக வேண்டிய நிர்ப்பந்தம் இலங்கை ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதியான ஜெயவர்த்தனேக்கு இதனால் ஏற்பட்டது.
வேறுவழியின்றி இந்தியாவை அணுகிய ஜெயவர்த்தனே
இதனைத் தொடர்ந்து இலங்கை ஆட்சியாளர்கள் இந்தியாவை அணுகியதன் மூலம் உருவானதே இந்திய-இலங்கை ஒப்பந்தம் ஆகும். இதன்படி விடுதலைப் புலிகள் தங்களது ஆயுதங்களை இந்திய அமைதிப்படையிடம் ஒப்படைக்க வேண்டும். கூடுதல் அதிகாரம் கொண்ட மாகாண கவுன்சில்கள் யாழ்ப்பாணம் மற்றும் இலங்கையின் கிழக்கு பகுதியான திரிகோணமலை, பாட்டிகோலா ஆகிய நகர்களை உள்ளடக்கிய பகுதிகளில் ஏற்படுத்தப்படும். தமிழ் பிரதேசம் அனைத்திற்குமான மாகாண கவுன்சிலுடன் இணைந்திருப்பதா? இல்லையா? என்பது ஒரு வாக்கெடுப்பின் மூலம் கிழக்குப் பகுதியில் முடிவு செய்யப்படும். சிங்களத்துடன் கூட தமிழும் ஆட்சி மொழியாக நீடிக்கும். ஒரே பிரதேசமாக திகழ்வதா இல்லையா என்பதை மையமாக வைத்து நடைபெறும் பொது வாக்கெடுப்பு இந்தியாவின் மேற்பார்வையின் கீழ் நடைபெறும் இது போன்றவை இந்த இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் மிக முக்கிய சரத்துக்களாகும்.
இந்த ஒப்பந்தத்தை டெல்லியில் வைத்து பிரபாகரனை ஏற்றுக்கொள்ளச் செய்த பின்னர் இந்தியா தனது துருப்புக்களை இலங்கைக்கு அனுப்பியது. இந்திய அரசின் பார்வையில் விடுதலைப் புலிகள் வைத்திருந்த ஆயுதங்கள் பலவும் அவர்களால் வழங்கப்பட்டவையே என்ற எண்ணமே இருந்தது. ஆனால் விடுதலைப்புலியினரோ உலக அளவில் தோன்றிவிட்ட பொதுச் சந்தையிலிருந்து பல ஆயுதங்களை வாங்கியிருந்தனர். எனவே இந்திய அமைதிப்படை வசம் அவர்கள் ஒப்படைத்த ஆயுதங்களைக் காட்டிலும் அதிகமான ஆயுதங்கள் விடுதலைப்புலிகளின் கைவசம் இருந்தன.
டெல்லியில் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை பிரபாகரன் ஏற்றுக் கொண்டார் என்று முன்வைக்கப்பட்ட கருத்துக்கு மாறாக யாழ்ப்பாணம் சென்றதும் ஒரு மிகப்பெரும் மக்கள் கூட்டத்தைக் கூட்டி இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் தனக்கு இருக்கக்கூடிய சந்தேகங்களை வெளிப்படுத்தி இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதற்கு பிரபாகரன் பிள்ளையார்சுழி போட்டார்.
சிங்களர்-தமிழர் இருவராலும் ஆக்கிரமிப்பு படை என்று பார்க்கப்பட்ட இந்திய அமைதிப்படை
இதே சமயத்தில் இப்படிப்பட்ட ஒரு நிர்ப்பந்த நிலையை உருவாக்கி தனது மேலாதிக்கப் போக்கை நிலைநாட்டும் ஒரு ஒப்பந்தத்தை இலங்கையை தன்னுடன் செய்து கொள்ள செய்ததற்கு சிங்கள மக்களிடையே மட்டுமல்ல சிங்கள ஆட்சியாளரான பிரேமதாசாவிடமும் கடும் வெறுப்பும் எதிர்ப்பும் ஏற்பட்டன. அச்சமயத்தில் பிரமதாசா இந்திய அமைதிப்படையை எதிர்த்து போரிட விடுதலைப்புலிகளுக்கு உதவி செய்தார்.
இந்திய அமைதிப்படை தமிழர்-சிங்களர் என்ற பாகுபாடு இன்றி ஒட்டுமொத்த இலங்கை மக்கள் அனைவராலும் ஒரு ஆக்கிரமிப்பு படை என்றே பார்க்கப்பட்டது. வழக்கமாக அனைத்து முதலாளித்துவ அரசுகளும் பராமரிக்கும் இராணுவங்கள் எத்தகைய மனநிலையோடு செயல்படுமோ அத்தகைய மனநிலையுடனேயே இந்திய இராணுவமும் இலங்கையில் செயல்பட்டது. ஒருபுறம் அதன் செயல்பாடு குறித்து பல புகார்கள் எழுந்தன.
மறுபுறம் அதற்கு தலைமை ஏற்ற இந்திய இராணுவ தளபதிகள் ஒரு கையையும் காலையும் கட்டிக்கொண்டு சண்டையிடுவது போன்ற ஒரு சண்டையில் தாங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளோம் என்று கூறினர். அதாவது பொது மக்களுக்கு தீங்கெதுவும் இழைக்க கூடாது என்று பொதுவாக இந்திய அமைதிப்படையினருக்கு கொடுக்கப்பட்டிருந்த அறிவுரை குறித்தே அவர் அவ்வாறு கூறினார். இந்த நிலையில் இந்திய அமைதிப் படை அங்கு எதற்காக அனுப்பப்பட்டதோ அந்த நோக்கத்தை அதனால் நிறைவேற்ற முடியவில்லை.
இங்கு தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக உண்மையிலேயே செயல்பட்ட அமைப்புகளும் அதனை தங்களது தேர்தல் அரசியல் ஆதாயத்திற்காக ஆதரித்தவர்களும் பல்வேறு பக்குவமற்ற கோரிக்கைகளை இந்த விசயத்தில் முன் வைத்து வந்தனர். அவர்கள் பலரின் கோரிக்கை இந்தியா-இலங்கைப் பிரச்னையில் தலையிட்டு தீர்வுகாண வேண்டும் என்பதில் தொடங்கி தமிழீழத்தை அமைத்துக் கொடுப்பதற்காக இந்தியா தனது இராணுவத்தையே அனுப்ப வேண்டும் என்பது வரை சென்றது.
ஆனால் இந்தியா மட்டுமல்ல எந்தவொரு முதலாளித்துவ நாடும் அது பிறநாடுகளுடன் கொண்டுள்ள உறவுகளை ஒரு குறிப்பிட்ட எண்ணத்தை மனதிற்கொண்டே பேணவும் பராமரிக்கவும் செய்யும். அது தன்னாட்டு முதலாளிகளின் பொருட்கள் விற்பனையாவது மற்றும் அதன் மூலதனம் அங்கு முதலீடு செய்யப்படுவது என்ற நோக்கினைக் கொண்டதாகவே அடிப்படையில் இருக்கும். இந்த அடிப்படை புரியாததாலோ அல்லது புரிந்திருந்தும் அரசியல் ஆதாயம் கருதி வெளிப்படுத்தாமலோ தமிழகத்தில் செயல்பட்ட அனைத்து தமிழ் ஈழ ஆதரவு அமைப்புகளும் இந்தியாவில் முகாம்கள் அமைத்து செயல்பட தமிழ் ஈழ அமைப்புகளுக்கு இந்திய அரசு அனுமதி கொடுத்தபோது அகமகிழ்ந்தன. அடுத்து இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்று கோரின.
இந்தியஇலங்கை ஒப்பந்தத்தின்படி இந்திய இராணுவம் இலங்கைக்கு அனுப்பப்பட்டது. ஆனால் அது சிங்கள இராணுவத்துடன் போரிட்டு தமிழ் ஈழத்தை அமைத்துக் கொடுப்பதற்காக அனுப்பப்படவில்லை. மாறாக அது அங்கு செயல்பட்ட தமிழீழ ஆயுதம் தாங்கிய குழுக்களிடம் இருந்து ஆயுதங்களை பறிக்கவே அனுப்பப்பட்டது. இந்த நிலையில் முதலில் சிலகாலம் வாயடைத்துப்போயிருந்த தமிழக மக்களிடம் சிறிது காலம் கழித்து ஐ.பி.கே.எப்ற்கு எதிரான ஒருவகை எதிர்ப்பும் தலைதூக்கத் தொடங்கியது. இந்நிலையில் அப்போது ஆட்சியில் இருந்த தமிழக முதல்வரின் வேண்டுகோளுக்கு இணங்க இந்திய அமைதிப்படை தனது நோக்கத்தை நிறைவேற்றாமல் நாடு திரும்ப வேண்டிய நிலை அதற்கு ஏற்பட்டது. இந்திய-இலங்கை ஒப்பந்தமும் நிறைவேற்றப்படவில்லை.
சூழ்நிலை இத்தனை நெருக்கடி சூழ்ந்ததாக ஆன நிலையில் விடுதலைப்புலிகளைத் தவிர தமிழ் ஈழத்திற்கான போராட்டக்களத்தில் யாரும் இல்லை என்றநிலை படிப்படியாக விடுதலைப்புலிகளால் ஏற்படுத்தப்பட்டது. தமிழ் விடுதலை முன்னணியும் இலங்கை ஆட்சியாளர்களை சார்ந்து நின்று அவர்களில் ஒரு பிரிவினர் மாற்றி மற்றொரு பிரிவினரை மாறிமாறி ஆதரித்து சில சலுகைகளை கூடுதலாகப் பெறுவதில் ஆர்வமுள்ளதாக இருந்ததேயன்றி அதனால் சரியான தருணங்களைக்கூட பயன்படுத்த முடியவில்லை.
தருணங்களைத் தவறவிட்ட விடுதலை முன்னணி
இலங்கையின் ஆளும்கட்சி தவிர பிற அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரு தேர்தலை பகிஷ்கரித்த சமயத்தில் தமிழர் விடுதலை முன்னணி மட்டும் அத் தேர்தலில் பங்கேற்றது. அத்தேர்தலில் கிழக்குப் பகுதியில் வாழ்ந்த சிங்கள மக்கள் அங்கு போட்டியிட்ட தமிழ் வேட்பாளர்களுக்கு ஏகோபித்து வாக்களித்தனர். அது மட்டுமின்றி மாகாண சுயாட்சி பெறும் விதத்தில் சிரிமாவோ பண்டாரநாயகா கொண்டுவந்த வடக்குப் பகுதியையும் கிழக்குப் பகுதியையும் ஒருங்கிணைக்கும் திட்டத்திற்கு ஆதரவாக அது அணிதிரண்டிருக்கலாம். அதன் மூலம் சாதாரண சிங்கள மக்கள் மற்றும் அதன் ஒரு பெரும் அரசியல் கட்சி ஆகியவற்றுடன் இணைந்து தங்களின் அடிப்படை உரிமைகளை வென்றெடுத்திருக்கலாம். அப்போது அதை செய்ய டி.யு.எல்.எப். தலைவர்கள் தவறிவிட்டார்கள். விடுதலைப் புலிகளின் தலைமை நிலைநாட்டப்பட்டதற்கு பின்பு அதன் பிரமிக்கத்தகுந்த வெற்றிகளால் பரவசம் அடைந்த தமிழ் மக்களும் இந்த தமிழர் விடுதலை முன்னணி போன்ற அமைப்புகளைக் கண்டுகொள்ளவில்லை.
விடுதலைப் புலிகளிடம் தோன்றிய கோளாறுகள்
இந்த நிலையில் அதிகாரம் முழுவதும் தங்களது கரங்களிலேயே இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் தமிழ் ஈழத்திற்காக போரிட்ட பல குழுக்களின் தலைவர்களை கொலை செய்து அவர்களின் அமைப்புகளை நிர்மூலமாக்கும் வேலையை விடுதலைப் புலிகள் அமைப்பு செய்யலாயிற்று. இக்காலகட்டத்தில் யாழ்ப்பாணம் முழுவதையும் விடுதலைப்புலிகள் தங்கள் கைவசம் வைத்திருந்தனர். ஆனையிரவைத்தாண்டி இலங்கை இராணுவமும் அதன் நிர்வாகமும் நுழைய முடியாத ஒரு சூழ்நிலை உருவாக்கப்பட்டது.
போருக்கு ஆகும் செலவுகளை ஈடுகட்ட யாழ்ப்பாணப்பகுதியின் வசதிபடைத்த மக்களிடம் பெரும் தொகைகள் வசூலிக்கப்பட்டன. பொதுவாக மக்கள் இயக்கப்பின்னணி தொடர்ச்சியாக இல்லாது ஆயுதப் போராட்டத்தை மட்டும் நம்பியிருக்கும் அமைப்புகளிடம் தோன்றும் கோளாறுகள் பல விடுதலைப்புலிகளிடம் தோன்ற ஆரம்பித்தன. குருட்டுத்தனமான சிங்கள எதிர்ப்பு வெறியினைப் பரப்பி அதன் மூலம் அனைத்து சாதாரண அப்பாவி சிங்கள மக்களையும் தமிழர்களின் எதிரிகளாகப் பாவிக்கச் செய்வது, அவ்வப்போது தற்கொலைப் படைத் தாக்குதல்களால் அப்பாவி சிங்கள மக்களின் மரணத்திற்கு வழிவகுப்பது, தத்துவார்த்த சகிப்பு தன்மையின்றி போராடும் பிற தமிழ் குழுக்களைக் கையாள்வது, தாங்கள் எதையும் செய்ய முடிந்தவர்கள் என்று காட்டும் விதத்தில் உயர் பதவிகளில் உள்ளோரைக் கொலை செய்வது போன்றவை அவ்வமைப்பில் தோன்றி வளர்ந்த கோளாறான போக்குகளாகும்.
மக்கள் இயக்கப் பின்னணியினைக் கொண்டவர்கள் வழக்கமாக கையாளும் நடைமுறைகளில் இருந்து விடுதலைப் புலிகளின் நடைமுறைகள் பலவகைகளில் முற்றிலும் மாறுபட்டிருப்பதையே அவர்கள் செயல்பாட்டு முறையைப் பார்க்கும் போது நம்மால் அறியமுடிகிறது.
இந்திய மண்ணில் விடுதலைக்காக சமரசமற்றுப் போராடிய தியாகி. பகத்சிங் போன்ற மாமனிதர்கள் எப்போதும் தற்கொலைக்கு எதிராக நின்றார்கள் என்பதையே பார்க்கிறோம். தற்கொலை குறித்த அதற்கு எதிரான பகத்சிங்கின் கருத்து அவர் சுகதேவிற்கு எழுதிய கடிதத்தின் மூலம் வெளிப்படுகிறது அதாவது சுகதேவிற்கு விடுதலையோ அல்லது மரணதண்டனையே கிடைக்காமல் போனால் தற்கொலை செய்யும் அவரது எண்ணத்தை அவர் வெளிப்படுத்திய போது அக்கடிதத்தை பகத்சிங் எழுதினார்.
பகத்சிங் போன்றவர்கள் தங்கள் சாவு தாங்கள் படும் துன்பம் இவை அனைத்துமே மக்களிடையே எழுச்சியை ஏற்படுத்தி அதன்மூலம் ஆளும் வர்க்கத்திற்கு எதிரான மக்கள் இயக்கம் வலுப்பெற வேண்டுமென்றே விரும்பினார்கள். இதற்கு மாறாக விடுதலைப்புலிகள் அமைப்பினர் சையனைடு உண்டு மடியும்அதாவது அவர்களின் மரணம் ஒரு வகை விரக்தியை மக்களிடையே தோற்றுவிக்கும் நடைமுறையையே இன்று வரை பின்பற்றி வருகின்றனர். அதாவது ஒரு வகையான ஆயுத வழிபாடு தலைதூக்கி சராசரி மக்களிடம் இருந்து சாவு குறித்த கண்ணோட்டம் உள்பட அனைத்து விசயங்களிலும் அமைப்பு அந்நியப்படும் போக்கு இதனால் உருவாகி வளர்ந்துள்ளது.
விடுதலைப் புலிகள் செய்த வரலாற்றுத் தவறு
இந்த பின்னணியில்தான் விடுதலைப் புலிகளின் அரசியல் வரலாற்றிலேயே மிக அப்பட்டமான தவறான இராஜீவ் காந்தியின் கொலை நிகழ்ந்தது. இது எத்தனை தவறானதென்றால் மக்களின் விடுதலையை இலக்காக கொண்டுள்ள எந்தவொரு சரியான அமைப்பும் உயர்ந்த இலக்குகளற்ற தனிநபர்கள் போல் பழிவாங்கும் மனநிலையில் செயல்பட்டு தனக்கு உயிரூட்டமான சாதக தளமாக உள்ள ஒரு பகுதி மக்களின் ஆதரவினை இழக்கும் விதத்தில் செயல்படவேபடாது; அந்த அடிப்படையில் இராஜீவ் காந்தியின் கொலை விடுதலைப்புலிகளால் செய்யப்பட்டிராது என்று பலர் நம்பினர். அப்படி நம்பியவர்களை அதிர்நது போகச் செய்யும் விதத்தில் பிரபாகரனிடம் இருந்தே மறைமுகமான ஒரு ஒப்புதல் வாக்குமூலம் வந்தது. அது ஒரு துன்பியல் நிகழ்வு என்று அக்கொலையில் தங்களின் பங்கினை மறுக்காத வகையிலான ஒரு பதிலினை அவர் பின்னர் முன்வைத்தார்.
உலக அளவில் விடுதலைப் புலிகளுக்கு ஏற்பட்ட நிர்ப்பந்தங்கள்
இராஜீவ் காந்தி அவர்கள் தமிழ் மண்ணில் கொல்லப்பட்ட பின்பு அதற்கு முன்பு விடுதலைப்புலிகள் நிகழ்த்திய பல சகோதர இயக்கங்களின் தலைவர்களின் கொலைகளால் வெறுப்பும் சலிப்பும் கொண்டிருந்த தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகளை ஆதரிப்பதில் இருந்து பெரிதும் தங்களை விலக்கிக் கொண்டுவிட்டனர் என்றே கூறலாம். அதன் பின்னர் விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு நிதி வசூல் தமிழக மண்ணில் நடைபெற வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது.
பல வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களிடம் இருந்து பெறப்படும் நன்கொடைத் தொகைகளை வைத்தே ஆயுதங்கள் வாங்கி ஒரு அரசின் நிரந்தர இராணுவத்தை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. இராஜீவ் காந்தியின் கொலையை ஒட்டி இந்தியாவில் தடை செய்யப்பட்ட அந்த அமைப்பு உலகின் வேறுபல நாடுகளாலும் அடுத்தடுத்து தடைசெய்யப்பட்டது. இந்த தடைகள் அவர்கள் சுயேட்சையாக செயல்பட்டு நிதி ஆதாரம் திரட்டுவதைப் பெருமளவு பாதித்தது.
இந்த நிலையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து அதன் முக்கிய தளபதிகளில் ஒருவரான கருணா விலகி சிங்கள அரசியல்வாதிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படத் தொடங்கினார். இது இன்னொரு கட்ட பின்னடைவினை விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஏற்படுத்தியது.
பின்னடைவுகளை ஈடுகட்ட வல்லவை மக்கள் இயக்கங்களே
பின்னடைவுகளே இல்லாத போராட்டம் என்று எதுவும் இருக்கமுடியாது. ஆனால் அந்த பின்னடைவுகளின் போது அதனால் ஏற்படும் மனச்சோர்விற்கு மருந்தாகி அப்பின்னடைவுகளை முன்னேற்றப்படிகளாக மாற்றவல்லவை பரந்துபட்ட மக்களின் ஆதரவும் பின்னடைவுகளின் போது தோன்றும் பலவீனத்தை ஈடுகட்டும் விதத்தில் மக்களிடம் தோன்றும் எழுச்சிகளுமே ஆகும். ஆனால் அப்படிப்பட்ட மக்கள் எழுச்சியை தட்டி எழுப்பவல்ல ஒரு மக்கள் இயக்கப் பாதையை உரிய முக்கியத்துவம் கொடுத்து விடுதலைப் புலிகள் ஒரு போதும் இலங்கை தமிழ் மக்களிடையே வளர்க்கவே இல்லை. அதனால்தான் இன்று இத்தனை இராணுவ ரீதியான பின்னடைவு அவ்வியக்கத்திற்கு ஏற்பட்டுள்ள நிலையிலும் கூட யாழ்ப்பாண தமிழ் மக்களிடம் இருந்தோ கிழக்குப் பகுதி தமிழ் மக்களிடம் இருந்தோ ஒரு பெரும் எழுச்சியோ கிளர்ச்சியோ தோன்றவில்லை.
இங்கு ஒரு வாதம் முன் வைக்கப்படலாம் அதாவது யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பகுதிகளில் வாழும் தமிழ் இன மக்கள் துப்பாக்கி முனையில் நிர்வகிக்கப்படுகிறார்கள்; எனவே தான் அவர்கள் தங்களின் எழுச்சி முகத்தை காட்டாதிருக்கிறார்கள் என்று கூறலாம். ஆனால் கடந்த முப்பதாண்டு காலமாக ஆயுதம் தாங்கிய இலங்கை இராணுவத்தினுடனான தங்கள் அமைப்பினரின் சண்டையினை பார்த்துப் பார்த்து பழகிப் போன தமிழ் மக்கள் அச்சத்தினால் அவ்வாறு இருக்கிறார்கள் என்று கூறமுடியாது. மேலும் தனது இராணுவ வலிமையினை ஏறக்குறைய முழுமையாக போர்முனையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் திருப்பியுள்ள இலங்கை ஆட்சியாளர்கள் தமிழ் மக்களை அத்தகையதொரு அச்சத்தில் ஆழ்த்தி வைத்திருக்கக்கூடிய அளவிற்கு ஒரு மிகப் பெரும் இராணுவத்தை மக்களின் சிவில் நிர்வாகத்தில் ஈடுபடுத்தி இருக்கவும் வாய்ப்பில்லை.
இந்நிலையில் அங்குள்ள தமிழ் மக்களின் மனநிலையை விருப்பு வெறுப்பின்றி புரிந்து கொள்வது இலங்கையின் இனப்பிரச்னைக்கு தீர்வுகாண விரும்பும் அனைவரின் மிக முக்கியக் கடமையாகும். அந்த மனநிலையைப் புரிந்து கொள்வதற்கு இதுபோல் புதிதாக அந்நிய ஏகாதிபத்திய ஆட்சியில் இருந்து விடுதலை பெற்று முதலாளித்துவப் பாதையை தேர்ந்தெடுத்த பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட நாடுகளில் சிறுபான்மை தேசிய இனங்களின் நடைமுறையை பார்ப்பது பயன்தருவதாக இருக்கும். அதற்கு ஒரு பொருத்தமான எடுத்துக்காட்டாக தமிழ்நாட்டைக் கூறலாம்.
இலங்கை-இந்திய தமிழரின் ஒரே மாதிரி நிலைகள்
விடுதலை பெற்ற காலத்திலேயே ஓரளவு மூலதன திரட்சி பெற்றவராக தமிழ் முதலாளிகள் இருந்தனர். மலேசியா, பர்மா போன்ற நாடுகளில் லேவாதேவி செய்ததன் மூலம் அவர்களுக்கு கிடைத்த வட்டி மூலதனமும் இந்த மூலதனத் திரட்சியின் ஒரு குறிப்பிடதக்க பங்கினை ஆற்றியது. அம்மூலதனத்தைக் கொண்டு விடுதலைபெற்ற இந்தியாவில் அவர்கள் புதிதாக ஆட்சிக்கு வந்த முதலாளித்துவ அரசு உருவாக்கிக் கொடுத்த ஆதார வசதிகளையும் சலுகைகளையும் பயன்படுத்தி வளரத்தொடங்கினர். அவ்வாறு வளர்ந்து கொண்டிருந்த வேளையில் அவர்களுக்கு ஒரு அச்சம் தவிர்க்க முடியாமல் தோன்றியது. அதாவது தங்களைக் காட்டிலும் பெரும் மூலதனக் குவியலைக் கொண்டிருக்கக்கூடிய வடஇந்தியாவைச் சேர்ந்த மார்வாரி முதலாளிகளின் மூலதனப் படைஎடுப்பினால் தங்களது நலன் பாதிக்கப்படுமோ என்று அஞ்சினார்கள்.
மற்ற தேசிய இனங்களோடு ஒருங்கிணைந்து வெள்ளையரை எதிர்த்த போராட்டத்தில் தமிழ்மக்கள் ஈடுபட்டு வெள்ளை ஏகாதிபத்தியத்தை நாட்டைவிட்டு விரட்டும்வரை இந்த மார்வாடி முதலாளிகளின் படை எடுப்பால் தங்களது நலன் பாதிக்கப்படும் என்ற எண்ணம் அவர்களுக்கு பெரிதாக தோன்றவில்லை.
ஏனெனில் அந்நிய அரசாங்கம் தொழில் ரீதியாக அனைத்து சுதேசி முதலாளிகளின் வளர்ச்சிக்கும் கொடுத்திருந்த வாய்ப்புகளே குறைவு. ஆனால் விடுதலைபெற்ற பின் சுதேசி அரசாங்கம் ஏற்பட்ட சூழ்நிலையில் அந்த அரசாங்கம் பெரும்பான்மை ஹிந்தி மொழி பேசும் பகுதிகளை சேர்ந்த முதலாளிகளுக்கு சாதகமானதாக ஆகிவிடும் என்ற அச்சம் அவர்களிடையே தோன்றியது. அதன் விளைவாகவே 1952வாக்கில் அரசியல் அரங்கில் புதிதாக முளைத்த திராவிடக் கட்சிகளுக்குவிடுதலைப் போராட்டத்தில் அவர்களுக்கு ஒரு இம்மியளவு பங்குகூட இல்லாதிருந்தபோதிலும் தமிழ் முதலாளிகளின் பிரச்சார சாதனங்கள் முக்கியத்துவம் கொடுத்தன. பல்வேறு தியாகங்களை விடுதலைப் போராட்ட காலத்தில் செய்திருந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் அத்தகு பிரச்சார சாதனங்களால் படிப்படியாக ஓரங்கட்டப்பட்டன.
பிராந்திய முதலாளிகளின் இயக்கம்
அத்தருணத்திற்கு ஏற்ற விதத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது போன்ற முழக்கங்களை முன்வைத்தது. படிப்படியாக அந்த முழக்கங்களை பெரிதாக்கி தனித் தமிழ்நாடு வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் முன் வைத்தனர். அதை அக்கட்சியின் தலைவர்களுக்கே உரித்தான அடுக்குமொழியில் அடைந்தால் திராவிடநாடு இல்லையேல் சுடுகாடு என்று அறிவித்தனர். இவையனைத்தையும் தங்களுக்கு ஆதரவாக பிராந்திய முதலாளிகளின் ஆதரவு பெருகிவருவதை மனதிற்கொண்டே செய்தனர்.
தமிழ் பிராந்திய முதலாளிகளின் பார்வையோ அவர்களின் குறிக்கோளோ மிகவும் திட்டவட்டமாக இருந்தது. அதாவது அப்போது அகில இந்திய அளவில் பெரிதாக வளர்ச்சியடைந்த முதலாளித்துவக் குடும்பங்கள் பதினெட்டு இருந்தன என்றால் அதில் 6 பேர் பார்சி இனத்தைச் சேர்ந்த முதலாளிகளாக இருந்தனர், 6 பேர் மார்வாடி வகுப்பை சேர்ந்த முதலாளிகளாக இருந்தனர். எஞ்சியுள்ள அறுவரில் இருவர் தமிழ் முதலாளிகளாக இருந்தனர். இந்த இரு முதலாளிகளுக்கும் இவர்களின் உற்பததி பொருள்களுக்கு இந்தியா முழுவதும் சந்தை இருந்தது.
எனவே தங்களுக்கு ஆதரவாக முழக்கமிடும் சக்திகள் தீவிர, அதிதீவிர முழுக்கங்களை முன்வைத்த போதெல்லாம் அவற்றை எவ்வாறு தங்களது அகில இந்திய முதலாளிகளுடன் பேரம்பேசுவதற்கான வலுவைக் கூட்டிக்கொள்வதற்காக பயன்படுத்தமுடியும் என்று பார்பதிலேயே கண்ணும்கருத்துமாக இருந்தனர். அவர்களது நிறுவனங்களும் தங்களது வளர்ச்சி குறித்த ஆவல் மற்றும் வேட்கையுடன் இருந்தன. அதற்குக் காரணம் தமிழ்நாட்டில் பெருகிவளர்ந்து வந்த பொது மற்றும் தொழில்நுட்ப கல்விகற்றோர் எண்ணிக்கையாகும். தொழில் வளர்ச்சியில் அவர்கள் பெருமுனைப்பு காட்டியதற்கு வேறொரு காரணமும் உண்டு அதாவது இங்கு வடஇந்தியாவில் ஓடுவதைப்போல் வற்றாத ஜீவநதிகள் எவையும் ஓடவில்லை. எனவே குறைந்த கூலிக்குக் தங்கள் ஆலைகளில் வேலை செய்ய ஆட்கள் கிடைப்பர் என்பதையும் பயன்படுத்த நினைத்தனர்.
இந்த நிலையில் தனிநாடு கோரிக்கை அவர்களுக்கு கூடுதல் வலிமையை அகில இந்திய ஆட்சியாளர்களுடன் பேரத்தில் ஈடுபடுவதற்கு வழங்கினாலும் உண்மையாகவே தனிநாடு என்பது ஏற்பட்டுவிட்டால் தங்களது மூலதனப்பரவல் தளம் சுருங்கிவிடும் என்றும் அவர்கள் எண்ணினர். இந்நிலையில்தான் தனிநாடு கோரும் கட்சிகள் தடைசெயயப்படும் என்று அன்றைய பிரதமர் நேரு அறிவித்தார். அவர் அறிவித்த உடனேயே எந்தவகையான எதிர்ப்பையும் காட்டாமல் தங்களது தனிநாடு கோரிக்கையை தி.மு.க. கைவிட்டது.
தி.மு.க. இவ்வாறு பிராந்திய முதலாளிகளின் ஆதரவையும் பின்பலத்தையும் பெற்று படிப்படியாக வளர்ந்து வந்த போதிலும் அந்த ஆதரவு வெளிப்படையாக தலைகாட்டி உறுதிப்பட்டது இந்தி திணிப்பு எதிர்ப்புப் போரின் போதுதான். அது சாதாரண மக்களாலும் மாணவர்களாலும் தமிழ்நாட்டின் மீதான கலாச்சார படைஎடுப்பு என்று கருதப்பட்டது. உண்மையில் ஆங்கிலத்தை இணைப்பு மொழி ஸ்தானத்தில் இருந்து அகற்றி அவ்விடத்தில் இந்தியைக் கொண்டு வருவதற்காகவே மத்திய அரசின் அதுகுறித்த ஆணைப் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அகற்றப்படவிருந்த ஆங்கிலம் பிரதானப்படுத்தப்படாமல் இந்தி திணிப்பு தமிழ் மொழிக்கு எதிரான ஒன்று என்ற சித்திரமே முன்வைக்கப்பட்டது.
அதன் விளைவாக பிராந்திய முதலாளிகளின் முழு ஆதரவுடன் தி.மு.க. 1967ல் ஆட்சிக்கு வந்தது. அதன் பின்னர் பிராந்திய முதலாளிகளின் சுதிக்கு ஏற்ற விதத்தில் தனது தாளத்தை மாற்றி மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்று மாறிமாறி வாய்ப்பந்தல் போட்டு தனது நாடாளுமன்ற அரசியலை தி.மு.க. நடத்திக் கொண்டுள்ளது.
அது மட்டுமல்ல தற்போது ஒரு புது பார்முலாவே உருவாக்கப்பட்டு விட்டது. அதாவது நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தக் கட்சி வெற்றி பெறும் என்றால் எந்தக் கட்சி மத்தியில் ஆட்சிக்கு வர வாய்ப்புள்ள கட்சியோடு உடன்பாடு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறதோ அக்கட்சியே வெற்றிபெறும் என்பதே அந்த பார்முலாவாகும். இந்த அடிப்படையிலேயே லல்லு, முலாயம் போன்றவர்களைப் போல் அல்லாமல் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸின் உண்மையான ஸ்தாபன வலிமைக்கு பொருத்தமில்லாத விதத்தில் அதிக இடங்களை தி.மு.க. அக்கட்சிக்கு வழங்கியுள்ளது. இது எதை கோடிட்டு காட்டுகிறது என்றால் பிராந்திய முதலாளிகளின் மூலதனப்பரவல் ஏற்படுவதற்கு ஏற்ற சூழலை நிலவச் செய்வதே பிராந்திய முதலாளிகளின் ஆதரவையும் பின்பலத்தையும் பிராந்திய கட்சிகளுக்குப் பெற்றுத்தரும் என்ற சூழலையே விளக்குகிறது.
ஏறக்குறைய இதைஒத்த நிலைதான் இலங்கையிலும் உள்ளது. தமிழர் விடுதலை முன்னணி (டி.யு.எல்.எப்) நாடு முழுவதும் விரவிக் கிடக்கக்கூடிய தமிழ் மக்களின் நலனை மனதிற்கொண்டும் தமிழ் வியாபாரிகள் மற்றும் கல்விகற்ற அலுவலர்கள் அவர்களது வேலைவாய்ப்பை கருத்திற்கொண்டும் இதைஒத்த அதாவது ஒன்றுபட்ட இலங்கைக்குள் கூடுதல் அதிகாரங்கள் கொண்ட ஒரு சுயாட்சி அமைப்பை ஏற்படுத்துவதே தமிழ் மக்களின் நலனுக்கு குறிப்பாக தமிழ் முதலாளிகளின் நலனுக்கு உகந்ததாக இருக்கும் என்ற விதத்திலேயே செயல்பட்டது.
ஆனால் சிங்கள ஆட்சியாளர்களின் பல்வேறு அப்பட்டமான தமிழ் விரோத பிளவுவாத நடவடிக்கைகளால் இளைஞர்களும் மாணவர்களும் வெகுண்டெழும் சூழ்நிலை அங்கு உருவானது. அந்நிலையில் ஆயுதம் தாங்கிப்போராடும் நிலைக்கு வந்துவிட்ட குழுக்களின் கைக்கு தமிழ் மக்களின் அரசியல் ஆதரவு சென்றுவிட்டது. டி.யு.எல்.எப் போன்ற அமைப்புகள் உருவான பல்வேறு நல்லதருணங்களை பயன்படுத்தி தமிழ் இனப்பிரச்னைக்கு ஒரு சரியான தீர்வினை காணத்தவறியதும் அதன் பின்னடைவிற்கு ஒரு முக்கியக் காரணமாகும்.
மேலும் முதலாளித்துவ அரசியலை ஆட்டிப்படைக்கும் பதவி மோகம், பதவிக்காக சந்தர்ப்பவாத நிலைகள் எடுப்பது, பதவிகளைப் பயன்படுத்தி பொருள் ஈட்டுவது போன்ற காரியங்களில் எல்லா முதலாளித்துவ அரசியல் கட்சிகளைப் போலவே தமிழர் விடுதலை முன்னணியும் ஈடுபட்டது. அவற்றில் அவ்வமைப்பு ஈடுபட்டதும் அது விடுதலைப் புலிகள் போன்ற அமைப்புகளிடம் அரசியல் உத்வேகத்தை இழந்து நின்றதற்கு ஒரு முக்கியக் காரணமாகும்.
பெரும்பான்மை இலங்கைத் தமிழரின் விருப்பம்
இன்று 30 ஆண்டுகால கடுமையான போர் அதன் விளைவான உயிர்ச்சேதம் பொருட்சேதம் ஆகியவற்றுக்கு பின் இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் ஒன்றுபட்ட இலங்கையில் சுயாட்சி அதிகாரத்துடன் சேர்ந்து வாழ்ந்தால்கூட பரவாயில்லை என்ற பழைய நிலைக்கு-அதாவது தமிழர் விடுதலை முன்னணி போன்றவை மனதிற்கொண்டிருந்த அந்த பழைய நிலைக்கு- திரும்பியிருக்கின்றனர் என்பது போன்ற ஒரு சித்திரமே நம் கண்முன் எழுந்து நிற்கிறது. இத்தனை பின்னடைவுகள் எல்.டி.டி.ஈக்கு ஏற்பட்டுள்ள நிலையிலும் எல்.டி.டி.ஈ இலங்கை இராணுவத்துடன் நடத்திக் கொண்டுள்ள போருக்கு வலுசேர்த்து உதவும் வண்ணம் யாழ்ப்பாணம் போன்ற பெரும்பான்மை தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் கிளர்ச்சியும் எழுச்சியும் ஏற்படாதிருப்பதற்கும் அம்மக்களின் இந்த மனநிலைதான் காரணமாக இருக்க முடியும்.
போரும் அரசியலும்
மேலும் இதுபோன்ற அரசியல் முன் முயற்சியை எடுப்பதற்கு இருந்த வெகுஜன அமைப்புகள் பலவற்றை விடுதலைப்புலிகள் முடமாக்கியும் விட்டனர். அத்துடன் தாங்களே அத்தகைய ஒரு அமைப்பை அதாவது மக்கள் இயக்கத்தை நடத்தும் ஒரு அரசியல் அமைப்பை உருவாக்கவும் தவறிவிட்டனர். அவர்கள் அவ்வாறு உருவாக்காமல் போனதற்கு காரணம் இல்லாமலும் இல்லை.
எடுத்த எடுப்பிலேயே ஆயுதம் தாங்கிய அமைப்பாக அரசியல் அரங்குக்குள் நுழைந்த அவர்களுக்கு மக்களிடம் பிரச்னைகளை விளக்கிச் சொல்லும் பொறுமையோ, பக்குவமோ, சகிப்புத்தன்மையோ அதிகம் இல்லை. அதாவது அரசியல் என்பது ஆயுதம் தரிக்காத போர் என்பதையும் போர் என்பது ஆயுதம் தரித்த அரசியலென்பதையும் அவர்கள் மறந்துவிட்டனர். ஒரு சரியான கண்ணோட்டம் ஒரு அமைப்பை வழிநடத்தவில்லை என்றால் எந்த ஒரு கண்ணோட்டமும் அதனை வழிநடத்தாது என்பதல்ல. நிச்சயமாக ஒரு தவறான கண்ணோட்டம் அப்போது அதனை வழிநடத்தவே செய்யும். இலங்கைத் தமிழர் பிரச்னையிலும் விடுதலைப் புலிகளை ஒரு தவறான கண்ணோட்டம் வழிநடத்தவே செய்தது.
அந்த பாசிஸ கண்ணோட்டம் வழிநடத்தியதின் விளைவாகத்தான் அவர்களுடைய திட்டமிடுதல் எல்லாமே தங்களது இராணுவ ரீதியான செயல்பாடுகளுக்கு தேவையானவற்றை செய்வது குறித்ததாகவே ஆகிவிட்டது. அதனால்தான் தாங்கள் அதிகாரத்தில் இருந்த பகுதிகளைவிட்டு இலங்கை இராணுவத்தின் தாக்குதலை தாக்குபிடிக்க முடியாமல் வெளியேறும் வேளைகளிலும் மக்கள் அனைவரையும் கூடவே அழைத்துச் செல்லும் வரலாற்றில் முன் எப்போதும் கண்டிராத ஒரு நிகழ்வினை அப்பட்டமான செயற்கைத் தன்மையுடன் விடுதலைப்புலிகள் நிகழ்த்துகின்றனர்.
மேலும் உலக அரங்கில் இலங்கைத் தமிழர்களின் தனிநாடு கோரிக்கையை நியாயப்படுத்தி பல்வேறு அரசியல் ரீதியான விவாதங்களை மேற்கோள்கள் காட்டி தெளிவாக விளக்கி வந்த ஆண்டன்பாலசிங்கம் போன்றவர்களும்முழுக்க முழுக்க போராளிகளைக் கொண்ட அந்த அமைப்பில் மனிதமுகம் இருக்கிறது என்று காட்டுவதற்கு இப்போது இல்லை.
மேலும் விடுதலைப் புலிகள் அமைப்பு பிரதானமாக யாருடைய நலனுக்காக இருக்கிறது என்றால் இலங்கை தமிழ் உடைமை வர்க்கத்தின் நலனுக்காகத்தான். ஆனால் எந்த நாட்டின் எந்த உடமைவர்க்கமும் அதன் நலனுக்கு எந்த அமைப்புகள் எதுவரை பயன்படுமோ அந்த அமைப்புகளை அதுவரை பயன்படுத்தவே விரும்பும். அந்த அடிப்படையில் இலங்கையின் தமிழ் உடமை வர்க்கத்தின் பார்வை தற்போது ஒன்றுபட்ட இலங்கையில் கூடுதல் அதிகாரங்கள் கொண்ட ஒரு பிராந்தியம் என்பதாக மாறிவிட்ட சூழ்நிலையில் விடுதலைப்புலிகள் விடாப்பிடியாக தமிழ் ஈழம் கோரிக்கையை முன்வைத்துக் கொண்டிருப்பது தமிழ் உடமை வர்க்கத்திற்கு உடன்பாடு இல்லாததாக ஆகிவிட்டது.
போர் ஏற்படுத்தியுள்ள மாறாத வடுக்கள்
இருப்பினும் இன அடிப்படையில் இத்தனை காலம் நீடித்த இப்போர் ஏராளமான மறக்க முடியாத வடுக்களை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் பல்கலைகழக நூலகம் எரிக்கப்பட்டது போன்ற சம்பவங்கள், அதனை பெருமையுடன் பாதுகாத்து வந்த தமிழ் மக்கள் மனதில் எத்தனை ஆழமான கீறலை ஏற்படுத்தியிருக்கும் என்பது யாரும் புரிந்துகொள்ள முடியாததல்ல. இந்நிலையில் இந்த இனப்பிரச்னைக்கு உடனடியான தீர்வுகாண வேண்டுமென்றால் இன்றைய நிலையில் அதற்குள்ள ஒரே வழி பொது வாக்கெடுப்பு ஒன்றேயாகும். தமிழர் பகுதிகளில் தனி ஈழம் தேவையா? இல்லையா? என்ற ஒற்றைக் கோரிக்கையை முன்வைத்து ஐ.நா.சபையின் மேற்பார்வையில் அதனை நடத்துவதே ஆகும்.
அதற்கு முன்பு தற்போது நடந்து வரும் அப்பாவி மக்களின் உயிர்க் கொலைகளை தவிர்க்க ஐ.நா.வின் இராணுவம் அங்கு கொண்டுவரப்பட்டு விடுதலை புலிகள் மற்றும் இலங்கை இராணுவத்தின் துருப்புகளை அவற்றின் அரண்களுக்குள் செல்லவைத்து இப்பிரச்னை குறித்தபேச்சுவார்த்தையை இலங்கை அரசும் விடுதலை புலிகள் உட்பட பிற தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளும் நடத்துவதே சரியானதாக இருக்கும்.
தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமை
கூடுதல் அதிகாரம் வழங்குவது, சுயாட்சி, தனிஈழம் உள்பட அனைத்து விசயங்களும் அதில் விவாதிக்கப்பட்டு தனி ஈழம்தான் தீர்வு என்ற கோரிக்கை மற்ற தீர்வுகளைக் காட்டிலும் பெரிதாக எழுந்தால் அப்போது வாக்கெடுப்புக்குச் செல்லலாம். தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை என்பது ஒவ்வொரு தேசிய இனத்தைச் சேர்ந்த மக்கள் அனைவரின் பிரிக்க முடியாத உரிமையாகும். அதனை அம் மக்களின் ஏகோபித்த விருப்பை மனதிற்கொண்டே செயல்படுத்த வேண்டும்.
இந்த பிரச்னையை இலங்கை அரசுடன் விவாதிக்க தகுதியும் அதிகாரமும் படைத்த ஒரே அமைப்பு விடுதலைப்புலிகள் அமைப்பே என்ற கருத்தை இங்கு செயல்படும் விடுதலைப்புலிகள் ஆதரவு அமைப்புகள் பல முன் வைக்கின்றன. அது சரியானது அல்ல, ஏனெனில் அனைத்து மக்களின் விருப்பு வெறுப்பற்ற மனநிலையை ஆயுதம் தாங்கிய ஒரு குழு மிகச் சரியாக பிரதிபலிக்கும் என்று கூற முடியாது.
மேலும் விடுதலை புலிகள் கடந்த காலத்தில் இலங்கையின் தமிழர் வாழும் வடக்கு-கிழக்கு பகுதிகளை ஒன்றாக இணைத்து தமிழ் மாகாணம் ஒன்றை அமைத்துவிட்டு அதன் பின்னர் கிழக்குப் பகுதியில் மக்களிடம் அவர்கள் வடக்குப்பகுதி மக்களுடன் ஒருங்கிணைத்து ஒரு மாகாண அமைப்பின் கீழ் இருக்க விரும்புகிறார்களா அல்லது தனி மாகாணமாக செயல்பட விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு நடத்தி தீர்மானிக்க வேண்டும் என்று இருந்த இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் சரத்தினை கடுமையாக எதிர்த்தனர்.
கிழக்குப் பகுதியில் வாழும் மக்களில் மிகப் பெரும்பாலோர் தமிழ் பேசும் மக்களாக இருந்த போதிலும் அவர்களில் யாழ்ப்பாணத் தமிழர்கள் கிழக்குப் பகுதியின் பூர்வீகத் தமிழர்கள் மற்றும் தமிழ் பேசும் இஸ்லாமியர்கள் என்ற பிரிவுகள் இருக்கவே செய்கின்றன. அவர்கள் பேசும் மொழி ஒன்றாக இருந்த போதிலும் அது மட்டுமே அவர்களிடம் முழுமையான ஒற்றுமை உணர்வினை ஏற்படுத்த முடியவில்லை.
ஏனெனில் இந்த முதலாளித்துவ காலகட்டத்தில் தேசிய முதலாளிகளின் முழக்கமான தனி நாடு கோரிக்கை என்பது பொருளாதார நலன்களை அடிப்படையாக வைத்தே எழுப்பப்படுகிறது. எனவே வடக்கு கிழக்குப் பகுதி இரண்டும் ஒரு மாகாணமாக அமைந்தால் அதில் யாழ்ப்பாண தமிழர்களின் ஆதிக்கம் மிகுந்துவிடும்; தங்களது நலன்கள் அவ்வளவுதூரம் பராமரிக்கப்படாது என்ற அச்சம் கிழக்குப் பகுதி பூர்வீக தமிழ் மக்களிடமும், தமிழ் மொழி பேசும் இஸ்லாமியரிடமும் பெரிதும் இருக்கவே செய்கின்றன. அதனால்தான் அந்த சரத்தினை விடுதலைப் புலிகள் எதிர்த்தனர்.
தனி ஈழம் சர்வரோக நிவாரணியல்ல
இங்குள்ள விடுதலைப்புலிகள் ஆதரவு அமைப்புகள் மக்களிடம் முன் வைப்பது போல் தனிநாடு அதாவது தமிழீழம் என்பது இலங்கைத் தமிழ் மக்கள் அனைவரின் பிரச்னைகளுக்கும் தீர்வாகவல்ல சர்வரோக நிவாரணி அல்ல. தனிஈழம் என்று ஏற்பட்டால் அங்கு தமிழ் உடமை வர்க்கத்தின் ஆட்சியே ஏற்படும். அத்தகைய தமிழ் ஈழ தேசம் அமைப்பதில் தொடங்கியே பல்வேறு வேதனைகள் தலைதூக்கும். ஏனெனில் அவ்வாறு உருவாகும் தனித் தமிழ் தேசத்தில் இலங்கையின் சிங்களர் வசிக்கும் பகுதிகளில் இன்றும் வாழ்ந்து வரும் ஏராளமான தமிழர்கள் தங்களது உடமைகளை விட்டுவிட்டு வந்து குடியேற முடியாது.
அவர்கள் தங்களது வசிப்பிடங்களில் விட்டுவிட்டு வந்த உடமைகளை ஈடு கட்டும் விதத்தில் தமிழ் ஈழத்தில் வசிக்கும் மக்கள் அவர்களுக்கு தொழில் வாய்ப்புகளோ வசிப்பிடங்களோ புதிதாக ஏற்படுத்தி தருவது சாத்தியமல்ல. இப்போதும் பல்லாயிரக்கணக்கான பாகிஸ்தான் பிரிவினையின் போது பாகிஸ்தானில் இருந்து இடம் பெயர்ந்து டெல்லியிலும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் வாழும் இந்து மதத்தைச் சேர்ந்த மக்கள் அகதிகளைப் போலவே வாழ்வது இங்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். இந்நிலையில் சிங்கள மக்கள் வசிக்கும் பகுதிகளில் வசிக்கும் இலங்கை தமிழ் மக்களில் மிகப்பெரும்பாலோர் அப்பகுதிகளைவிட்டு பெரும்பாலும் வெளியேற விரும்பமாட்டார்கள்.
அவர்களைத் தவிர 10 லட்சத்துக்கும் மேலான மலையகத் தமிழ் மக்கள் மனப்பூர்வமாக யாழ்ப்பாணத் தமிழர்களோடு ஒரே மொழி பேசுவதால் ஒத்துப் போகக் கூடியவர்கள் அல்ல. யாழ்ப்பாண உடைமை வர்க்கத் தமிழர்களும் அவர்களுக்கு அடைக்கலம் தருவர் என்று கூற முடியாது. ஏனெனில் 5 லட்சம் மலையகத் தமிழர்களின் வெளியேற்றத்திற்கு பண்டார நாயகாவுடன் இணைந்து ஒப்புதல் அளித்தது யாழ்ப்பாண உடைமை வர்க்கத் தமிழர்களின் பிரதிநிதி செல்வநாயகமே ஆவார்.
இன்று வரை மனப்பூர்வமாக மலையத் தமிழர்களை இங்குள்ள விடுதலைப் புலிகள் ஆதரவு அமைப்புகள் கூறுவது போல் தங்களது தொப்புள்கொடி உறவுகள் என்று யாழ்ப்பாண உடைமை வர்க்கத் தமிழ்மக்கள் பார்ப்பதில்லை. யாழ்ப்பாணத்தில் உழைக்கும் வர்க்கத் தமிழர்களிடமும் வர்க்க உணர்வு மட்டம் குறைவாக இருந்ததால் அது ஏற்படவில்லை. கல்வியிலும் பொருளாதாரத்திலும் முன்னேறிய யாழ்ப்பாண உடமைவர்க்க தமிழ்மக்கள் மலையகத் தமிழர்களை கூலிக்கு வேலை செய்ய வந்த மக்களாகவே அதாவது சிங்கள உடமை வர்க்கத்தினர் பார்க்கும் விதத்திலேயே இப்போதும் பார்க்கின்றனர்.
இந்நிலையில் தமிழர்களுக்கு என்று தனிநாடு ஒன்று ஏற்பட்ட பின்னரும் சிங்கள மக்களுடன் சேர்ந்து வாழ நேரும் தமிழர்கள் மனவியல் ரீதியான ஒரு வகையான தாழ்வு மனப்பான்மையுடனேயே அப்பகுதிகளில் வாழ நேரும். இன்று பாகிஸ்தானிலும் வங்கதேசத்திலும் பிரிவினைக்குப் பின்னும் அந்நாடுகளிலேயே தங்கியுள்ள இந்து மக்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்களோ அவ்வாறே சிங்களப் பகுதிகளில் வாழ வேண்டியிருக்கும் தமிழ் மக்களும் நடத்தப்படுவர். வங்கதேசத்தில் வசிக்கும் இந்துமக்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பதை தஸ்லிமா நஸ்ஸ்ரீனின் லஜ்ஜா என்ற நவீனத்தை படித்தாலே தெரியவரும். அதைப்போலவே பிரிவினைக்குபின் நமது நாட்டில் உள்ள முஸ்லீம் மக்களும் வகுப்புவாத சக்திகளால் அவர்களின் மனம்புண்படும் விதத்தில் விமர்சிக்கப்படுவதையும் நடத்தப்படுவதையும் வகுப்பு மோதல்களுக்கு ஆட்படுத்தப்படுவதையும் நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
மேலும் எவ்வெப்போது சிங்கள ஆளும் வர்க்கம் நெருக்கடிக்கு ஆட்படுத்தப்படுகிறதோ அப்போதெல்லாம் இலங்கையில் சிங்கள மக்களோடு சேர்ந்து வாழ நிர்பந்திக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் மீது ஒரு கட்சி மாறி மற்றொரு கட்சி வெறுப்பையும் அவமரியாதை பேச்சுகளையும் உமிழவே செய்யும் அது சந்திக்கும் நெருக்கடிகளிலிருந்து பெரும்பான்மை சிங்கள மக்களின் கவனத்தை திசை திருப்பி விட அதனைச் செய்யும்.
இத்தனை கொடுமையாக இராதெனினும் தமிழர் வாழும் கிழக்குப் பகுதியில் தமிழருடன் இணைந்து வசிக்கும் சிங்கள மக்களுக்கும் எங்கு செல்வது எவ்வாறு ஒன்றி வாழ்வது என்பது குறித்த பிரச்னைகள் நிச்சயம் இருக்கவே செய்யும். இவற்றைஎல்லாம் கருத்தில் கொள்ளாது தமிழ் ஈழம் தமிழ் மக்களுக்கு ஒரு பொற்காலத்தை ஏற்படுத்தித் தந்துவிடும் என்ற ஒரு கற்பனைச் சித்திரத்தை இங்குள்ள விடுதலைப்புலிகள் ஆதரவு அமைப்புகள் முன் வைக்கின்றன.
தனி தேசம் உடைமை வர்க்கங்களின் கோரிக்கையே
தேசிய வாதமும் தனிநாடு கோரிக்கையும் இப்போதும் எப்போதும் அந்தந்த தேசிய இனங்களை சேர்ந்த உடமை வர்க்கங்களின் முழக்கங்களே. ஏனெனில் உடமை வர்க்கங்கள் ஏதாவது ஒரு அடிப்படையில் பிறர் உழைப்பில் வாழும் ஒட்டுண்ணித்தனமான வாழ்க்கையையே வாழக்கூடியவை, எனவே அவற்றிற்கு அந்த ஒட்டுண்ணித்தன வாழ்க்கை மூலம் அடையும் சலுகைகள் மற்றொரு தேசிய இனத்தை சேர்ந்த அதே வகையான வாழ்க்கை நடத்தும் உடமை வர்க்கங்களால் அவை வலுவாக பெரும்பான்மையாக இருக்கின்றன என்ற காரணத்தால் பறிக்கப்பட்டுவிடக் கூடாது என்ற அடிப்படையிலேயே தனிநாடு முழுக்கம் முன்வைக்கப்படுகிறது.
அதனால்தான் ஒரு அளவிற்கு மேல் நியாயம் மற்றும் பகுத்தறிவுபூர்வ ஆய்வுகளை முன்வைத்தால் அதற்குப் பதிலாக வெறிவாதத்தை உமிழ்பவையாக அத் தேசிய வெறிவாத அமைப்புகள் ஆகிவிடுகின்றன. தமிழ் உணர்வு அற்றவர்கள் என்ற அவதூறுக்கும் சிங்கள உணர்வு இல்லாதவர்கள் என்ற அவதூறுக்கும் அத்தகைய பொதுவான சரியான ஆய்வுகளின் அடிப்படையிலான கருத்துக்களை வைப்பவர்கள் தமிழ் மற்றும் சிங்கள தேசியவாதிகளால் தூற்றப்படுகிறார்கள்.
உண்மையான தீர்வு உழைக்கும் வர்க்க ஆட்சி அமைவதிலேயே உள்ளது
எனவே தமிழ் மக்களிலும் சரி சிங்கள மக்களிலும் சரி அவர்களில் மிகப்பெரும்பான்மையாக இருப்பவர்கள் உழைக்கும் மக்களே ஆவர். அவர்கள் தங்கள் உழைப்பால் வாழ்பவர்கள்; ஒட்டுண்ணித்தனத்தால் வாழ்பவர்கள் அல்ல. எனவே சிங்கள உழைக்கும் மக்கள் மற்றும் தமிழ் உழைக்கும் மக்கள் இவ்விரு பெரும்பகுதி மக்களின் அடிப்படையான நலன்களும் ஒன்றுதான். அதாவது அவர்களை கூலியடிமைத்தனத்தில் வைத்திருக்கும் சிங்கள, தமிழ் உடமை வர்க்கங்களை தூக்கிஎறிய வேண்டும் சமூகத்தின் அனைத்துச் செல்வங்களையும் உருவாக்கும் உழைக்கும் வர்க்க ஆட்சியை மலரச் செய்ய வேண்டும் என்பதுதான். இந்த அடிப்படையில் உழைக்கும் வர்க்க ஆட்சியை இலங்கை முழுவதும் கொண்டுவர பாடுபடுவதே இனப்பிரச்னை உட்பட இலங்கை மக்களின் அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வாகும்.
சோவியத் படிப்பினை
இதையே சோவியத் நாட்டின் படிப்பினைகள் நமக்கு உணர்த்துகின்றன. சோசலிசம் இருந்தவரை தனிநாடு கோரிக்கை என்பது அங்கு எழவில்லை. எத்தருணத்தில் சோசலிசம் அங்கு வீழ்ந்ததோ அப்போது அதில் ஒருங்கிணைந்திருந்த அனைத்து தேசிய இனங்களும் பாதுகாப்பற்ற நிலையில் தாங்கள் இருப்பதாக உணரத்தொடங்கி தனிநாடுகள் கோரத்தொடங்கிவிட்டன. மாபெரும் தலைவர் ஸ்டாலினின் மறைவிற்குப்பின் முதலாளித்துவ சிந்தனைப்போக்குகள் ஊட்டி வளர்க்கப்பட்டதால் பின்னாளில் சோவியத்யூனியன் தகர்ந்த பின்பு தனிநாடு கோரிக்கையை முன்வைக்கும் முதலாளித்துவ சிந்தனைப் போக்கின் கரு அவர்கள் மனதில் உருவாக்கப்பட்டது. அதுவே அக்கோரிக்கை பெரிதாக எழுந்து ஒன்றாய் இருந்த சோவியத் நாடு பல தேசங்களாக பிளவுபடக் காரணமாக இருந்தது.
ஆரம்பத்தில் சிங்கள-தமிழ் உழைக்கும் வர்க்கத்தின் ஒற்றுமையை வலியுறுத்திப் போராடிய கம்யூனிஸ்ட் அமைப்புகளும் தலைவர்களும் இருக்கவே செய்தனர். நாளடைவில் நாடாளுமன்றத்தை பயன்படுத்துவதற்கு பதிலாக நாடாளுமன்ற வாதத்தில் மூழ்கியவையாக அக்கட்சிகள் ஆகிவிட்டதால் படிப்படியாக இனவாதத்தையும் தங்களது அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்தும் கலிசடைகளாக அவையும் உருமாறிவிட்டன. எனவேதான் தமிழ் மக்களின் பல்வேறு உரிமைகள் பறிக்கப்பட்ட போதும் அவை வாய்மூடி மெளனம் சாதித்தன. வர்க்கப் பார்வையை கைவிட்டுவிட்டு இங்குள்ள கம்யூனிஸ்டுகள் ஜாதிய வாதத்தை கையிலெடுத்து குறுக்கு வழியில் தேர்தல் அரசியலில் ஆதாயம் அடைய முனைவதுபோல் இலங்கையில் கம்யூனிஸ்டுகள் என்ற பெயரில் செயல்பட்ட கட்சிகளில் சிலவும் மிதமிஞ்சிய சிங்கள வெறிவாதத்தை கையிலெடுக்கவும் செய்தன.
எனவே இலங்கையின் இனப்பிரச்னைக்கு உண்மையான தீர்வு உழைக்கும் வர்க்கப் போராட்டத்தின் விளைவாக உருவாகும் வர்க்க பேதமற்ற சமுதாயம் அமைவதில்தான் உள்ளது. அத்தகைய வர்க்கப் போராட்டங்களே சிங்கள, தமிழ் உடமைவர்க்கங்களின் உண்மையான முக விலாசத்தை அம்பலப்படுத்தக் கூடியவை.
தவறான, திரித்துரைக்கப்படும் வரலாற்று நிகழ்வுகள்
இதை முன்வைப்பதை விட்டுவிட்டு இங்குள்ள அதிதீவிர இடதுசாரிக் கட்சிகள் என்று கருதப்படும் சில கட்சிகள் தமிழ்ஈழம் அவைதில் அனைத்துப் பிரச்னைகளுக்கும் ஆன தீர்வு இருப்பது போலவும், சிங்கள மக்கள் அனைவரும் தமிழ் இனத்தின் எதிரிகள் போலவும் தமிழ்வெறி வாதத்தைத் தூண்டிவருகின்றன. உண்மையிலேயே இலங்கையில் எவ்வாறு இடதுசாரி முழக்கங்களை முன்வைத்துக் கொண்டு ஜே.வி.பி அமைப்பினர் சிங்கள வெறிவாதத்தை கையிலெடுத்து தமிழர்களுக்கு எதிராக குறிப்பாக மலைத்தோட்ட தமிழர்களுக்கு எதிராக தங்களது பிரச்சாரத்தில் விசத்தை கக்கினரோ அதைப்போல இங்கு இந்த இடதுசாரி அமைப்புகள் இலங்கையில் நிலவும் யதார்த்த நிலையைப் பாராது சாதாரண சிங்கள மக்கள் மீதும் விரோதத்தினையும் குரோதத்தினையும் உருவாக்கும் வெறுப்பு பிரச்சாரத்தை நடத்துகின்றனர்.
தங்களது வாதங்களை நிரூபிப்பதற்காக இந்திய வரலாற்று நிகழ்வுகளையே தங்களது நோக்கிற்குத் தகுந்தாற்போல முன்னுக்குபின் முரணாக திரித்தும் கூறுகின்றனர்.
அவர்களது ஈழ விடுதலை நமது கடமை என்ன? என்ற நூலில் லாலா லஜபதி ராயை தடியடியில் கொலைசெய்து மேலும் பல அடக்குமுறை சம்பவங்களில் ஈடுபட்ட ஆங்கில அரசுக்கு எதிராக அமைதியான முறையில் ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் கூடி போராட்டம் நடத்திய இந்தியர்கள் மீது கொடூரமாக துப்பாக்கி சூடு நடத்தினான் ஜெனரல் டயர் என்று கூறியுள்ளனர். உண்மையில் ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்தது 1919ம் ஆண்டு ஏப்ரல் 13ல் ஆகும்.
லாலா லஜபதிராய் சைமன் கமிசன் பகிஸ்கரிப்பு இயக்கத்தின்போது வெள்ளை போலிஸாரால் குண்டாந்தடித் தாக்குதலுக்கு ஆட்பட்டது 1928ம் ஆண்டு அக்டோபர் 30ம் தேதியாகும். அதன் விளைவாக அவர் மரணம் அடைந்தது 1928ம் ஆண்டு நவம்பர் 17ம் நாளாகும். அதாவது 9 ஆண்டுகளுக்குபின்பு நடந்த ஒரு சம்பவத்திற்காக அதாவது 1928ல் நடந்த லாலாலஜபதிராயின் தடியடிக்காகவும் அதன் விளைவாக அவர் கொலையுண்டதற்காகவும் 1919ம் ஆண்டு ஜாலியன்வாலாபாக்கில் மக்கள் கூடி போராடினார்கள் என்று கூறியுள்ளனர்.
இவ்வாறு வரலாற்று நிகழ்வுகளை முன்னுக்குபின் முரணாக திரித்துக் கூறியும், சாதாரண சிங்கள மக்கள் மீதும் வெறுப்பையும் விரோதத்தை ஊட்டியும் செயல்படும் இவர்களின் போக்கு உண்மையில் இவர்கள் இந்திய மண்ணின் ஜே.வி.பி இயக்கத்தைச் சேர்ந்தவர்களாகவே தோற்றம் காட்டுகிறார்கள் என்பதையே புலப்படுத்துகிறது. மேலே நாம் முன்வைத்துள்ள ஆய்வின் அடிப்படையில் இலங்கைத்தமிழர் பிரச்னைக்கான தீர்வு அந்நாட்டு ஒட்டுமொத்த தமிழ் மக்களின் விருப்பினை அடிப்படையாகக் கொண்டதாக மட்டுமே இருக்கமுடியும்.
சுரண்டலை அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவ அமைப்பு முறை இருக்கும் வரை இனப்பிரச்சனைக்கான நிரந்தரத் தீர்வு இல்லை என்பதும் மனதிற் கொள்ளப்படவேண்டும்.
[கருத்து:2 கருவூலம்:1 மே 2009 இதழ்]
பிரிவினையை ஆழப்படுத்திய தரப்படுத்துதல் திட்டம்
அதனை அடிப்படையாகக் கொண்டு உயர்கல்வி பெறுவதிலும் அதைக் கொண்டு வேலைச் சந்தையில் போட்டியிடுவதிலும் தமிழர் எண்ணிக்கையை குறைக்கத் திட்டமிட்டனர். அதாவது சிங்களர்களும் தமிழர் அளவிற்கு முன்னேறுவதற்கு சலுகைகள் வழங்குகிறோம் என்ற அடிப்படையில் தரப்படுத்துதல் என்ற பாரபட்சமான திட்டத்தைக் கொண்டுவந்தனர்.
1972ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்த தரக்கட்டுப்பாடு திட்டத்தின்படி மருத்துவக் கல்வியில் சேர விரும்பும் ஒரு மாணவர் அவர் தமிழராக இருந்தால் 400க்கு 250 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். ஆனால் அவர் சிங்களராக இருந்தால் 229 மதிப்பெண்கள் பெற்றிருந்தாலே போதும். தகுதி அடிப்படையில் 30 சதவீத இடங்கள் மட்டுமே நிரப்பப்படும். 55 சதவீத இடங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்கட் தொகை அடிப்படையில் சிங்கள தமிழ் மக்களிடையே ஒதுக்கீடு செய்யப்பட்டது. மீதமுள்ள 15 சதவீத இடங்கள் கல்வி ரீதியில் பின் தங்கிய மாவட்டங்களுக்கு என்ற அடிப்படையில் ஒதுக்கப்பட்டது. இந்த அடிப்படையில் தமிழ் மாணவர்கள் மிகக் கூடுதல் மதிப்பெண்கள் பெற்றால் கூட அவர்கள் இலங்கையில் உள்ள கல்லூரிகளில் இடம் பிடிக்க முடியாது என்ற நிலை தோன்றியது.
நாட்டை இரண்டாக்கிய ஒற்றை ஆட்சி மொழி திட்டம்
மேலும் நாம் ஏற்கனவே பார்த்த சிங்களம் மட்டுமே ஆட்சிமொழி என்ற கொள்கை அரசியல் சட்டப்பிரிவு 33ன் கீழ் 1956ம் ஆண்டு இலங்கை ஆட்சியாளர்களால் கொண்டுவரப்பட்டது. அதன் பின்னர் தமிழ் மக்களின் கிளர்ச்சிகளைத் தொடர்ந்து 1958ம் ஆண்டு தமிழ் மொழி (விசேச சட்டம்)கொண்டுவரப்பட்டது. அதன்படி தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் தமிழும் ஆட்சி மொழி என அறிவிக்கப்பட்டது. அது சிங்களமே இலங்கையின் ஆட்சி மொழி என்பதைப் பாதிக்காத வகையில் அமல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்பின்னர் 1972ம் ஆண்டில் சிங்களம் ஆட்சி மொழியாக தமிழ் மொழி பெயர்ப்பு வசதியுடன் இருக்கும் என அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் 1978ம் ஆண்டு வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளைத் தவிர்த்து பிற அனைத்துப் பகுதிகளுக்கும் சிங்களமே ஆட்சி மொழி என்றும், ஆங்கிலம் இணைப்பு மொழி என்றும் அறிவிக்கப்பட்து. ஒட்டு மொத்தத்தில் மொழியை மையமாக வைத்து சிங்கள, தமிழ் மக்களிடையே வேற்றுமையைப் பேணும் போக்கு ஆட்சியாளர்களால் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டது.
இந்த இரண்டு நடவடிக்கைகளும் தமிழ் மக்களை நடைமுறை ரீதியாகவும் உணர்வுமட்டத்திலும் பெரிதும் பாதித்தன. வறண்ட பகுதியில் வாழ்ந்து கொண்டு கல்வியறிவின் மூலமாக மட்டுமே தங்களை நிலைநாட்ட முடியும் என்ற நிலையிலிருந்த தமிழ் மக்களுக்கு கல்வி உரிமையையே பறிப்பது என்ற அரசின் நடவடிக்கை கடும் அதிர்ச்சியை தந்தது. மேலும் ஆட்சி மொழிக் கொள்கை உணர்வு ரீதியில் தமிழ் மக்களை மிகப் பெரிதாக பாதித்தது.
கல்விக்காக நாடுவிட்டு நாடு செல்லும் துயரம்
இந்த நிலையில் இலங்கை தமிழ் மக்களில் வசதியுடையவர்கள் தங்களது பிள்ளைகளை கல்விக்காக இந்தியா போன்ற நாடுகளுக்கு அனுப்பினர். தரமான கல்விபெற வேண்டி ஒரு நாட்டைவிட்டு இன்னொரு நாடு செல்வது என்பது இயல்பாகவே எல்லா நாடுகளிலும் காணப்படக் கூடிய ஒரு நடைமுறை, ஆனால் தங்கள் நாட்டிலேயே தரமான கல்வி பெறுவதற்கு ஏற்ற நிறுவனங்கள் இருந்தும்கூட அதே வகை கலை மற்றும் விஞ்ஞான கல்வியைப் பயில்வதற்காக தனது நாட்டைவிட்டு அண்டைநாட்டுக்கு சென்றாக வேண்டும் என்ற அரசு ஏற்படுத்திய நிர்ப்பந்த நிலை அந்த மாணவர் மற்றும் அவர்களின் பெற்றோர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை இயல்பாகவே ஏற்படுத்தியது. அவர்களைத் தவிர பொருளாதார வசதியின்மை காரணமாக படிப்பதற்காக தகுதி இருந்தும் தங்களை ஒத்த சிங்கள மாணவர்களைக் காட்டிலும் கூடுதல் மதிப்பெண்கள் பெற்றிருந்தும் உயர்கல்விக்காக வெளிநாடுகளுக்கும் செல்ல முடியாது கல்வியை இழந்து நிற்கும் மாணவர்களின் மனநிலை இன்னும் எவ்வளவு கொதிப்படைந்ததாக இருக்கும். இச்சூழ்நிலைகளே தமிழ் மக்களிடையேயும் இன உணர்வினைப் பெருமளவு தூண்டியிருந்தது.
தமிழர் விடுதலை முன்னணி
இந்த மோசமான வளர்ச்சிப் போக்குகள் தமிழர் விடுதலை முன்னணி போன்ற அமைப்புகள் உருவாகக் காரணமாக இருந்தன. அந்த அமைப்புகள் அவற்றிற்கு இருந்த பல்வேறு வரையறைகளுக்கு உட்பட்டே இப்பிரச்னையை எடுக்க வேண்டியிருந்தது. அவர்களுக்கு தனிநாடு கோரிக்கையை எழுப்புவதில் பெரும் சிக்கல் இருந்தது. நாடு முழுவதும் விரவிக்கிடந்த தமிழர்களின் நலன் தனிநாடு கோரிக்கையை எடுத்த எடுப்பில் முன்வைப்பதன் மூலம் பாதிக்கப்படும் என்ற சூழ்நிலை அவர்களின் கரங்களைப் பெருமளவு கட்டிப் போட்டது.
அது மட்டுமல்ல தமிழர்களில் வளர்ச்சியடைந்த பகுதியினர் தங்களது தொழில் வாய்ப்புகளுக்கு தமிழர் பகுதிகளோடு இலங்கை போன்ற ஒரு பெரிய சந்தையைக் கொண்ட நாடு இருப்பது அவசியம் என்றும் கருதினர். எனவே தமிழர் விடுதலை முன்னணி கோட்பாடு ரீதியான தேசிய சுயநிர்ணய உரிமை கேள்வியை முன்வைக்காமல் பல சமயங்களில் தங்களுக்கு சலுகை அளிக்க முன்வரும் சிங்கள ஆளும் வர்க்க கட்சிகளுடன் நேரடி அல்லது இலைமறை காய்மறை உறவு வைத்துக் கொள்வதன் மூலமே இப்பிரச்னைகளுக்கான தீர்வினைப் பெற விரும்பின. அந்த அடிப்படையில் ஒரு வரம்பிற்குட்பட்ட சமூக இயக்கத்தை அதுவும் நாடாளுமன்ற அரசியலில் பயன்படும் விதத்திலேயே அவர்கள் கையில் எடுத்தனர்.
அத்தகைய இயக்கங்களுக்கு செவிமடுத்து ஒருபுறம் அரசியலுக்காக இனவேற்றுமையை வளர்த்தாலும் மறுபுறம் அத்தகைய நடவடிக்கை முழு சமூக அமைதியையே பாதிக்கும் அளவிற்கு சென்றுவிடக்கூடாது என்ற அடிப்படையில் தமிழ் அமைப்புகளின் கோரிக்கைகள் சிலவற்றை பரிசீலிக்கும் நிலையிலிருந்த சில சிங்கள ஆட்சியாளர்களுக்கு பல எதிர்ப்புகள் சிங்கள தீவிரவாத அமைப்புகளால் உருவாக்கப்பட்டன.
சிங்கள வெறிவாத புத்தபிக்குகள்
சிங்கள தீவிரவாத அமைப்புகள் என்று கூறும்போது அதில் மிக முக்கியமானது இலங்கை புத்தபிக்குகளின் அமைப்பாகும். இலங்கை புத்த மதத்தில் பெரும் பகுதியினர் புத்த மதத்தின் 'மகாயன' பிரிவை சேர்ந்தவர்கள் அல்ல. அவர்கள் 'ஹினாயன' பிரிவை சேர்ந்தவர்கள். அந்த அடிப்படையில் அவர்கள் சமூக அக்கறை இல்லாதவர்கள்; குறுகிய தன்னலவாத மனநிலை கொண்டவர்கள் .அவர்களைப் பொறுத்தவரை மதரீதியாக தங்களிடம் இருந்து வேறுபட்ட ஹிந்து மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்த தமிழ் மக்களுக்கு வழங்கப்படும் எந்த சலுகையும் ஜீரணிக்க முடியாததாக இருந்தது. உபதேசிக்கும் போது தங்களது மதக்கோட்பாடு 'அஹிம்சை' என்று அவர்கள் கூறிக் கொண்டாலும் அதன்படி பூச்சி புழுக்களுக்குக்கூட தீங்கு செய்யாதவர்களாக தங்களைக் காட்டிக் கொண்டாலும் நடைமுறையில் மனித கொலைகள் கூடச் செய்பவர்களாகவே அவர்கள் இருந்தனர்.
பல தமிழர் விரோத வன்முறை சம்பவங்களில் அவர்கள் முன்னணியில் இருந்தனர். இலங்கையின் ஜனாதிபதிகளிலேயே மிக உயர்ந்தவராக மதிக்கப்படும் திரு.பண்டாரநாயகா புத்தபிக்கு ஒருவராலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது கொலைக்கு திட்டம் தீட்டிக் கொடுத்து அதன் காரணகர்த்தாவாக இருந்தவர் என்ற அடிப்படையில் புத்த மதத்தின் வேறொரு முக்கியமான புத்தத் துறவி ஆயுள்தண்டனை அனுபவித்து வந்தார்.
இது தவிர கொழும்பில் நடைபெற்ற ஒரு தமிழர் மாநாட்டை சீர்குலைக்கும் விதத்தில் மாநாடு நடந்த அரங்கை சுற்றிலும் இளம் புத்தபிக்குகள் பலர் நின்று கொண்டு கல்வீச்சில் ஈடுபட்டு அந்த மாநாட்டையே நடைபெறவியலாமல் செய்த - எந்த மதத்தின் அடிப்படை உணர்விற்கும் ஒத்துவராத செயல் அங்கு புத்தத் துறவிகளால் அரங்கேற்றப்பட்டது.
உலக அளவில் முதலாளித்துவம் மிகவும் பிற்போக்கானதாக ஆகிவிட்ட நிலையில் தோன்றி வளர்ந்த இந்தியா, இலங்கை போன்ற நாடுகளின் முதலாளித்துவ-ஜனநாயகம் அரைவேக்காட்டுத் தன்மை கொண்டதாகவே இருந்தது. மதத்தை அரசியலில் இருந்து பிரிப்பது என்ற ஜனநாயகத்தின் மிக அடிப்படையான கோட்பாடு இந்நாடுகளில் அமுலாகவில்லை.
மக்களின் பின்தங்கிய மனநிலை காரணமாக மதவாத எண்ணப்போக்குகளும் மதப்பிரச்சாரகர்களின் மேல் குருட்டுத்தனமான அபிமானமும் மரியாதையும் மிகுந்தே இருந்தன. இதனை மையமாகக்கொண்டு மதவாதிகள் குறிப்பிடத்தக்க செல்வாக்கினை இவ்விருநாட்டு அரசியல் களத்திலும் செலுத்தினர்; இன்னும் செலுத்திக் கொண்டும் உள்ளனர். இலங்கையின் இனப்பிரச்னை இத்தனை கடுமையாக ஆனதற்கு அந்நாட்டின் புத்த மத நிறுவனமும் ஒரு முக்கிய காரணமாகும்.
இனவெறி பாதையில் இடதுசாரி ஜே.வி.பி.
இது தவிர சில சிங்கள இடதுசாரி தீவிரவாத அமைப்புகளும் தமிழ்விரோத மனநிலையை வளர்த்து வந்தன. அவைகளில் மிக முக்கியமான அமைப்பு ரோகன விஜயவீராவின் ஜே.வி.பி என்று அழைக்கப்படும் "ஜனதா விமுக்தி பெருமனா' என்ற அமைப்பாகும். அந்த அமைப்பினர் புத்த பிக்குகளை போல் அல்லாது வேறு காரணங்களுக்காக தமிழ் விரோத மனநிலையை வளர்த்தனர். ஒருபுறம் தமிழர்களின் அவர்களது மக்கள் தொகை விகிதத்திற்கு அதிகமான வளர்ச்சி சிங்கள இளைஞர்களை குழப்பி அவர்களது மனதில் தமிழ் விரோத எண்ணத்தை உருவாக்குவதற்கு ஜே.வி.பி-யால் பயன்படுத்தப்பட்டது.
அது தவிர தனது அண்டைநாடான இந்தியாவின் மேலாதிக்க மனப்பான்மையும் அதன் செல்வாக்கு மண்டலத்திற்கு இலங்கையைக் கொண்டுவர அது மேற்கொள்ளும் முயற்சிகளும் ஜே.வி.பி அமைப்பினால் கடுமையான வெறுப்புடன் பார்க்கப்பட்டன. அதன் காரணமாக அந்த அமைப்பு குறிப்பாக மலையகத் தமிழர்களை இந்திய ஏகாதிபத்தியத்தின் ஏஜெண்டுகள் என்று பார்த்தது.
ரோகன விஜயவீரா மாஸ்கோ பல்கலைகழகத்தின் மாணவராக இருந்த போதிலும் கம்யூனிஸ்ட அரசியலில் ஈடுபாடு உடையராக தன்னைக் காட்டிக் கொண்ட போதிலும் சேகுவாரோவை தனது ஆதர்ச புரட்சியாளராக அறிவித்துக் கொண்டிருந்தாலும் அவருடைய அரசியல் பக்குவமற்ற பார்வையினை மலையகத் தமிழர்கள் குறித்த அவருடைய அணுகுமுறை கேவலமாக வெளிக்காட்டியது. நிலவிய முதலாளித்துவ அரசியலில் குறுக்குவழியில் அதிகாரத்திற்கு வரவேண்டும் என்பதற்காக அவர் சிங்கள தேசிய வெறி உணர்வினை தனது அமைப்பின் உணர்ச்சிபூர்வ பிரச்சாரங்களின் மூலமாக அதாவது இங்கு சில இடதுசாரி அமைப்புகள் தமிழ் இன உணர்வினை தூண்டும் விதத்தில் தூண்டினார்.
போராளி அமைப்புகளின் உதயம்
இந்த அமைப்புகளின் கடுமையான எதிர்ப்பின் காரணமாகவும் இலங்கையை அடுத்தடுத்து ஆண்ட கட்சிகள் தமிழர் பிரச்னையை ஓரளவேனும் தீர்க்க எடுத்த நடவடிக்கைகள் முடக்கப்பட்டன. இதன் விளைவாக தமிழ் இளைஞர்களின் மனதில் ஒரு கடுமையான வெறுப்பும் விரக்தியும் மேலோங்கி நின்றது. தமிழர் விடுதலை முன்னணி போன்ற நாடாளுமன்றவாத கட்சிகள் கடைபிடித்த சிங்கள ஆளும் வர்க்கத்துடனான சமரசப்போக்கு அவர்களுக்கு உடன்பாடானதாக இல்லை. எனவே அவர்களது குட்டி முதலாளித்துவத் தன்மை வாய்ந்த மனக்கொதிப்பினை உரியவிதத்தில் பிரதிபலித்த பல இளைஞர் அமைப்புகள் உருவாயின.
அவற்றில் மிக முக்கியமானது "பிளாட்' என்ற அமைப்பாகும். அந்த அமைப்புகள் தமிழ் உரிமைக்காக ஒருபுறம் போர்க்குணம் மிக்க போராட்டங்களை நடத்தியதோடு அப்பாவி தமிழ் மக்கள் இராணுவத்தால் தாக்கப்படும் போது அதனை எதிர்த்து தாக்கவும் செய்தனர். இந்த போக்குகள் இதை ஒத்த வேறுபல அமைப்புகள் உருவாவதற்கும் வழிவகுத்தன.
இந்தியா-இலங்கை உறவு
வெளிப்படையாக இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் அத்தனை பெரிய பூசல் நிலவுவது போன்ற சூழ்நிலை தெரியாதிருந்த போதிலும் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் ஒரு விரிசல் என்பது இருந்து கொண்டே இருந்தது. அதற்கு பொருளாதார, அரசியல் ரீதியான காரணங்கள் பல இருந்தன. பொருளாதார ரீதியாக இந்திய அரசு இந்திய ஏகபோகங்களின் வசம் குவிந்திருந்த உபரி மூலதனத்திற்கு முதலீட்டுத்தளம் தேடும் வேலையில் ஈடுபட்டிருந்தது. அந்த மூலதனத்தை அது தென்கிழக்கு ஆசியாவில் தன்நாட்டை சுற்றியிருந்த சிறு நாடுகளில் பெருமளவு செய்வதே சுலபமானது என்று அது கருதியது. அப்படிப்பட்ட நாடுகளில் இலங்கையும் ஒன்றாக இருந்தது. எனவே இலங்கையை அது தனது செல்வாக்கு மண்டலத்திற்குள் வைத்திருக்க விரும்பியது.
ஆனால் சிங்கள மக்களின் மனநிலை இந்திய நாடு, அதன் ஒரு தேசிய இனமாக தமிழர்களைக் கொண்டிருந்ததையும் அதே தமிழ் இனத்தை சேர்ந்த ஒரு குறிப்பிடத்தக்க அளவிலான தங்கள் நாட்டின் மக்கட்பகுதி இருந்ததையும், தங்களது கல்வி ரீதியான வளர்ச்சியோடு கோடிக்கணக்கான தங்கள் இன மக்கள் அருகில் இந்திய நாட்டில் இருக்கிறார்கள் என்பதால் பெருமிதத்துடன் இருப்பதையும் ஒருவித எரிச்சலுடன் பார்த்தது. அத்துடன் நாம் ஏற்கனவே பார்த்தது போல் இலங்கையின் ஜே.வி.பி. போன்ற அமைப்புகள் தமிழர்களை இந்தியா தனது ஏகாதிபத்திய நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு ஒரு சாதனமாக பயன்படுத்துகிறது என்ற எண்ணப்போக்கையும் பரப்பிவிட்டிருந்தன. இதன் விளைவாக இலங்கையின் ஆட்சியாளர்கள் தங்களுக்கு தேவையான பொருளாதார உதவி போன்றவற்றை பெறுவதற்கு இந்தியாவை தவிர்த்த வேறு பிரிட்டன், அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளையே நாடினார்கள்.
போராளி குழுக்களுக்கு இந்தியா அளித்த ஆதரவு
இந்த மனநிலையில் இருந்த இலங்கையை தன் வழிக்குக் கொண்டுவர இந்தியா விரும்பியது. இலங்கையில் தோன்றிய இனப்பிரச்னை அதனுடைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு ஒரு ஏற்ற கருவியாகப் பயன்பட்டது. இந்திய அரசு, இலங்கைத் தமிழரிடையே தோன்றிய போர்க்குணமிக்க அமைப்புகள் பலவற்றிற்கு பல்வேறு வகையான உதவிகளை தனது இந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் செய்யத் தொடங்கியது. தமிழ்நாட்டின் பல இடங்களில் அந்த அமைப்புகள் பயிற்சி முகாம்கள் அமைத்துக்கொள்ள அனுமதி வழங்கியது. அவற்றிற்கு ஆயுத உதவியும் செய்தது.
இதன் விளைவாக இலங்கை அரசிற்கு தோன்றிய சிக்கல் இன்னும் தீவிரமாகியது. இவ்வாறு இந்திய அரசு இலங்கைத் தமிழ் இளைஞர்களுக்கு உதவி வழங்கியதும், ஆயுதங்கள் அளித்ததும் திருமதி. இந்திரா காந்தி அவர்களின் ஆட்சி காலத்தில் பெருமளவு நடைபெற்றன. இது அத்தனை இரகசியமாக செய்யப்படவில்லை. இந்த நடவடிக்கை சிங்கள தமிழ் இன வேறுபாட்டினை இன்னும் அதிகப்படுத்தி சிங்களர் மத்தியில் தமிழ் வெறுப்புணர்வை மேலும் அதிகப்படுத்தியது.
மாகாண கவுன்சில்கள்
இந்த கட்டத்தில் சிங்கள ஆட்சியாளர்களும் சில வகையான தீர்வுகளுக்கு வர உடன்பட்டனர். அதாவது மாவட்ட வாரியான கவுன்சில்கள் அமைத்து அவற்றிற்கு சில அதிகாரங்கள் வழங்க அவை முன்வந்தன. அதன் மூலம் அதிகார பகிர்வு என்பது ஓரளவு தமிழர் வசிக்கும் பகுதிகளிலும் தமிழர்களுக்கும் கிடைக்கும். அது நாம் முழுக்க முழுக்க சிங்களர்களால் ஆளப்படுகிறோம் என்ற தமிழ் மக்கள் கொண்டிருந்த உணர்விலிருந்து அவர்களை மீட்டெடுக்கும் என்று எண்ணினர்.
ஆனால் தமிழர் பகுதிக்கு மட்டும் இந்த அதிகாரப்பகிர்வினை கொடுத்தால் அது தமிழ் ஆதரவு போக்கு என்ற உணர்வினை சிங்கள மக்களிடம் ஏற்படுத்திவிடும் என்பதால் நாடு முழுவதிற்கும் அமலாக்கப்பட்டது. மொத்தத்தில் 12 மாவட்ட கவுன்சில்கள் அமைக்கப்பட்டன. அவற்றில் மூன்று மாவட்ட கவுன்சில்கள் தமிழர் வாழும் பகுதிகளில் இருக்கும் என்று முடிவு செய்யப்பட்டது. இதில் விசித்திரம் என்னவென்றால் தங்களுக்கு மாவட்ட கவுன்சில்கள் வேண்டும் என்று சிங்கள மக்கள் கோராமலேயே அவர்களுக்கு மாவட்ட கவுன்சில் கிடைத்ததுதான்.
இதுபோன்ற கண்துடைப்பு நடவடிக்கைகள் தமிழ் மக்கள் மனதில் அவர்களின் கல்வி உரிமை பறிக்கப்பட்டதாலும் மொழி உணர்வு சிங்களம் மட்டுமே ஆட்சிமொழி என அறிவிக்கப்பட்டதால் பெரிதும் புண்பட்டிருந்ததாலும் ஏற்பட்டிருந்த காயங்களுக்கு போதிய மருந்தாய் இல்லை. எனவே போர்க்குணமிக்க இளைஞர் நடவடிக்கைகள் தமிழ் பகுதிகளில் மென்மேலும் அதிகரித்தன. இந்த நடவடிக்கைகளை இராணுவ ரீதியாக எதிர்கொள்வதற்கு அரசிற்கு பெரும் இராணுவ செலவு ஏற்பட்டது. அதனால் பணவீக்கமும் விலைஉயர்வும் இலங்கையின் பொருளாதாரத்தை வாட்டி வதைக்கத் தொடங்கின.
கருப்பு ஜீலை
இந்நிலை ஒட்டு மொத்தமாக மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை இலங்கையின் ஆட்சியாளர்கள் மேல் தோற்றுவித்தது. மக்கள் ஏறக்குறைய வெடித்துக் கிளம்பும் கிளர்ச்சி மனநிலையுடன் இருந்தனர். இந்நிலையில்தான் இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய கோரமான கருப்பு ஜுலை என அழைக்கப்படும் ஜுலை 23 - 1983 சம்பவங்கள் ஜெயவர்தனா அரசால் திட்டமிட்டு மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காகவும் அவர்களுக்குள் இன பிளவினையும் வெறுப்பையும் ஏற்படுத்தும் நோக்கத்தோடும் தூண்டிவிடப்பட்டன.
அன்று யாழ்ப்பான நகருக்கு வெளியே ரோந்து சென்று கொண்டிருந்த இலங்கை இராணுவத்தின் ஜீப் ஒன்றில் குண்டு வெடித்ததில் இரண்டு சிங்கள ராணுவ வீரர்களுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன. அப்போது அந்த ஜீப்பிற்குப் பின்னால் வந்து கொண்டிருந்த ராணுவ வாகனங்களில் வந்த ராணுவ வீரர்கள் வாகனத்திலிருந்து இறங்கி குண்டு வெடித்ததற்கு காரணமானவர்களைத் தேடிய போது எல்.டி.டி.ஈ அமைப்பினருக்கும் அவர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. அதில் 13 சிங்கள , ராணுவ வீரர்களும் ராணுவ அதிகாரிகளும், விடுதலைப் புலிகள் சிலரும் உயிரிழந்தனர்.
இத்தாக்குதல் எல்.டி.டி.ஈ தளபதி கிட்டுவால் நடத்தப்பட்டது. உயிரிழந்த சிங்கள ராணுவ வீரர்களின் உடலைத் தகனம் செய்வதற்காக கொழும்பிற்குக் கொண்டு சென்று அங்கு மக்களின் பார்வைக்கு அவற்றை வைத்து அப்போது ஆட்சியிலிருந்த ஜெயவர்தனே தலைமையிலான யு.என்.பி அரசாங்கம் தமிழ் மக்கள் மீது கொலை வெறித்தாக்குதலைக் கட்டவிழ்த்துவிட்டது. தலைநகர் கொழும்பில் தொடங்கிய இத்தாக்குதல் படிப்படியாக கல்லி, மாதரை, கம்பலா, நாவலப்பிட்டி, புசல்வா, கண்டி, நுவரேலியா, பதுல்லா, அனுராதபுரம் என அனைத்து இடங்களுக்கும் பரவியது. பல தமிழருக்குச் சொந்தமான வீடுகளும், வியாபார நிறுவனங்களும் தீக்கிரையாக்கப்பட்டன. வாகனங்களில் பயணம் செய்தவர்கள் வாகனங்களோடு சேர்த்து வைத்துக் கொளுத்தப்பட்டனர்.
இதன் தொடர்ச்சியாக வெளிக்கடைச் சிறையில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடைக் காவல் கைதிகளாக இருந்த 53 தமிழர்கள் சிங்களக் கைதிகளால் கொலையுண்டனர். தமிழ் கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த அறைகளின் சாவிகளை எளிதில் சிங்களக் கைதிகள் எடுக்கும் வண்ணம் சிறைக்காவலர்கள் வைத்திருந்து தாக்குதலுக்கு உதவினர். நாடுமுழுவதும் நடந்த தாக்குதல் அனைத்தையும் காவல்துறை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. ஆளும் யு.என்.பி. கட்சியினர் கலவரக்காரர்களோடு கைகோர்த்துச் செயல்பட்டனர். ஒட்டு மொத்தத்தில் இக்கலவரத்தில் 3000 பேர்வரை உயிரிழந்ததாக அதிகார பூர்வமற்ற தகவல்கள் கூறின. 18000 வீடுகளுக்கு மேல் சேதமடைந்தன. தீக்கிரையாக்கப்பட்ட வீடுகளில் பற்றி எரிந்த தீயை அணைக்க வந்த தீயணைப்பு வாகனங்களும் கலவரக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டன.
ஜீலை 23 அன்று தொடங்கிய கலவரத்தை 29ம் தேதி வரை முழுவீச்சில் நடக்க அனுமதித்துவிட்டு 29ம் தேதியன்று கலவரத்தைக் கட்டுப்படுத்த என்று துப்பாக்கிச் சூடு ஒன்றினை நடத்தி கலவரத்தை அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது. அத்துப்பாக்கிச் சூட்டில் 15 சிங்கள கலவரக்காரர்கள் கொல்லப்பட்டனர். சிங்கள வெறியர்கள் இத்தகைய மிருகத்தணத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது தாக்குதலுக்கு ஆளாகி ஒளிய இடமின்றி அலைந்த பல தமிழர்களுக்கு சாதாரண சிங்கள மக்கள் பலரும், முஸ்லீம் குடிமக்களும் புகலிடம் தந்து காப்பாற்றினர்.
ஆயிரக்கணக்கில் இக்கலவரத்தில் தமிழ் மக்கள் கொலையுண்டதோடு அவர்களின் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள உடைமைகளும் சூறையாடவும், களவாடவும்பட்டன. பல லட்சகணக்கான மக்கள் அரசு முகாம்களில் தஞ்சமடைந்தனர், லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்தியாவிற்கு அகதிகளாக வந்து குவிந்தனர்.
இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்யாமல் வைத்திருந்து அதனை கொழும்பிற்கு கொண்டு சென்று மக்களின் பார்வைக்கு வைத்து அதன்மூலம் தமிழ் எதிர்ப்பு வெறி உணர்வினை எவ்வளவு தூரம் தூண்ட முடியுமோ அவ்வளவு தூரம் தூண்டி இலங்கை வரலாற்றின் களங்கமாய் இன்றும் என்றும் விளங்கப்போகும் இரத்தக்களரியை சிங்கள வெறிவாத அமைப்புகளின் துணையோடு இலங்கை ஜனாதிபதி ஜெயவர்தனே கிளப்பிவிட்டார்.
இந்தியா, இலங்கை தமிழ் இளைஞர்களுக்கு முகாம்கள் அமைக்கவும் இராணுவ பயிற்சி பெறவும் அனுமதி அளித்த வேளைகளில்கூட தமிழ்நாட்டின் சாதாரண மக்கள் இலங்கை தமிழர் பிரச்னை பற்றியோ அங்கு நடந்துவரும் இன ஒடுக்குமுறை அதற்கு எதிரான போராட்டம் ஆகியவை குறித்தோ பெரிதும் அறியாதவர்களாகவே இருந்தனர். ஆனால் 1983ல் இலங்கையில் அரசின் திட்டமிட்ட சதியினால் கட்டவிழ்த்துவிடப்பட்ட தமிழர் மீதான வன்முறை முன்னெப்போதும் கண்டிராத அளவில் ஒரு சகோதரத்துவ உணர்வினை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது.
தமிழக மக்களின் சகோதரத்துவ எழுச்சி
இலங்கை தமிழருக்கு ஆதரவாக செயல்பட்ட தமிழ் அமைப்புகளுக்கு நன்கொடைகள் குவிந்தன. இலங்கை தமிழ் அமைப்புகள் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கண்காட்சிகள் நடத்தி இலங்கை தமிழ் மக்களின் அவல நிலையினை தமிழ்நாட்டு மக்களிடம் கொண்டுவந்தன. மறைந்த திரு. ஆண்டன் பாலசிங்கம் போன்றவர்கள் இலங்கை தமிழர் போராட்டத்தினை மார்க்சிய அடிப்படையிலும் விளக்கிக் கூறினர். அயர்லாந்து விடுதலை இயக்கத்தை மார்க்ஸ் ஆதரித்து எழுதியது இலங்கை தமிழர் போராட்டத்திற்கு ஆதரவாக மேற்கோளாகக் காட்டப்பட்டது. இக்கால கட்டத்தில்தான் இலங்கை தமிழர் விடுதலை எழுச்சியின் மிக ஆக்கபூர்வமான தோற்றம் பொலிவுடன் உலகெங்கிலும் தூக்கி நிறுத்தப்பட்டது.
இலங்கை அரசியல் வரலாற்றிலும் இக்காலகட்டம் ஒரு மிக முக்கிய திருப்பு முனையாக இருந்தது. அதாவது அதுவரை பிளாட், டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற ஆயுதம் தாங்கிய அமைப்புகள் டி.யு.எல்.எப் என்ற ஆயுதமேந்தாத தமிழ் ஆதரவு அரசியல் இயக்கத்தோடு எத்தனை முரண்பாடுகள் இருந்தாலும் அவற்றை ஆயுதம் தாங்கிய பூசல்களின் மூலமாக வெளிகாட்டாமல் செயல்பட்டுவந்தன. ஆனால் 1983 கலவரங்களுக்கு பின்பு தமிழர் போராட்டத்தின் தலைமை எல்.டி.டி.ஈ அமைப்பின் கரங்களுக்கு பிரதானமாக சென்றுவிட்டது. அதாவது இன்னும் சரியாக கூறுவதானால் இயக்கத்தின் தலைமை எல்.டி.டி.ஈ அமைப்பின் துணிச்சல்மிக்க ஆயுத நடவடிக்கைகளால் தட்டிபறிக்கப்பட்டது.
மக்கள் இயக்க பின்னணி இல்லாமல் உருவான எல்.டி.டி.ஈ.
எந்த ஒரு நாட்டிலும் எந்தவொரு ஆயுதம் தாங்கிய கிளர்ச்சியும் அதனால் பயன்பெரும் மக்கள் மத்தியில் வேரூன்றியுள்ள - பரந்துபட்ட மக்களின் போராட்ட வலிமையினைப் பறைசாற்றவல்ல- இயக்கங்களின் பின்னணியிலேயே நடைபெற்றுள்ளன. ஆனால் இலங்கையை பொறுத்தவரை எல்.டி.டி.ஈ தலைமை இலங்கை தமிழ்மக்களின் போராட்டத்தில் தலைஎடுத்த நாள் முதற்கொண்டு சாதாரண தமிழ் மக்களின் ஒற்றுமையினை சாத்வீக முறையில் இயக்கங்கள் மூலம் பறைசாற்றும் போக்கு படிப்படியாக மட்டுபடுத்தப்பட்டது. நாளடைவில் அது அறவே இல்லாமலும் போய்விட்டது.
இதற்கிடையில் இந்திய அரசின் ஆதரவோடும் இந்திய தமிழ்மக்களின் மாபெரும் தார்மீக ஒத்துழைப்போடும் இலங்கை அரசை எல்.டி.டி.ஈ-யின் இராணுவ நடவடிக்கைகள் ஆட்டம்காணச் செய்தன. எங்கே தனது ஒட்டுமொத்த செல்லுபடித்தன்மையும் நிலைகுலைந்துவிடுமோ என்று எண்ணிய இலங்கை ஆட்சியாளர்களும் அவர்களின் தலைவர் ஜே.ஆர்.ஜெயவர்தனேயும் இப்பிரச்னையில் தலையிட்டு இதன் தீர்வுக்கு இராணுவ, பொருளாதார ரீதியாக உதவக்கோரி இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு படைஎடுக்கத் தொடங்கினர். ஆனால் ஜெயவர்தனே எதிர்பார்த்த ஒத்துழைப்பு அந்நாடுகளில் இருந்து அவருக்கு கிட்டவில்லை.
அந்நாடுகள் அவை முதலாளித்துவ ஏகாதிபத்திய அமைப்புகளாக இருப்பதால் அந்தந்த நாடுகளின் ஏகாதிபத்திய முதலாளித்துவ நலன்களை மனதிற்கொண்டே செயல்படுபவைகளாக இருந்தன. அதாவது இலங்கையை போன்ற ஒரு மிகச்சிறு சந்தை வளத்தை கொண்டுள்ள நாட்டுடன் உறவை மேம்படுத்துவதற்காக இந்தியா போன்ற மிகப்பெரும் சந்தைவளம் கொண்ட முதலாளித்துவ ரீதியில் ஒரு பெரும் பொருளாதார சக்தியாக உருவாகி வளர்ந்துவருகிற நாட்டுடன் ஒரு உரசலை ஏற்படுத்திக் கொள்ள அந்நாடுகள் விரும்பவில்லை. எனவே அந்நாடுகள் இலங்கை ஆட்சியாளர்களை இந்தியா பக்கம் இப்பிரச்னைக்கான தீர்வைக்கோரி அணுகுமாறு தள்ளின. இந்தியாமீது மனப்பூர்வமான எந்த உறவையும் கொண்டிருக்க விரும்பாதவராக இருந்த போதிலும் வேறுவழியின்றி இந்தியாவை அணுக வேண்டிய நிர்ப்பந்தம் இலங்கை ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதியான ஜெயவர்த்தனேக்கு இதனால் ஏற்பட்டது.
வேறுவழியின்றி இந்தியாவை அணுகிய ஜெயவர்த்தனே
இதனைத் தொடர்ந்து இலங்கை ஆட்சியாளர்கள் இந்தியாவை அணுகியதன் மூலம் உருவானதே இந்திய-இலங்கை ஒப்பந்தம் ஆகும். இதன்படி விடுதலைப் புலிகள் தங்களது ஆயுதங்களை இந்திய அமைதிப்படையிடம் ஒப்படைக்க வேண்டும். கூடுதல் அதிகாரம் கொண்ட மாகாண கவுன்சில்கள் யாழ்ப்பாணம் மற்றும் இலங்கையின் கிழக்கு பகுதியான திரிகோணமலை, பாட்டிகோலா ஆகிய நகர்களை உள்ளடக்கிய பகுதிகளில் ஏற்படுத்தப்படும். தமிழ் பிரதேசம் அனைத்திற்குமான மாகாண கவுன்சிலுடன் இணைந்திருப்பதா? இல்லையா? என்பது ஒரு வாக்கெடுப்பின் மூலம் கிழக்குப் பகுதியில் முடிவு செய்யப்படும். சிங்களத்துடன் கூட தமிழும் ஆட்சி மொழியாக நீடிக்கும். ஒரே பிரதேசமாக திகழ்வதா இல்லையா என்பதை மையமாக வைத்து நடைபெறும் பொது வாக்கெடுப்பு இந்தியாவின் மேற்பார்வையின் கீழ் நடைபெறும் இது போன்றவை இந்த இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் மிக முக்கிய சரத்துக்களாகும்.
இந்த ஒப்பந்தத்தை டெல்லியில் வைத்து பிரபாகரனை ஏற்றுக்கொள்ளச் செய்த பின்னர் இந்தியா தனது துருப்புக்களை இலங்கைக்கு அனுப்பியது. இந்திய அரசின் பார்வையில் விடுதலைப் புலிகள் வைத்திருந்த ஆயுதங்கள் பலவும் அவர்களால் வழங்கப்பட்டவையே என்ற எண்ணமே இருந்தது. ஆனால் விடுதலைப்புலியினரோ உலக அளவில் தோன்றிவிட்ட பொதுச் சந்தையிலிருந்து பல ஆயுதங்களை வாங்கியிருந்தனர். எனவே இந்திய அமைதிப்படை வசம் அவர்கள் ஒப்படைத்த ஆயுதங்களைக் காட்டிலும் அதிகமான ஆயுதங்கள் விடுதலைப்புலிகளின் கைவசம் இருந்தன.
டெல்லியில் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை பிரபாகரன் ஏற்றுக் கொண்டார் என்று முன்வைக்கப்பட்ட கருத்துக்கு மாறாக யாழ்ப்பாணம் சென்றதும் ஒரு மிகப்பெரும் மக்கள் கூட்டத்தைக் கூட்டி இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் தனக்கு இருக்கக்கூடிய சந்தேகங்களை வெளிப்படுத்தி இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதற்கு பிரபாகரன் பிள்ளையார்சுழி போட்டார்.
சிங்களர்-தமிழர் இருவராலும் ஆக்கிரமிப்பு படை என்று பார்க்கப்பட்ட இந்திய அமைதிப்படை
இதே சமயத்தில் இப்படிப்பட்ட ஒரு நிர்ப்பந்த நிலையை உருவாக்கி தனது மேலாதிக்கப் போக்கை நிலைநாட்டும் ஒரு ஒப்பந்தத்தை இலங்கையை தன்னுடன் செய்து கொள்ள செய்ததற்கு சிங்கள மக்களிடையே மட்டுமல்ல சிங்கள ஆட்சியாளரான பிரேமதாசாவிடமும் கடும் வெறுப்பும் எதிர்ப்பும் ஏற்பட்டன. அச்சமயத்தில் பிரமதாசா இந்திய அமைதிப்படையை எதிர்த்து போரிட விடுதலைப்புலிகளுக்கு உதவி செய்தார்.
இந்திய அமைதிப்படை தமிழர்-சிங்களர் என்ற பாகுபாடு இன்றி ஒட்டுமொத்த இலங்கை மக்கள் அனைவராலும் ஒரு ஆக்கிரமிப்பு படை என்றே பார்க்கப்பட்டது. வழக்கமாக அனைத்து முதலாளித்துவ அரசுகளும் பராமரிக்கும் இராணுவங்கள் எத்தகைய மனநிலையோடு செயல்படுமோ அத்தகைய மனநிலையுடனேயே இந்திய இராணுவமும் இலங்கையில் செயல்பட்டது. ஒருபுறம் அதன் செயல்பாடு குறித்து பல புகார்கள் எழுந்தன.
மறுபுறம் அதற்கு தலைமை ஏற்ற இந்திய இராணுவ தளபதிகள் ஒரு கையையும் காலையும் கட்டிக்கொண்டு சண்டையிடுவது போன்ற ஒரு சண்டையில் தாங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளோம் என்று கூறினர். அதாவது பொது மக்களுக்கு தீங்கெதுவும் இழைக்க கூடாது என்று பொதுவாக இந்திய அமைதிப்படையினருக்கு கொடுக்கப்பட்டிருந்த அறிவுரை குறித்தே அவர் அவ்வாறு கூறினார். இந்த நிலையில் இந்திய அமைதிப் படை அங்கு எதற்காக அனுப்பப்பட்டதோ அந்த நோக்கத்தை அதனால் நிறைவேற்ற முடியவில்லை.
இங்கு தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக உண்மையிலேயே செயல்பட்ட அமைப்புகளும் அதனை தங்களது தேர்தல் அரசியல் ஆதாயத்திற்காக ஆதரித்தவர்களும் பல்வேறு பக்குவமற்ற கோரிக்கைகளை இந்த விசயத்தில் முன் வைத்து வந்தனர். அவர்கள் பலரின் கோரிக்கை இந்தியா-இலங்கைப் பிரச்னையில் தலையிட்டு தீர்வுகாண வேண்டும் என்பதில் தொடங்கி தமிழீழத்தை அமைத்துக் கொடுப்பதற்காக இந்தியா தனது இராணுவத்தையே அனுப்ப வேண்டும் என்பது வரை சென்றது.
ஆனால் இந்தியா மட்டுமல்ல எந்தவொரு முதலாளித்துவ நாடும் அது பிறநாடுகளுடன் கொண்டுள்ள உறவுகளை ஒரு குறிப்பிட்ட எண்ணத்தை மனதிற்கொண்டே பேணவும் பராமரிக்கவும் செய்யும். அது தன்னாட்டு முதலாளிகளின் பொருட்கள் விற்பனையாவது மற்றும் அதன் மூலதனம் அங்கு முதலீடு செய்யப்படுவது என்ற நோக்கினைக் கொண்டதாகவே அடிப்படையில் இருக்கும். இந்த அடிப்படை புரியாததாலோ அல்லது புரிந்திருந்தும் அரசியல் ஆதாயம் கருதி வெளிப்படுத்தாமலோ தமிழகத்தில் செயல்பட்ட அனைத்து தமிழ் ஈழ ஆதரவு அமைப்புகளும் இந்தியாவில் முகாம்கள் அமைத்து செயல்பட தமிழ் ஈழ அமைப்புகளுக்கு இந்திய அரசு அனுமதி கொடுத்தபோது அகமகிழ்ந்தன. அடுத்து இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்று கோரின.
இந்தியஇலங்கை ஒப்பந்தத்தின்படி இந்திய இராணுவம் இலங்கைக்கு அனுப்பப்பட்டது. ஆனால் அது சிங்கள இராணுவத்துடன் போரிட்டு தமிழ் ஈழத்தை அமைத்துக் கொடுப்பதற்காக அனுப்பப்படவில்லை. மாறாக அது அங்கு செயல்பட்ட தமிழீழ ஆயுதம் தாங்கிய குழுக்களிடம் இருந்து ஆயுதங்களை பறிக்கவே அனுப்பப்பட்டது. இந்த நிலையில் முதலில் சிலகாலம் வாயடைத்துப்போயிருந்த தமிழக மக்களிடம் சிறிது காலம் கழித்து ஐ.பி.கே.எப்ற்கு எதிரான ஒருவகை எதிர்ப்பும் தலைதூக்கத் தொடங்கியது. இந்நிலையில் அப்போது ஆட்சியில் இருந்த தமிழக முதல்வரின் வேண்டுகோளுக்கு இணங்க இந்திய அமைதிப்படை தனது நோக்கத்தை நிறைவேற்றாமல் நாடு திரும்ப வேண்டிய நிலை அதற்கு ஏற்பட்டது. இந்திய-இலங்கை ஒப்பந்தமும் நிறைவேற்றப்படவில்லை.
சூழ்நிலை இத்தனை நெருக்கடி சூழ்ந்ததாக ஆன நிலையில் விடுதலைப்புலிகளைத் தவிர தமிழ் ஈழத்திற்கான போராட்டக்களத்தில் யாரும் இல்லை என்றநிலை படிப்படியாக விடுதலைப்புலிகளால் ஏற்படுத்தப்பட்டது. தமிழ் விடுதலை முன்னணியும் இலங்கை ஆட்சியாளர்களை சார்ந்து நின்று அவர்களில் ஒரு பிரிவினர் மாற்றி மற்றொரு பிரிவினரை மாறிமாறி ஆதரித்து சில சலுகைகளை கூடுதலாகப் பெறுவதில் ஆர்வமுள்ளதாக இருந்ததேயன்றி அதனால் சரியான தருணங்களைக்கூட பயன்படுத்த முடியவில்லை.
தருணங்களைத் தவறவிட்ட விடுதலை முன்னணி
இலங்கையின் ஆளும்கட்சி தவிர பிற அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரு தேர்தலை பகிஷ்கரித்த சமயத்தில் தமிழர் விடுதலை முன்னணி மட்டும் அத் தேர்தலில் பங்கேற்றது. அத்தேர்தலில் கிழக்குப் பகுதியில் வாழ்ந்த சிங்கள மக்கள் அங்கு போட்டியிட்ட தமிழ் வேட்பாளர்களுக்கு ஏகோபித்து வாக்களித்தனர். அது மட்டுமின்றி மாகாண சுயாட்சி பெறும் விதத்தில் சிரிமாவோ பண்டாரநாயகா கொண்டுவந்த வடக்குப் பகுதியையும் கிழக்குப் பகுதியையும் ஒருங்கிணைக்கும் திட்டத்திற்கு ஆதரவாக அது அணிதிரண்டிருக்கலாம். அதன் மூலம் சாதாரண சிங்கள மக்கள் மற்றும் அதன் ஒரு பெரும் அரசியல் கட்சி ஆகியவற்றுடன் இணைந்து தங்களின் அடிப்படை உரிமைகளை வென்றெடுத்திருக்கலாம். அப்போது அதை செய்ய டி.யு.எல்.எப். தலைவர்கள் தவறிவிட்டார்கள். விடுதலைப் புலிகளின் தலைமை நிலைநாட்டப்பட்டதற்கு பின்பு அதன் பிரமிக்கத்தகுந்த வெற்றிகளால் பரவசம் அடைந்த தமிழ் மக்களும் இந்த தமிழர் விடுதலை முன்னணி போன்ற அமைப்புகளைக் கண்டுகொள்ளவில்லை.
விடுதலைப் புலிகளிடம் தோன்றிய கோளாறுகள்
இந்த நிலையில் அதிகாரம் முழுவதும் தங்களது கரங்களிலேயே இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் தமிழ் ஈழத்திற்காக போரிட்ட பல குழுக்களின் தலைவர்களை கொலை செய்து அவர்களின் அமைப்புகளை நிர்மூலமாக்கும் வேலையை விடுதலைப் புலிகள் அமைப்பு செய்யலாயிற்று. இக்காலகட்டத்தில் யாழ்ப்பாணம் முழுவதையும் விடுதலைப்புலிகள் தங்கள் கைவசம் வைத்திருந்தனர். ஆனையிரவைத்தாண்டி இலங்கை இராணுவமும் அதன் நிர்வாகமும் நுழைய முடியாத ஒரு சூழ்நிலை உருவாக்கப்பட்டது.
போருக்கு ஆகும் செலவுகளை ஈடுகட்ட யாழ்ப்பாணப்பகுதியின் வசதிபடைத்த மக்களிடம் பெரும் தொகைகள் வசூலிக்கப்பட்டன. பொதுவாக மக்கள் இயக்கப்பின்னணி தொடர்ச்சியாக இல்லாது ஆயுதப் போராட்டத்தை மட்டும் நம்பியிருக்கும் அமைப்புகளிடம் தோன்றும் கோளாறுகள் பல விடுதலைப்புலிகளிடம் தோன்ற ஆரம்பித்தன. குருட்டுத்தனமான சிங்கள எதிர்ப்பு வெறியினைப் பரப்பி அதன் மூலம் அனைத்து சாதாரண அப்பாவி சிங்கள மக்களையும் தமிழர்களின் எதிரிகளாகப் பாவிக்கச் செய்வது, அவ்வப்போது தற்கொலைப் படைத் தாக்குதல்களால் அப்பாவி சிங்கள மக்களின் மரணத்திற்கு வழிவகுப்பது, தத்துவார்த்த சகிப்பு தன்மையின்றி போராடும் பிற தமிழ் குழுக்களைக் கையாள்வது, தாங்கள் எதையும் செய்ய முடிந்தவர்கள் என்று காட்டும் விதத்தில் உயர் பதவிகளில் உள்ளோரைக் கொலை செய்வது போன்றவை அவ்வமைப்பில் தோன்றி வளர்ந்த கோளாறான போக்குகளாகும்.
மக்கள் இயக்கப் பின்னணியினைக் கொண்டவர்கள் வழக்கமாக கையாளும் நடைமுறைகளில் இருந்து விடுதலைப் புலிகளின் நடைமுறைகள் பலவகைகளில் முற்றிலும் மாறுபட்டிருப்பதையே அவர்கள் செயல்பாட்டு முறையைப் பார்க்கும் போது நம்மால் அறியமுடிகிறது.
இந்திய மண்ணில் விடுதலைக்காக சமரசமற்றுப் போராடிய தியாகி. பகத்சிங் போன்ற மாமனிதர்கள் எப்போதும் தற்கொலைக்கு எதிராக நின்றார்கள் என்பதையே பார்க்கிறோம். தற்கொலை குறித்த அதற்கு எதிரான பகத்சிங்கின் கருத்து அவர் சுகதேவிற்கு எழுதிய கடிதத்தின் மூலம் வெளிப்படுகிறது அதாவது சுகதேவிற்கு விடுதலையோ அல்லது மரணதண்டனையே கிடைக்காமல் போனால் தற்கொலை செய்யும் அவரது எண்ணத்தை அவர் வெளிப்படுத்திய போது அக்கடிதத்தை பகத்சிங் எழுதினார்.
பகத்சிங் போன்றவர்கள் தங்கள் சாவு தாங்கள் படும் துன்பம் இவை அனைத்துமே மக்களிடையே எழுச்சியை ஏற்படுத்தி அதன்மூலம் ஆளும் வர்க்கத்திற்கு எதிரான மக்கள் இயக்கம் வலுப்பெற வேண்டுமென்றே விரும்பினார்கள். இதற்கு மாறாக விடுதலைப்புலிகள் அமைப்பினர் சையனைடு உண்டு மடியும்அதாவது அவர்களின் மரணம் ஒரு வகை விரக்தியை மக்களிடையே தோற்றுவிக்கும் நடைமுறையையே இன்று வரை பின்பற்றி வருகின்றனர். அதாவது ஒரு வகையான ஆயுத வழிபாடு தலைதூக்கி சராசரி மக்களிடம் இருந்து சாவு குறித்த கண்ணோட்டம் உள்பட அனைத்து விசயங்களிலும் அமைப்பு அந்நியப்படும் போக்கு இதனால் உருவாகி வளர்ந்துள்ளது.
விடுதலைப் புலிகள் செய்த வரலாற்றுத் தவறு
இந்த பின்னணியில்தான் விடுதலைப் புலிகளின் அரசியல் வரலாற்றிலேயே மிக அப்பட்டமான தவறான இராஜீவ் காந்தியின் கொலை நிகழ்ந்தது. இது எத்தனை தவறானதென்றால் மக்களின் விடுதலையை இலக்காக கொண்டுள்ள எந்தவொரு சரியான அமைப்பும் உயர்ந்த இலக்குகளற்ற தனிநபர்கள் போல் பழிவாங்கும் மனநிலையில் செயல்பட்டு தனக்கு உயிரூட்டமான சாதக தளமாக உள்ள ஒரு பகுதி மக்களின் ஆதரவினை இழக்கும் விதத்தில் செயல்படவேபடாது; அந்த அடிப்படையில் இராஜீவ் காந்தியின் கொலை விடுதலைப்புலிகளால் செய்யப்பட்டிராது என்று பலர் நம்பினர். அப்படி நம்பியவர்களை அதிர்நது போகச் செய்யும் விதத்தில் பிரபாகரனிடம் இருந்தே மறைமுகமான ஒரு ஒப்புதல் வாக்குமூலம் வந்தது. அது ஒரு துன்பியல் நிகழ்வு என்று அக்கொலையில் தங்களின் பங்கினை மறுக்காத வகையிலான ஒரு பதிலினை அவர் பின்னர் முன்வைத்தார்.
உலக அளவில் விடுதலைப் புலிகளுக்கு ஏற்பட்ட நிர்ப்பந்தங்கள்
இராஜீவ் காந்தி அவர்கள் தமிழ் மண்ணில் கொல்லப்பட்ட பின்பு அதற்கு முன்பு விடுதலைப்புலிகள் நிகழ்த்திய பல சகோதர இயக்கங்களின் தலைவர்களின் கொலைகளால் வெறுப்பும் சலிப்பும் கொண்டிருந்த தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகளை ஆதரிப்பதில் இருந்து பெரிதும் தங்களை விலக்கிக் கொண்டுவிட்டனர் என்றே கூறலாம். அதன் பின்னர் விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு நிதி வசூல் தமிழக மண்ணில் நடைபெற வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது.
பல வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களிடம் இருந்து பெறப்படும் நன்கொடைத் தொகைகளை வைத்தே ஆயுதங்கள் வாங்கி ஒரு அரசின் நிரந்தர இராணுவத்தை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. இராஜீவ் காந்தியின் கொலையை ஒட்டி இந்தியாவில் தடை செய்யப்பட்ட அந்த அமைப்பு உலகின் வேறுபல நாடுகளாலும் அடுத்தடுத்து தடைசெய்யப்பட்டது. இந்த தடைகள் அவர்கள் சுயேட்சையாக செயல்பட்டு நிதி ஆதாரம் திரட்டுவதைப் பெருமளவு பாதித்தது.
இந்த நிலையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து அதன் முக்கிய தளபதிகளில் ஒருவரான கருணா விலகி சிங்கள அரசியல்வாதிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படத் தொடங்கினார். இது இன்னொரு கட்ட பின்னடைவினை விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஏற்படுத்தியது.
பின்னடைவுகளை ஈடுகட்ட வல்லவை மக்கள் இயக்கங்களே
பின்னடைவுகளே இல்லாத போராட்டம் என்று எதுவும் இருக்கமுடியாது. ஆனால் அந்த பின்னடைவுகளின் போது அதனால் ஏற்படும் மனச்சோர்விற்கு மருந்தாகி அப்பின்னடைவுகளை முன்னேற்றப்படிகளாக மாற்றவல்லவை பரந்துபட்ட மக்களின் ஆதரவும் பின்னடைவுகளின் போது தோன்றும் பலவீனத்தை ஈடுகட்டும் விதத்தில் மக்களிடம் தோன்றும் எழுச்சிகளுமே ஆகும். ஆனால் அப்படிப்பட்ட மக்கள் எழுச்சியை தட்டி எழுப்பவல்ல ஒரு மக்கள் இயக்கப் பாதையை உரிய முக்கியத்துவம் கொடுத்து விடுதலைப் புலிகள் ஒரு போதும் இலங்கை தமிழ் மக்களிடையே வளர்க்கவே இல்லை. அதனால்தான் இன்று இத்தனை இராணுவ ரீதியான பின்னடைவு அவ்வியக்கத்திற்கு ஏற்பட்டுள்ள நிலையிலும் கூட யாழ்ப்பாண தமிழ் மக்களிடம் இருந்தோ கிழக்குப் பகுதி தமிழ் மக்களிடம் இருந்தோ ஒரு பெரும் எழுச்சியோ கிளர்ச்சியோ தோன்றவில்லை.
இங்கு ஒரு வாதம் முன் வைக்கப்படலாம் அதாவது யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பகுதிகளில் வாழும் தமிழ் இன மக்கள் துப்பாக்கி முனையில் நிர்வகிக்கப்படுகிறார்கள்; எனவே தான் அவர்கள் தங்களின் எழுச்சி முகத்தை காட்டாதிருக்கிறார்கள் என்று கூறலாம். ஆனால் கடந்த முப்பதாண்டு காலமாக ஆயுதம் தாங்கிய இலங்கை இராணுவத்தினுடனான தங்கள் அமைப்பினரின் சண்டையினை பார்த்துப் பார்த்து பழகிப் போன தமிழ் மக்கள் அச்சத்தினால் அவ்வாறு இருக்கிறார்கள் என்று கூறமுடியாது. மேலும் தனது இராணுவ வலிமையினை ஏறக்குறைய முழுமையாக போர்முனையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் திருப்பியுள்ள இலங்கை ஆட்சியாளர்கள் தமிழ் மக்களை அத்தகையதொரு அச்சத்தில் ஆழ்த்தி வைத்திருக்கக்கூடிய அளவிற்கு ஒரு மிகப் பெரும் இராணுவத்தை மக்களின் சிவில் நிர்வாகத்தில் ஈடுபடுத்தி இருக்கவும் வாய்ப்பில்லை.
இந்நிலையில் அங்குள்ள தமிழ் மக்களின் மனநிலையை விருப்பு வெறுப்பின்றி புரிந்து கொள்வது இலங்கையின் இனப்பிரச்னைக்கு தீர்வுகாண விரும்பும் அனைவரின் மிக முக்கியக் கடமையாகும். அந்த மனநிலையைப் புரிந்து கொள்வதற்கு இதுபோல் புதிதாக அந்நிய ஏகாதிபத்திய ஆட்சியில் இருந்து விடுதலை பெற்று முதலாளித்துவப் பாதையை தேர்ந்தெடுத்த பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட நாடுகளில் சிறுபான்மை தேசிய இனங்களின் நடைமுறையை பார்ப்பது பயன்தருவதாக இருக்கும். அதற்கு ஒரு பொருத்தமான எடுத்துக்காட்டாக தமிழ்நாட்டைக் கூறலாம்.
இலங்கை-இந்திய தமிழரின் ஒரே மாதிரி நிலைகள்
விடுதலை பெற்ற காலத்திலேயே ஓரளவு மூலதன திரட்சி பெற்றவராக தமிழ் முதலாளிகள் இருந்தனர். மலேசியா, பர்மா போன்ற நாடுகளில் லேவாதேவி செய்ததன் மூலம் அவர்களுக்கு கிடைத்த வட்டி மூலதனமும் இந்த மூலதனத் திரட்சியின் ஒரு குறிப்பிடதக்க பங்கினை ஆற்றியது. அம்மூலதனத்தைக் கொண்டு விடுதலைபெற்ற இந்தியாவில் அவர்கள் புதிதாக ஆட்சிக்கு வந்த முதலாளித்துவ அரசு உருவாக்கிக் கொடுத்த ஆதார வசதிகளையும் சலுகைகளையும் பயன்படுத்தி வளரத்தொடங்கினர். அவ்வாறு வளர்ந்து கொண்டிருந்த வேளையில் அவர்களுக்கு ஒரு அச்சம் தவிர்க்க முடியாமல் தோன்றியது. அதாவது தங்களைக் காட்டிலும் பெரும் மூலதனக் குவியலைக் கொண்டிருக்கக்கூடிய வடஇந்தியாவைச் சேர்ந்த மார்வாரி முதலாளிகளின் மூலதனப் படைஎடுப்பினால் தங்களது நலன் பாதிக்கப்படுமோ என்று அஞ்சினார்கள்.
மற்ற தேசிய இனங்களோடு ஒருங்கிணைந்து வெள்ளையரை எதிர்த்த போராட்டத்தில் தமிழ்மக்கள் ஈடுபட்டு வெள்ளை ஏகாதிபத்தியத்தை நாட்டைவிட்டு விரட்டும்வரை இந்த மார்வாடி முதலாளிகளின் படை எடுப்பால் தங்களது நலன் பாதிக்கப்படும் என்ற எண்ணம் அவர்களுக்கு பெரிதாக தோன்றவில்லை.
ஏனெனில் அந்நிய அரசாங்கம் தொழில் ரீதியாக அனைத்து சுதேசி முதலாளிகளின் வளர்ச்சிக்கும் கொடுத்திருந்த வாய்ப்புகளே குறைவு. ஆனால் விடுதலைபெற்ற பின் சுதேசி அரசாங்கம் ஏற்பட்ட சூழ்நிலையில் அந்த அரசாங்கம் பெரும்பான்மை ஹிந்தி மொழி பேசும் பகுதிகளை சேர்ந்த முதலாளிகளுக்கு சாதகமானதாக ஆகிவிடும் என்ற அச்சம் அவர்களிடையே தோன்றியது. அதன் விளைவாகவே 1952வாக்கில் அரசியல் அரங்கில் புதிதாக முளைத்த திராவிடக் கட்சிகளுக்குவிடுதலைப் போராட்டத்தில் அவர்களுக்கு ஒரு இம்மியளவு பங்குகூட இல்லாதிருந்தபோதிலும் தமிழ் முதலாளிகளின் பிரச்சார சாதனங்கள் முக்கியத்துவம் கொடுத்தன. பல்வேறு தியாகங்களை விடுதலைப் போராட்ட காலத்தில் செய்திருந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் அத்தகு பிரச்சார சாதனங்களால் படிப்படியாக ஓரங்கட்டப்பட்டன.
பிராந்திய முதலாளிகளின் இயக்கம்
அத்தருணத்திற்கு ஏற்ற விதத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது போன்ற முழக்கங்களை முன்வைத்தது. படிப்படியாக அந்த முழக்கங்களை பெரிதாக்கி தனித் தமிழ்நாடு வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் முன் வைத்தனர். அதை அக்கட்சியின் தலைவர்களுக்கே உரித்தான அடுக்குமொழியில் அடைந்தால் திராவிடநாடு இல்லையேல் சுடுகாடு என்று அறிவித்தனர். இவையனைத்தையும் தங்களுக்கு ஆதரவாக பிராந்திய முதலாளிகளின் ஆதரவு பெருகிவருவதை மனதிற்கொண்டே செய்தனர்.
தமிழ் பிராந்திய முதலாளிகளின் பார்வையோ அவர்களின் குறிக்கோளோ மிகவும் திட்டவட்டமாக இருந்தது. அதாவது அப்போது அகில இந்திய அளவில் பெரிதாக வளர்ச்சியடைந்த முதலாளித்துவக் குடும்பங்கள் பதினெட்டு இருந்தன என்றால் அதில் 6 பேர் பார்சி இனத்தைச் சேர்ந்த முதலாளிகளாக இருந்தனர், 6 பேர் மார்வாடி வகுப்பை சேர்ந்த முதலாளிகளாக இருந்தனர். எஞ்சியுள்ள அறுவரில் இருவர் தமிழ் முதலாளிகளாக இருந்தனர். இந்த இரு முதலாளிகளுக்கும் இவர்களின் உற்பததி பொருள்களுக்கு இந்தியா முழுவதும் சந்தை இருந்தது.
எனவே தங்களுக்கு ஆதரவாக முழக்கமிடும் சக்திகள் தீவிர, அதிதீவிர முழுக்கங்களை முன்வைத்த போதெல்லாம் அவற்றை எவ்வாறு தங்களது அகில இந்திய முதலாளிகளுடன் பேரம்பேசுவதற்கான வலுவைக் கூட்டிக்கொள்வதற்காக பயன்படுத்தமுடியும் என்று பார்பதிலேயே கண்ணும்கருத்துமாக இருந்தனர். அவர்களது நிறுவனங்களும் தங்களது வளர்ச்சி குறித்த ஆவல் மற்றும் வேட்கையுடன் இருந்தன. அதற்குக் காரணம் தமிழ்நாட்டில் பெருகிவளர்ந்து வந்த பொது மற்றும் தொழில்நுட்ப கல்விகற்றோர் எண்ணிக்கையாகும். தொழில் வளர்ச்சியில் அவர்கள் பெருமுனைப்பு காட்டியதற்கு வேறொரு காரணமும் உண்டு அதாவது இங்கு வடஇந்தியாவில் ஓடுவதைப்போல் வற்றாத ஜீவநதிகள் எவையும் ஓடவில்லை. எனவே குறைந்த கூலிக்குக் தங்கள் ஆலைகளில் வேலை செய்ய ஆட்கள் கிடைப்பர் என்பதையும் பயன்படுத்த நினைத்தனர்.
இந்த நிலையில் தனிநாடு கோரிக்கை அவர்களுக்கு கூடுதல் வலிமையை அகில இந்திய ஆட்சியாளர்களுடன் பேரத்தில் ஈடுபடுவதற்கு வழங்கினாலும் உண்மையாகவே தனிநாடு என்பது ஏற்பட்டுவிட்டால் தங்களது மூலதனப்பரவல் தளம் சுருங்கிவிடும் என்றும் அவர்கள் எண்ணினர். இந்நிலையில்தான் தனிநாடு கோரும் கட்சிகள் தடைசெயயப்படும் என்று அன்றைய பிரதமர் நேரு அறிவித்தார். அவர் அறிவித்த உடனேயே எந்தவகையான எதிர்ப்பையும் காட்டாமல் தங்களது தனிநாடு கோரிக்கையை தி.மு.க. கைவிட்டது.
தி.மு.க. இவ்வாறு பிராந்திய முதலாளிகளின் ஆதரவையும் பின்பலத்தையும் பெற்று படிப்படியாக வளர்ந்து வந்த போதிலும் அந்த ஆதரவு வெளிப்படையாக தலைகாட்டி உறுதிப்பட்டது இந்தி திணிப்பு எதிர்ப்புப் போரின் போதுதான். அது சாதாரண மக்களாலும் மாணவர்களாலும் தமிழ்நாட்டின் மீதான கலாச்சார படைஎடுப்பு என்று கருதப்பட்டது. உண்மையில் ஆங்கிலத்தை இணைப்பு மொழி ஸ்தானத்தில் இருந்து அகற்றி அவ்விடத்தில் இந்தியைக் கொண்டு வருவதற்காகவே மத்திய அரசின் அதுகுறித்த ஆணைப் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அகற்றப்படவிருந்த ஆங்கிலம் பிரதானப்படுத்தப்படாமல் இந்தி திணிப்பு தமிழ் மொழிக்கு எதிரான ஒன்று என்ற சித்திரமே முன்வைக்கப்பட்டது.
அதன் விளைவாக பிராந்திய முதலாளிகளின் முழு ஆதரவுடன் தி.மு.க. 1967ல் ஆட்சிக்கு வந்தது. அதன் பின்னர் பிராந்திய முதலாளிகளின் சுதிக்கு ஏற்ற விதத்தில் தனது தாளத்தை மாற்றி மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்று மாறிமாறி வாய்ப்பந்தல் போட்டு தனது நாடாளுமன்ற அரசியலை தி.மு.க. நடத்திக் கொண்டுள்ளது.
அது மட்டுமல்ல தற்போது ஒரு புது பார்முலாவே உருவாக்கப்பட்டு விட்டது. அதாவது நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தக் கட்சி வெற்றி பெறும் என்றால் எந்தக் கட்சி மத்தியில் ஆட்சிக்கு வர வாய்ப்புள்ள கட்சியோடு உடன்பாடு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறதோ அக்கட்சியே வெற்றிபெறும் என்பதே அந்த பார்முலாவாகும். இந்த அடிப்படையிலேயே லல்லு, முலாயம் போன்றவர்களைப் போல் அல்லாமல் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸின் உண்மையான ஸ்தாபன வலிமைக்கு பொருத்தமில்லாத விதத்தில் அதிக இடங்களை தி.மு.க. அக்கட்சிக்கு வழங்கியுள்ளது. இது எதை கோடிட்டு காட்டுகிறது என்றால் பிராந்திய முதலாளிகளின் மூலதனப்பரவல் ஏற்படுவதற்கு ஏற்ற சூழலை நிலவச் செய்வதே பிராந்திய முதலாளிகளின் ஆதரவையும் பின்பலத்தையும் பிராந்திய கட்சிகளுக்குப் பெற்றுத்தரும் என்ற சூழலையே விளக்குகிறது.
ஏறக்குறைய இதைஒத்த நிலைதான் இலங்கையிலும் உள்ளது. தமிழர் விடுதலை முன்னணி (டி.யு.எல்.எப்) நாடு முழுவதும் விரவிக் கிடக்கக்கூடிய தமிழ் மக்களின் நலனை மனதிற்கொண்டும் தமிழ் வியாபாரிகள் மற்றும் கல்விகற்ற அலுவலர்கள் அவர்களது வேலைவாய்ப்பை கருத்திற்கொண்டும் இதைஒத்த அதாவது ஒன்றுபட்ட இலங்கைக்குள் கூடுதல் அதிகாரங்கள் கொண்ட ஒரு சுயாட்சி அமைப்பை ஏற்படுத்துவதே தமிழ் மக்களின் நலனுக்கு குறிப்பாக தமிழ் முதலாளிகளின் நலனுக்கு உகந்ததாக இருக்கும் என்ற விதத்திலேயே செயல்பட்டது.
ஆனால் சிங்கள ஆட்சியாளர்களின் பல்வேறு அப்பட்டமான தமிழ் விரோத பிளவுவாத நடவடிக்கைகளால் இளைஞர்களும் மாணவர்களும் வெகுண்டெழும் சூழ்நிலை அங்கு உருவானது. அந்நிலையில் ஆயுதம் தாங்கிப்போராடும் நிலைக்கு வந்துவிட்ட குழுக்களின் கைக்கு தமிழ் மக்களின் அரசியல் ஆதரவு சென்றுவிட்டது. டி.யு.எல்.எப் போன்ற அமைப்புகள் உருவான பல்வேறு நல்லதருணங்களை பயன்படுத்தி தமிழ் இனப்பிரச்னைக்கு ஒரு சரியான தீர்வினை காணத்தவறியதும் அதன் பின்னடைவிற்கு ஒரு முக்கியக் காரணமாகும்.
மேலும் முதலாளித்துவ அரசியலை ஆட்டிப்படைக்கும் பதவி மோகம், பதவிக்காக சந்தர்ப்பவாத நிலைகள் எடுப்பது, பதவிகளைப் பயன்படுத்தி பொருள் ஈட்டுவது போன்ற காரியங்களில் எல்லா முதலாளித்துவ அரசியல் கட்சிகளைப் போலவே தமிழர் விடுதலை முன்னணியும் ஈடுபட்டது. அவற்றில் அவ்வமைப்பு ஈடுபட்டதும் அது விடுதலைப் புலிகள் போன்ற அமைப்புகளிடம் அரசியல் உத்வேகத்தை இழந்து நின்றதற்கு ஒரு முக்கியக் காரணமாகும்.
பெரும்பான்மை இலங்கைத் தமிழரின் விருப்பம்
இன்று 30 ஆண்டுகால கடுமையான போர் அதன் விளைவான உயிர்ச்சேதம் பொருட்சேதம் ஆகியவற்றுக்கு பின் இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் ஒன்றுபட்ட இலங்கையில் சுயாட்சி அதிகாரத்துடன் சேர்ந்து வாழ்ந்தால்கூட பரவாயில்லை என்ற பழைய நிலைக்கு-அதாவது தமிழர் விடுதலை முன்னணி போன்றவை மனதிற்கொண்டிருந்த அந்த பழைய நிலைக்கு- திரும்பியிருக்கின்றனர் என்பது போன்ற ஒரு சித்திரமே நம் கண்முன் எழுந்து நிற்கிறது. இத்தனை பின்னடைவுகள் எல்.டி.டி.ஈக்கு ஏற்பட்டுள்ள நிலையிலும் எல்.டி.டி.ஈ இலங்கை இராணுவத்துடன் நடத்திக் கொண்டுள்ள போருக்கு வலுசேர்த்து உதவும் வண்ணம் யாழ்ப்பாணம் போன்ற பெரும்பான்மை தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் கிளர்ச்சியும் எழுச்சியும் ஏற்படாதிருப்பதற்கும் அம்மக்களின் இந்த மனநிலைதான் காரணமாக இருக்க முடியும்.
போரும் அரசியலும்
மேலும் இதுபோன்ற அரசியல் முன் முயற்சியை எடுப்பதற்கு இருந்த வெகுஜன அமைப்புகள் பலவற்றை விடுதலைப்புலிகள் முடமாக்கியும் விட்டனர். அத்துடன் தாங்களே அத்தகைய ஒரு அமைப்பை அதாவது மக்கள் இயக்கத்தை நடத்தும் ஒரு அரசியல் அமைப்பை உருவாக்கவும் தவறிவிட்டனர். அவர்கள் அவ்வாறு உருவாக்காமல் போனதற்கு காரணம் இல்லாமலும் இல்லை.
எடுத்த எடுப்பிலேயே ஆயுதம் தாங்கிய அமைப்பாக அரசியல் அரங்குக்குள் நுழைந்த அவர்களுக்கு மக்களிடம் பிரச்னைகளை விளக்கிச் சொல்லும் பொறுமையோ, பக்குவமோ, சகிப்புத்தன்மையோ அதிகம் இல்லை. அதாவது அரசியல் என்பது ஆயுதம் தரிக்காத போர் என்பதையும் போர் என்பது ஆயுதம் தரித்த அரசியலென்பதையும் அவர்கள் மறந்துவிட்டனர். ஒரு சரியான கண்ணோட்டம் ஒரு அமைப்பை வழிநடத்தவில்லை என்றால் எந்த ஒரு கண்ணோட்டமும் அதனை வழிநடத்தாது என்பதல்ல. நிச்சயமாக ஒரு தவறான கண்ணோட்டம் அப்போது அதனை வழிநடத்தவே செய்யும். இலங்கைத் தமிழர் பிரச்னையிலும் விடுதலைப் புலிகளை ஒரு தவறான கண்ணோட்டம் வழிநடத்தவே செய்தது.
அந்த பாசிஸ கண்ணோட்டம் வழிநடத்தியதின் விளைவாகத்தான் அவர்களுடைய திட்டமிடுதல் எல்லாமே தங்களது இராணுவ ரீதியான செயல்பாடுகளுக்கு தேவையானவற்றை செய்வது குறித்ததாகவே ஆகிவிட்டது. அதனால்தான் தாங்கள் அதிகாரத்தில் இருந்த பகுதிகளைவிட்டு இலங்கை இராணுவத்தின் தாக்குதலை தாக்குபிடிக்க முடியாமல் வெளியேறும் வேளைகளிலும் மக்கள் அனைவரையும் கூடவே அழைத்துச் செல்லும் வரலாற்றில் முன் எப்போதும் கண்டிராத ஒரு நிகழ்வினை அப்பட்டமான செயற்கைத் தன்மையுடன் விடுதலைப்புலிகள் நிகழ்த்துகின்றனர்.
மேலும் உலக அரங்கில் இலங்கைத் தமிழர்களின் தனிநாடு கோரிக்கையை நியாயப்படுத்தி பல்வேறு அரசியல் ரீதியான விவாதங்களை மேற்கோள்கள் காட்டி தெளிவாக விளக்கி வந்த ஆண்டன்பாலசிங்கம் போன்றவர்களும்முழுக்க முழுக்க போராளிகளைக் கொண்ட அந்த அமைப்பில் மனிதமுகம் இருக்கிறது என்று காட்டுவதற்கு இப்போது இல்லை.
மேலும் விடுதலைப் புலிகள் அமைப்பு பிரதானமாக யாருடைய நலனுக்காக இருக்கிறது என்றால் இலங்கை தமிழ் உடைமை வர்க்கத்தின் நலனுக்காகத்தான். ஆனால் எந்த நாட்டின் எந்த உடமைவர்க்கமும் அதன் நலனுக்கு எந்த அமைப்புகள் எதுவரை பயன்படுமோ அந்த அமைப்புகளை அதுவரை பயன்படுத்தவே விரும்பும். அந்த அடிப்படையில் இலங்கையின் தமிழ் உடமை வர்க்கத்தின் பார்வை தற்போது ஒன்றுபட்ட இலங்கையில் கூடுதல் அதிகாரங்கள் கொண்ட ஒரு பிராந்தியம் என்பதாக மாறிவிட்ட சூழ்நிலையில் விடுதலைப்புலிகள் விடாப்பிடியாக தமிழ் ஈழம் கோரிக்கையை முன்வைத்துக் கொண்டிருப்பது தமிழ் உடமை வர்க்கத்திற்கு உடன்பாடு இல்லாததாக ஆகிவிட்டது.
போர் ஏற்படுத்தியுள்ள மாறாத வடுக்கள்
இருப்பினும் இன அடிப்படையில் இத்தனை காலம் நீடித்த இப்போர் ஏராளமான மறக்க முடியாத வடுக்களை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் பல்கலைகழக நூலகம் எரிக்கப்பட்டது போன்ற சம்பவங்கள், அதனை பெருமையுடன் பாதுகாத்து வந்த தமிழ் மக்கள் மனதில் எத்தனை ஆழமான கீறலை ஏற்படுத்தியிருக்கும் என்பது யாரும் புரிந்துகொள்ள முடியாததல்ல. இந்நிலையில் இந்த இனப்பிரச்னைக்கு உடனடியான தீர்வுகாண வேண்டுமென்றால் இன்றைய நிலையில் அதற்குள்ள ஒரே வழி பொது வாக்கெடுப்பு ஒன்றேயாகும். தமிழர் பகுதிகளில் தனி ஈழம் தேவையா? இல்லையா? என்ற ஒற்றைக் கோரிக்கையை முன்வைத்து ஐ.நா.சபையின் மேற்பார்வையில் அதனை நடத்துவதே ஆகும்.
அதற்கு முன்பு தற்போது நடந்து வரும் அப்பாவி மக்களின் உயிர்க் கொலைகளை தவிர்க்க ஐ.நா.வின் இராணுவம் அங்கு கொண்டுவரப்பட்டு விடுதலை புலிகள் மற்றும் இலங்கை இராணுவத்தின் துருப்புகளை அவற்றின் அரண்களுக்குள் செல்லவைத்து இப்பிரச்னை குறித்தபேச்சுவார்த்தையை இலங்கை அரசும் விடுதலை புலிகள் உட்பட பிற தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளும் நடத்துவதே சரியானதாக இருக்கும்.
தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமை
கூடுதல் அதிகாரம் வழங்குவது, சுயாட்சி, தனிஈழம் உள்பட அனைத்து விசயங்களும் அதில் விவாதிக்கப்பட்டு தனி ஈழம்தான் தீர்வு என்ற கோரிக்கை மற்ற தீர்வுகளைக் காட்டிலும் பெரிதாக எழுந்தால் அப்போது வாக்கெடுப்புக்குச் செல்லலாம். தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை என்பது ஒவ்வொரு தேசிய இனத்தைச் சேர்ந்த மக்கள் அனைவரின் பிரிக்க முடியாத உரிமையாகும். அதனை அம் மக்களின் ஏகோபித்த விருப்பை மனதிற்கொண்டே செயல்படுத்த வேண்டும்.
இந்த பிரச்னையை இலங்கை அரசுடன் விவாதிக்க தகுதியும் அதிகாரமும் படைத்த ஒரே அமைப்பு விடுதலைப்புலிகள் அமைப்பே என்ற கருத்தை இங்கு செயல்படும் விடுதலைப்புலிகள் ஆதரவு அமைப்புகள் பல முன் வைக்கின்றன. அது சரியானது அல்ல, ஏனெனில் அனைத்து மக்களின் விருப்பு வெறுப்பற்ற மனநிலையை ஆயுதம் தாங்கிய ஒரு குழு மிகச் சரியாக பிரதிபலிக்கும் என்று கூற முடியாது.
மேலும் விடுதலை புலிகள் கடந்த காலத்தில் இலங்கையின் தமிழர் வாழும் வடக்கு-கிழக்கு பகுதிகளை ஒன்றாக இணைத்து தமிழ் மாகாணம் ஒன்றை அமைத்துவிட்டு அதன் பின்னர் கிழக்குப் பகுதியில் மக்களிடம் அவர்கள் வடக்குப்பகுதி மக்களுடன் ஒருங்கிணைத்து ஒரு மாகாண அமைப்பின் கீழ் இருக்க விரும்புகிறார்களா அல்லது தனி மாகாணமாக செயல்பட விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு நடத்தி தீர்மானிக்க வேண்டும் என்று இருந்த இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் சரத்தினை கடுமையாக எதிர்த்தனர்.
கிழக்குப் பகுதியில் வாழும் மக்களில் மிகப் பெரும்பாலோர் தமிழ் பேசும் மக்களாக இருந்த போதிலும் அவர்களில் யாழ்ப்பாணத் தமிழர்கள் கிழக்குப் பகுதியின் பூர்வீகத் தமிழர்கள் மற்றும் தமிழ் பேசும் இஸ்லாமியர்கள் என்ற பிரிவுகள் இருக்கவே செய்கின்றன. அவர்கள் பேசும் மொழி ஒன்றாக இருந்த போதிலும் அது மட்டுமே அவர்களிடம் முழுமையான ஒற்றுமை உணர்வினை ஏற்படுத்த முடியவில்லை.
ஏனெனில் இந்த முதலாளித்துவ காலகட்டத்தில் தேசிய முதலாளிகளின் முழக்கமான தனி நாடு கோரிக்கை என்பது பொருளாதார நலன்களை அடிப்படையாக வைத்தே எழுப்பப்படுகிறது. எனவே வடக்கு கிழக்குப் பகுதி இரண்டும் ஒரு மாகாணமாக அமைந்தால் அதில் யாழ்ப்பாண தமிழர்களின் ஆதிக்கம் மிகுந்துவிடும்; தங்களது நலன்கள் அவ்வளவுதூரம் பராமரிக்கப்படாது என்ற அச்சம் கிழக்குப் பகுதி பூர்வீக தமிழ் மக்களிடமும், தமிழ் மொழி பேசும் இஸ்லாமியரிடமும் பெரிதும் இருக்கவே செய்கின்றன. அதனால்தான் அந்த சரத்தினை விடுதலைப் புலிகள் எதிர்த்தனர்.
தனி ஈழம் சர்வரோக நிவாரணியல்ல
இங்குள்ள விடுதலைப்புலிகள் ஆதரவு அமைப்புகள் மக்களிடம் முன் வைப்பது போல் தனிநாடு அதாவது தமிழீழம் என்பது இலங்கைத் தமிழ் மக்கள் அனைவரின் பிரச்னைகளுக்கும் தீர்வாகவல்ல சர்வரோக நிவாரணி அல்ல. தனிஈழம் என்று ஏற்பட்டால் அங்கு தமிழ் உடமை வர்க்கத்தின் ஆட்சியே ஏற்படும். அத்தகைய தமிழ் ஈழ தேசம் அமைப்பதில் தொடங்கியே பல்வேறு வேதனைகள் தலைதூக்கும். ஏனெனில் அவ்வாறு உருவாகும் தனித் தமிழ் தேசத்தில் இலங்கையின் சிங்களர் வசிக்கும் பகுதிகளில் இன்றும் வாழ்ந்து வரும் ஏராளமான தமிழர்கள் தங்களது உடமைகளை விட்டுவிட்டு வந்து குடியேற முடியாது.
அவர்கள் தங்களது வசிப்பிடங்களில் விட்டுவிட்டு வந்த உடமைகளை ஈடு கட்டும் விதத்தில் தமிழ் ஈழத்தில் வசிக்கும் மக்கள் அவர்களுக்கு தொழில் வாய்ப்புகளோ வசிப்பிடங்களோ புதிதாக ஏற்படுத்தி தருவது சாத்தியமல்ல. இப்போதும் பல்லாயிரக்கணக்கான பாகிஸ்தான் பிரிவினையின் போது பாகிஸ்தானில் இருந்து இடம் பெயர்ந்து டெல்லியிலும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் வாழும் இந்து மதத்தைச் சேர்ந்த மக்கள் அகதிகளைப் போலவே வாழ்வது இங்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். இந்நிலையில் சிங்கள மக்கள் வசிக்கும் பகுதிகளில் வசிக்கும் இலங்கை தமிழ் மக்களில் மிகப்பெரும்பாலோர் அப்பகுதிகளைவிட்டு பெரும்பாலும் வெளியேற விரும்பமாட்டார்கள்.
அவர்களைத் தவிர 10 லட்சத்துக்கும் மேலான மலையகத் தமிழ் மக்கள் மனப்பூர்வமாக யாழ்ப்பாணத் தமிழர்களோடு ஒரே மொழி பேசுவதால் ஒத்துப் போகக் கூடியவர்கள் அல்ல. யாழ்ப்பாண உடைமை வர்க்கத் தமிழர்களும் அவர்களுக்கு அடைக்கலம் தருவர் என்று கூற முடியாது. ஏனெனில் 5 லட்சம் மலையகத் தமிழர்களின் வெளியேற்றத்திற்கு பண்டார நாயகாவுடன் இணைந்து ஒப்புதல் அளித்தது யாழ்ப்பாண உடைமை வர்க்கத் தமிழர்களின் பிரதிநிதி செல்வநாயகமே ஆவார்.
இன்று வரை மனப்பூர்வமாக மலையத் தமிழர்களை இங்குள்ள விடுதலைப் புலிகள் ஆதரவு அமைப்புகள் கூறுவது போல் தங்களது தொப்புள்கொடி உறவுகள் என்று யாழ்ப்பாண உடைமை வர்க்கத் தமிழ்மக்கள் பார்ப்பதில்லை. யாழ்ப்பாணத்தில் உழைக்கும் வர்க்கத் தமிழர்களிடமும் வர்க்க உணர்வு மட்டம் குறைவாக இருந்ததால் அது ஏற்படவில்லை. கல்வியிலும் பொருளாதாரத்திலும் முன்னேறிய யாழ்ப்பாண உடமைவர்க்க தமிழ்மக்கள் மலையகத் தமிழர்களை கூலிக்கு வேலை செய்ய வந்த மக்களாகவே அதாவது சிங்கள உடமை வர்க்கத்தினர் பார்க்கும் விதத்திலேயே இப்போதும் பார்க்கின்றனர்.
இந்நிலையில் தமிழர்களுக்கு என்று தனிநாடு ஒன்று ஏற்பட்ட பின்னரும் சிங்கள மக்களுடன் சேர்ந்து வாழ நேரும் தமிழர்கள் மனவியல் ரீதியான ஒரு வகையான தாழ்வு மனப்பான்மையுடனேயே அப்பகுதிகளில் வாழ நேரும். இன்று பாகிஸ்தானிலும் வங்கதேசத்திலும் பிரிவினைக்குப் பின்னும் அந்நாடுகளிலேயே தங்கியுள்ள இந்து மக்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்களோ அவ்வாறே சிங்களப் பகுதிகளில் வாழ வேண்டியிருக்கும் தமிழ் மக்களும் நடத்தப்படுவர். வங்கதேசத்தில் வசிக்கும் இந்துமக்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பதை தஸ்லிமா நஸ்ஸ்ரீனின் லஜ்ஜா என்ற நவீனத்தை படித்தாலே தெரியவரும். அதைப்போலவே பிரிவினைக்குபின் நமது நாட்டில் உள்ள முஸ்லீம் மக்களும் வகுப்புவாத சக்திகளால் அவர்களின் மனம்புண்படும் விதத்தில் விமர்சிக்கப்படுவதையும் நடத்தப்படுவதையும் வகுப்பு மோதல்களுக்கு ஆட்படுத்தப்படுவதையும் நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
மேலும் எவ்வெப்போது சிங்கள ஆளும் வர்க்கம் நெருக்கடிக்கு ஆட்படுத்தப்படுகிறதோ அப்போதெல்லாம் இலங்கையில் சிங்கள மக்களோடு சேர்ந்து வாழ நிர்பந்திக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் மீது ஒரு கட்சி மாறி மற்றொரு கட்சி வெறுப்பையும் அவமரியாதை பேச்சுகளையும் உமிழவே செய்யும் அது சந்திக்கும் நெருக்கடிகளிலிருந்து பெரும்பான்மை சிங்கள மக்களின் கவனத்தை திசை திருப்பி விட அதனைச் செய்யும்.
இத்தனை கொடுமையாக இராதெனினும் தமிழர் வாழும் கிழக்குப் பகுதியில் தமிழருடன் இணைந்து வசிக்கும் சிங்கள மக்களுக்கும் எங்கு செல்வது எவ்வாறு ஒன்றி வாழ்வது என்பது குறித்த பிரச்னைகள் நிச்சயம் இருக்கவே செய்யும். இவற்றைஎல்லாம் கருத்தில் கொள்ளாது தமிழ் ஈழம் தமிழ் மக்களுக்கு ஒரு பொற்காலத்தை ஏற்படுத்தித் தந்துவிடும் என்ற ஒரு கற்பனைச் சித்திரத்தை இங்குள்ள விடுதலைப்புலிகள் ஆதரவு அமைப்புகள் முன் வைக்கின்றன.
தனி தேசம் உடைமை வர்க்கங்களின் கோரிக்கையே
தேசிய வாதமும் தனிநாடு கோரிக்கையும் இப்போதும் எப்போதும் அந்தந்த தேசிய இனங்களை சேர்ந்த உடமை வர்க்கங்களின் முழக்கங்களே. ஏனெனில் உடமை வர்க்கங்கள் ஏதாவது ஒரு அடிப்படையில் பிறர் உழைப்பில் வாழும் ஒட்டுண்ணித்தனமான வாழ்க்கையையே வாழக்கூடியவை, எனவே அவற்றிற்கு அந்த ஒட்டுண்ணித்தன வாழ்க்கை மூலம் அடையும் சலுகைகள் மற்றொரு தேசிய இனத்தை சேர்ந்த அதே வகையான வாழ்க்கை நடத்தும் உடமை வர்க்கங்களால் அவை வலுவாக பெரும்பான்மையாக இருக்கின்றன என்ற காரணத்தால் பறிக்கப்பட்டுவிடக் கூடாது என்ற அடிப்படையிலேயே தனிநாடு முழுக்கம் முன்வைக்கப்படுகிறது.
அதனால்தான் ஒரு அளவிற்கு மேல் நியாயம் மற்றும் பகுத்தறிவுபூர்வ ஆய்வுகளை முன்வைத்தால் அதற்குப் பதிலாக வெறிவாதத்தை உமிழ்பவையாக அத் தேசிய வெறிவாத அமைப்புகள் ஆகிவிடுகின்றன. தமிழ் உணர்வு அற்றவர்கள் என்ற அவதூறுக்கும் சிங்கள உணர்வு இல்லாதவர்கள் என்ற அவதூறுக்கும் அத்தகைய பொதுவான சரியான ஆய்வுகளின் அடிப்படையிலான கருத்துக்களை வைப்பவர்கள் தமிழ் மற்றும் சிங்கள தேசியவாதிகளால் தூற்றப்படுகிறார்கள்.
உண்மையான தீர்வு உழைக்கும் வர்க்க ஆட்சி அமைவதிலேயே உள்ளது
எனவே தமிழ் மக்களிலும் சரி சிங்கள மக்களிலும் சரி அவர்களில் மிகப்பெரும்பான்மையாக இருப்பவர்கள் உழைக்கும் மக்களே ஆவர். அவர்கள் தங்கள் உழைப்பால் வாழ்பவர்கள்; ஒட்டுண்ணித்தனத்தால் வாழ்பவர்கள் அல்ல. எனவே சிங்கள உழைக்கும் மக்கள் மற்றும் தமிழ் உழைக்கும் மக்கள் இவ்விரு பெரும்பகுதி மக்களின் அடிப்படையான நலன்களும் ஒன்றுதான். அதாவது அவர்களை கூலியடிமைத்தனத்தில் வைத்திருக்கும் சிங்கள, தமிழ் உடமை வர்க்கங்களை தூக்கிஎறிய வேண்டும் சமூகத்தின் அனைத்துச் செல்வங்களையும் உருவாக்கும் உழைக்கும் வர்க்க ஆட்சியை மலரச் செய்ய வேண்டும் என்பதுதான். இந்த அடிப்படையில் உழைக்கும் வர்க்க ஆட்சியை இலங்கை முழுவதும் கொண்டுவர பாடுபடுவதே இனப்பிரச்னை உட்பட இலங்கை மக்களின் அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வாகும்.
சோவியத் படிப்பினை
இதையே சோவியத் நாட்டின் படிப்பினைகள் நமக்கு உணர்த்துகின்றன. சோசலிசம் இருந்தவரை தனிநாடு கோரிக்கை என்பது அங்கு எழவில்லை. எத்தருணத்தில் சோசலிசம் அங்கு வீழ்ந்ததோ அப்போது அதில் ஒருங்கிணைந்திருந்த அனைத்து தேசிய இனங்களும் பாதுகாப்பற்ற நிலையில் தாங்கள் இருப்பதாக உணரத்தொடங்கி தனிநாடுகள் கோரத்தொடங்கிவிட்டன. மாபெரும் தலைவர் ஸ்டாலினின் மறைவிற்குப்பின் முதலாளித்துவ சிந்தனைப்போக்குகள் ஊட்டி வளர்க்கப்பட்டதால் பின்னாளில் சோவியத்யூனியன் தகர்ந்த பின்பு தனிநாடு கோரிக்கையை முன்வைக்கும் முதலாளித்துவ சிந்தனைப் போக்கின் கரு அவர்கள் மனதில் உருவாக்கப்பட்டது. அதுவே அக்கோரிக்கை பெரிதாக எழுந்து ஒன்றாய் இருந்த சோவியத் நாடு பல தேசங்களாக பிளவுபடக் காரணமாக இருந்தது.
ஆரம்பத்தில் சிங்கள-தமிழ் உழைக்கும் வர்க்கத்தின் ஒற்றுமையை வலியுறுத்திப் போராடிய கம்யூனிஸ்ட் அமைப்புகளும் தலைவர்களும் இருக்கவே செய்தனர். நாளடைவில் நாடாளுமன்றத்தை பயன்படுத்துவதற்கு பதிலாக நாடாளுமன்ற வாதத்தில் மூழ்கியவையாக அக்கட்சிகள் ஆகிவிட்டதால் படிப்படியாக இனவாதத்தையும் தங்களது அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்தும் கலிசடைகளாக அவையும் உருமாறிவிட்டன. எனவேதான் தமிழ் மக்களின் பல்வேறு உரிமைகள் பறிக்கப்பட்ட போதும் அவை வாய்மூடி மெளனம் சாதித்தன. வர்க்கப் பார்வையை கைவிட்டுவிட்டு இங்குள்ள கம்யூனிஸ்டுகள் ஜாதிய வாதத்தை கையிலெடுத்து குறுக்கு வழியில் தேர்தல் அரசியலில் ஆதாயம் அடைய முனைவதுபோல் இலங்கையில் கம்யூனிஸ்டுகள் என்ற பெயரில் செயல்பட்ட கட்சிகளில் சிலவும் மிதமிஞ்சிய சிங்கள வெறிவாதத்தை கையிலெடுக்கவும் செய்தன.
எனவே இலங்கையின் இனப்பிரச்னைக்கு உண்மையான தீர்வு உழைக்கும் வர்க்கப் போராட்டத்தின் விளைவாக உருவாகும் வர்க்க பேதமற்ற சமுதாயம் அமைவதில்தான் உள்ளது. அத்தகைய வர்க்கப் போராட்டங்களே சிங்கள, தமிழ் உடமைவர்க்கங்களின் உண்மையான முக விலாசத்தை அம்பலப்படுத்தக் கூடியவை.
தவறான, திரித்துரைக்கப்படும் வரலாற்று நிகழ்வுகள்
இதை முன்வைப்பதை விட்டுவிட்டு இங்குள்ள அதிதீவிர இடதுசாரிக் கட்சிகள் என்று கருதப்படும் சில கட்சிகள் தமிழ்ஈழம் அவைதில் அனைத்துப் பிரச்னைகளுக்கும் ஆன தீர்வு இருப்பது போலவும், சிங்கள மக்கள் அனைவரும் தமிழ் இனத்தின் எதிரிகள் போலவும் தமிழ்வெறி வாதத்தைத் தூண்டிவருகின்றன. உண்மையிலேயே இலங்கையில் எவ்வாறு இடதுசாரி முழக்கங்களை முன்வைத்துக் கொண்டு ஜே.வி.பி அமைப்பினர் சிங்கள வெறிவாதத்தை கையிலெடுத்து தமிழர்களுக்கு எதிராக குறிப்பாக மலைத்தோட்ட தமிழர்களுக்கு எதிராக தங்களது பிரச்சாரத்தில் விசத்தை கக்கினரோ அதைப்போல இங்கு இந்த இடதுசாரி அமைப்புகள் இலங்கையில் நிலவும் யதார்த்த நிலையைப் பாராது சாதாரண சிங்கள மக்கள் மீதும் விரோதத்தினையும் குரோதத்தினையும் உருவாக்கும் வெறுப்பு பிரச்சாரத்தை நடத்துகின்றனர்.
தங்களது வாதங்களை நிரூபிப்பதற்காக இந்திய வரலாற்று நிகழ்வுகளையே தங்களது நோக்கிற்குத் தகுந்தாற்போல முன்னுக்குபின் முரணாக திரித்தும் கூறுகின்றனர்.
அவர்களது ஈழ விடுதலை நமது கடமை என்ன? என்ற நூலில் லாலா லஜபதி ராயை தடியடியில் கொலைசெய்து மேலும் பல அடக்குமுறை சம்பவங்களில் ஈடுபட்ட ஆங்கில அரசுக்கு எதிராக அமைதியான முறையில் ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் கூடி போராட்டம் நடத்திய இந்தியர்கள் மீது கொடூரமாக துப்பாக்கி சூடு நடத்தினான் ஜெனரல் டயர் என்று கூறியுள்ளனர். உண்மையில் ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்தது 1919ம் ஆண்டு ஏப்ரல் 13ல் ஆகும்.
லாலா லஜபதிராய் சைமன் கமிசன் பகிஸ்கரிப்பு இயக்கத்தின்போது வெள்ளை போலிஸாரால் குண்டாந்தடித் தாக்குதலுக்கு ஆட்பட்டது 1928ம் ஆண்டு அக்டோபர் 30ம் தேதியாகும். அதன் விளைவாக அவர் மரணம் அடைந்தது 1928ம் ஆண்டு நவம்பர் 17ம் நாளாகும். அதாவது 9 ஆண்டுகளுக்குபின்பு நடந்த ஒரு சம்பவத்திற்காக அதாவது 1928ல் நடந்த லாலாலஜபதிராயின் தடியடிக்காகவும் அதன் விளைவாக அவர் கொலையுண்டதற்காகவும் 1919ம் ஆண்டு ஜாலியன்வாலாபாக்கில் மக்கள் கூடி போராடினார்கள் என்று கூறியுள்ளனர்.
இவ்வாறு வரலாற்று நிகழ்வுகளை முன்னுக்குபின் முரணாக திரித்துக் கூறியும், சாதாரண சிங்கள மக்கள் மீதும் வெறுப்பையும் விரோதத்தை ஊட்டியும் செயல்படும் இவர்களின் போக்கு உண்மையில் இவர்கள் இந்திய மண்ணின் ஜே.வி.பி இயக்கத்தைச் சேர்ந்தவர்களாகவே தோற்றம் காட்டுகிறார்கள் என்பதையே புலப்படுத்துகிறது. மேலே நாம் முன்வைத்துள்ள ஆய்வின் அடிப்படையில் இலங்கைத்தமிழர் பிரச்னைக்கான தீர்வு அந்நாட்டு ஒட்டுமொத்த தமிழ் மக்களின் விருப்பினை அடிப்படையாகக் கொண்டதாக மட்டுமே இருக்கமுடியும்.
சுரண்டலை அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவ அமைப்பு முறை இருக்கும் வரை இனப்பிரச்சனைக்கான நிரந்தரத் தீர்வு இல்லை என்பதும் மனதிற் கொள்ளப்படவேண்டும்.
[கருத்து:2 கருவூலம்:1 மே 2009 இதழ்]
செகுவேரா குறித்த பல சரியான புரிதல்களுக்கு இட்டுச் செல்லும் கேன்ஸ் திரைப்பட விருது பெற்ற ‘செ’ படம் ஒரு திரைப்படம் மட்டுமல்ல; அது ஒர் ஆவணம்
Posted by
மாற்றுக்கருத்து
மக்களிடையே இரண்டு மாபெரும் மனிதர்களைப் பற்றி மிகத்தவறான கருத்துக்கள் நிலவுகின்றன. அவர்களில் ஒருவர் இந்திய விடுதலைப் போராட்டத்தில் சமரசமற்ற போக்கினை பிரதிநிதித்துவப்படுத்திய தியாகி பகத்சிங். அவர் தன்னுடைய சொந்த வாழ்க்கையைத் தேச விடுதலைப்போரோடு அப்படியே இணைத்துக் கொண்டு வாழ்ந்து காட்டியவர். மிக குறுகிய காலத்தில் தூக்குக் கயிற்றை முத்தமிட்டு தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டவர். அதனால் அவர் என்றென்றும் வீரம், மனோதிடம், அநியாயத்திற்கும் அநீதிக்கும் எதிராக வளைந்து கொடுக்காது போராடும் குணம் ஆகியவற்றின் இலக்கணமாய் இன்றும் விளங்குபவர். அவர் மிக வேகமாக ஒரு கம்யூனிஸ்ட் ஆகிக் கொண்டிருந்தவர்.
இன்னொருவர் அர்ஜென்டைனாவில் பிறந்து கியூபா அதிபர் பிடல் காஸ்ட்ரோவுடன் இணைந்து கியூபா விடுதலைக்காகப் போராடி அந்த நாட்டின் வெளியுறவு மந்திரியாகவும் இருந்தவர். அதன்பின்னர் பொலிவியா நாட்டில் சமூக மாற்றத்தை கொண்டு வருவதற்காக தன் நாட்டையும் வகித்த பதவியையும் தூக்கி எறிந்துவிட்டு பொலிவியா சென்றவர், மிகக் குறைந்த வயதிலேயே பொலிவியா ராணுவத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டவர்.
இவரும் தன்னை ஒரு கம்யூனிஸ்ட் என பகிரங்கமாக பிரகடனப்படுத்திக் கொண்டவர். அவரை அவரது புரட்சிகரப் பணிக்காக நேசிக்கும் ஒரு பெண் அவரிடம் நீங்கள் ஒரு கம்யூனிஸ்டா என்று கேட்க, அதற்கு அவர் கம்யூனிஸ்டுகள் எப்படி இருப்பார்கள் என்று திருப்பி கேட்க, அதற்கு அவர் உங்களைப் போல் இருக்க மாட்டார்கள் என்று கூற, நாங்கள் அனைத்து வர்ணங்களிலும் இருப்போம் என தன் கம்யூனிஸ்ட் அடையாளத்தைக் காட்டிக் கொண்டவர்.
லட்சியத்துடனான முழுப்பிணைப்பு
புரட்சிகர வாழ்க்கை என்பது பல சிரமங்கள் நிறைந்தது. அவ்வாழ்க்கையில் ஈடுபடுவோரின் உயிருக்கு உத்திரவாதம் இருப்பதில்லை. ஆனால் அத்தகைய புரட்சியாளர்களிலும் ஒருபடி மேலே சென்று இவ்விருவரும் நன்கு அறிந்தே தங்கள் உயிரைக் கொடுத்தவர்கள். தங்களைக் காப்பாற்றிக் கொள்ள ஏராளமான வாய்ப்புகள் இருந்தும் அவற்றைத் தூக்கி எறிந்து விட்டு தங்களது இன்னுயிரைப் பொருட்படுத்தாது தங்களது முடிவை நோக்கிய பயணத்தை ஒரு லட்சியத்திற்காக மிக வேகமாக தாங்களே தொடங்கியவர்கள்.
பகத்சிங்கை பாராளுமன்றத்தில் வெடிகுண்டு வீச அனுப்புவதற்கு இந்துஸ்தான் ரிபப்ளிக்கன் ராணுவத்தின் தளபதி சந்திர சேகர் ஆசாத் மிகவும் தயங்கினார். ஏனெனில் அது வரையில் சாண்டர்ஸ் என்ற வெள்ளைப் போலீஸ் அதிகாரியை கொன்றவர்களில் இவரும் ஒருவர் என்பது வெள்ளை அரசுக்குத் தெரியாது. அவர்கள் குண்டு வீசச் சென்றது குண்டை வீசிவிட்டு தப்பி வருவதற்காக அல்ல. தீங்கு செய்யாத அக்குண்டு வெடித்தவுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனம் தங்கள் பக்கம் திரும்பும் வண்ணம் தங்களது அமைப்பின், கொள்கைகள் நோக்கங்கள் ஆகியவற்றை எடுத்துக் கூறுவதற்காகவே அவர்கள் சென்றனர். அதன் மூலம் இந்திய இளைஞர்களை தங்களின் பாதைக்குத் திருப்ப வேண்டும் என்பது அவர்களது திட்டம். அந்த வகையில் அவர்கள் தாமாகவே கைதாகச் சென்றவர்களே ஆவார்.
அவ்வாறு அவர்கள் கைதானால் குண்டு வீசிய குற்றத்தைக் காட்டிலும் மிகப் பெரிய குற்றமான சாண்டர்ஸ் கொலைக் குற்றத்தில் அவர் சிக்கிவிடுவார் என்று ஆசாத் மிகவும் பயந்தார். இருந்தாலும் பகத்சிங்கே அங்கு ஏற்படும் சூழ்நிலை அனைத்தையும் சமாளிக்கும் திறம் கொண்டவர் என்பதாலும் மிகவும் தெளிவாக கருத்துக்களை முன் வைக்கக் கூடியவர் என்பதாலும் நாடாளுமன்றத்தில் குண்டு வீசும் குழுவில் பகத்சிங் இருக்க வேண்டும் என்று சுகதேவ் விரும்பினார். ஏற்கனவே அவ்விருப்பத்தை தம் நெஞ்சம் நிறையக் கொண்டிருந்த பகத்சிங் மிகுந்த மகிழ்ச்சியுடன் அதனை ஏற்றுக் கொண்டார். ஆசாத்தின் கருத்திற்கு சிறிதளவு செவிமடுத்திருந்தால் கூட பகத்சிங்கின் உன்னதமான உயிர் அத்தனை இளம் வயதில் அவரது உடலைவிட்டுப் பிரிந்திருக்காது.
அதைப் போலவே செ குவேராவிடம் பிடல் காஸ்ட்ரோ பொலிவியா செல்லும் திட்டத்தை செ தெரிவித்த போது அதில் தனக்கிருந்த தயக்கத்தை வெளிப்படுத்தினார். 'உங்களைப் பொறுத்த வரையில் கியூபா விடுதலையை சாதிப்பது என்ற உங்களது எண்ணம் நிறைவேறிவிட்டது. இனி அந்த நாட்டை புனரமைக்கும் மாபெரும் பணி உங்கள் முன் உள்ளது. ஆனால் என்னைப் பொறுத்தவரை என் கடமை முடிந்துவிட்டதாக நான் எண்ணவில்லை. எனவே நான் பொலிவியா செல்கிறேன்' என்று ஒரு கடிதம் மூலம் பிடல் காஸ்ட்ரோவிடம் செ தெரிவித்த போது பிடல் கேட்டார்: பொலிவியாவின் சமூக மாற்றம் ஏற்படுவதற்கான புறச்சூழ்நிலைகள் கனிந்துள்ளனவா என்று. அவ்வாறு காலம் கனியும் என்று காத்திருந்தால் 50 ஆண்டுகள் ஆனால்கூட அது கனியாது என பிடலிடம் கூறிவிட்டுச் சென்றார் செ. செ குவேராவைப் பொறுத்தவரை அத்தனை அவசரமாக பொலிவியாவிற்கு சென்று அத்தனை பெரிய இடரை எதிர்கொண்டிருக்க வேண்டியதேயில்லை. இருந்தும்கூட தெரிந்தே தனது உயிரைப் பணயமாகக் கேட்கும் ஒரு லட்சியத்தை நோக்கி அவர் திட்டவட்டமாகச் சென்றார்.
மரணத்தையே துச்சமெனக் கருதும் இத்தகைய மனப்பான்மையால் பகத்சிங் - சே இருவரும் உலகெங்கிலும் உள்ள இளம் புரட்சியாளர்களின் லட்சிய முன்னோடிகளாக விளங்குகிறார்கள். சாதாரண மனிதர்களைப் பொறுத்த வரையில் இந்த குணம் நினைத்துப் பார்க்கவும் முடியாதது. புரட்சியாளர்களைப் பொறுத்தவரையிலும் கூட இது ஒரு அருங்குணமே. லட்சியத்துடன் ஒருவர் தன்னை முழுமையாக இணைத்துக் கொள்ளும்போதே இத்தகைய அருங்குணங்கள் உருவாகின்றன. அதைப் புரிந்து கொள்ள முடியாத பல சாதாரண மனிதர்கள் அதனை பைத்தியக்காரத்தனம் என்று கூறுகின்றனர். அதற்கு செ அளித்த பதில் மிகவும் சுவையானது இத்தகைய பைத்தியக்காரத்தனங்களை ஓரளவு கொண்டிருப்பது நல்லதே என்று அவர் கூறினார்.
இப்படிப்பட்ட ஒரு குணத்தைக் கொண்டிருந்ததால் இவ்விருவரைப் பற்றியும் பல புனை கதைகளும் மக்களால் பரப்பப்படுகின்றன. அப் புனை கதைகள் அவர்களது வீரத்தை சற்றே மிகைப்படுத்தி கூறும் ஆக்கப்பூர்வ பணியினையே ஆற்றுகின்றனவேயன்றி எதிர்மறைத் தன்மை எதையும் கொண்டிருக்கவில்லை. இவர்களது வாழ்க்கை வரலாறு போதிய ஆதாரங்களுடன் முழுமையாக வெளிக்கொணரப்படாததால் இவர்களில் குறிப்பாக செ குவேராவைப் பற்றிய பல்வேறு புரிதல்கள் அவையாகவே மக்கள் பலரிடம் ஏற்பட்டன. அதுமட்டுமின்றி அவரை தங்களது ஆதர்ச சக்தியாக வெளிப்படையாக காட்டிக் கொண்டவர்களின் நடைமுறையை வைத்தும் பல புரிதல்கள் தாமாகவே இடதுசாரி ஆர்வலர்களிடம் ஏற்பட்டன.
இந்தியாவில் செ குவேராவை தங்களது ஆதர்ச சக்தியாக ஏற்றுக் கொண்டவர்களாக பல அதிதீவிர கம்யூனிஸ்ட் குழுக்களைச் சேர்ந்தவர்கள் காட்டிக்கொள்கின்றனர். அவர்களிடம் நாம் காணும் பல குணங்களைப் பார்த்து இவர்கள் இப்படி என்றால் இவர்களின் முன்னோடியான செ குவேராவும் இவ்வாறுதான் இருந்திருப்பார் என்பது போன்ற பல எண்ணப் போக்குகளை உருவாக்கிக் கொள்கிறோம். எடுத்துக்காட்டாக எதையுமே வெளிப்படையாக கூறாத தன்மைகள் அதாவது ஒருவரை, ஒரு வேலையில் அதைப் பற்றி எதையும் கூறாது இறக்கி விட்டுவிட்டு, அவர் அதில் சிக்கிக் கொண்டபின் அதை வைத்தே அதிலிருந்து மீளமுடியாதவராக அவரை ஆக்கிவிடுவதும், அவரை தங்களின் அணியில் நிரந்தரமாகச் சேர்த்துக் கொள்வதுமான ஒரு வழிமுறையை இந்தியாவின் அதீத கம்யூனிஸ்ட் குழுக்கள் என்று அறியப்படும் பல குழுக்களிடம் பல சமயங்களில் பார்க்க முடிகிறது. இதை வைத்து இவர்களின் முன்னோடியான செ குவேரா போன்றவர்களைப் பற்றியும் அவர்களும் இப்படித்தான் இருந்திருப்பார்கள் என்ற எண்ணப்போக்கு இயற்கையாகவே பலரிடம் ஏற்படுகிறது.
முழுமையான வெளிப்படைத் தன்மை
ஆனால் உண்மையில் செ-யும், அவரது குழுவினரும் அப்படிப்பட்டவர்களா என்று வரலாற்று ஆதாரங்களை வைத்து பார்த்தால் நாம் ஏமாந்து போவோம். அதாவது கியூபா புரட்சி ஆரம்பித்த அந்த வேளைகளில் புரட்சிப் படையினரை ஒன்றாக நிறுத்தி அவர்களிடம் செ-யும் பிடலும் முழங்குகிறார்கள்; அதாவது நாம் பயணிக்கப் போகும் பாதை பல இடர்பாடுகளைக் கொண்டது. இதில் நாங்களும் உங்களில் பலரும் கூட உயிரிழக்க நேரலாம். எனவே உயிர்ப்பயம் உள்ளவர்கள் யாரேனும் இங்கு இருந்தால் முதலில் வெளியே வந்துவிடுங்கள். அவர்களுக்கு அரைமணிநேரம் அவகாசம் தருகிறோம்- இவ்விடத்தைவிட்டு ஓடிவிடுவதற்கு என்று தெளிவாகக் கூறியபிறகே தங்களது புரட்சிப் பயணத்தை அவர்கள் மேற்கொண்டனர். அது மட்டுமின்றி தங்களை தங்களது படையில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொண்ட இரண்டு 18 வயது நிரம்பாத சிறுவர்களை செ படையில் சேர்த்துக் கொள்ள மறுத்துவிட்டதால் தங்களைச் சேர்த்துக் கொள்ளாவிடில் தாங்கள் அவ்விடத்தைவிட்டு நகரப்போவதில்லை என அவர்கள் சத்தியாக்கிரகம் செய்தபின்னரே அவர்களை செ சேர்த்துக் கொண்டார். இன்று விடுதலைப் படை என்று அழைக்கப்படும் பல படைகளில் சிறுவர்களைக் கட்டாயப்படுத்திச் சேர்ப்பதாக புகார்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் செ கடைபிடித்த மரபு எத்தனை உயர்வாக நிமிர்ந்து நிற்கிறது.
மக்களிடமிருந்து அந்நியப்பட்டிருந்த அரசுகள்
இந்தியா போன்ற பல தேசிய இனங்களைக் கொண்ட பெரிய நாடுகளைப் போல் இல்லாது பல லத்தீன் அமெரிக்க நாடுகள் பரப்பளவில் சிறியவையாகவும் ஆரம்பம் முதற்கொண்டு ஏதாவதொரு ஏகாதிபத்தியத்தின் பிடியிலும் அல்லது அவற்றின் பொம்மை அரசுகளின் பிடியிலும் இருந்தவையே. அவற்றில் ஆட்சி மாற்றங்கள் பல சமயங்களில் ராணுவச் சதிகள் மூலமாகவே நடந்தன. எனவே அந்த ஆட்சியாளர்கள் மக்களின் நன்மதிப்பை சிறிது கூடப் பெற்றவர்களாக இருக்கவில்லை.
அவர்கள் தங்களின் ஆயுத வலிமையினால் மக்களை அச்சுறுத்தி ஆட்சி செய்தார்களே தவிர அவர்களை ஜனநாயகம் போன்ற பெயர்களில் ஏமாற்றி ஆட்சிபுரியவில்லை. எனவே மக்களின் மனநிலை எப்போதுமே பெரும்பாலும் அவர்களின் ஆட்சியாளர்களுக்கு எதிராகவே இருந்தது. அந்த ஆட்சியாளர்களை எதிர்ப்பதற்கும் தேர்தல் முறை போன்ற வழிமுறைகள் அங்கு பல காலம் அமுலில் இல்லை. அந்தச் சூழ்நிலையில் மக்களின் வெறுப்பின் காரணமாக அவ்வரசுகளை ஆயுதம் தாங்கிய கிளர்ச்சிகள் மூலம் எதிர்கொள்ளத் தயாராக இருந்தவர்கள் அனைவருக்கும் மக்களின் ஒட்டுமொத்த ஆதரவு கிடைத்தது.
புறச்சூழ்நிலை குறித்த கணிப்பும் அது அளித்த உத்வேகமும்
அதனால்தான் 82 பேர் கொண்ட பிடல் காஸ்ட்ரோ தலைமையிலான ஒரு குழு மெக்சிக்கோவிலிருந்து ஒரு படகில் புறப்பட்டு கியூபாவை சென்றடையும் போது அதில் உயிருடன் இருந்த 12 பேரைக் கொண்டு ஒரு மிகப் பெரிய ஆயுதம் தாங்கியப் புரட்சியை நடத்த முடிந்தது. அதன் விளைவாக பிடல்காஸ்ட்ரோவால் கியூபாவின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடிந்தது.
அவர்கள் கியூபாவிற்குப் புறப்படுகையில் அவர்களுக்கு நம்பிக்கையூட்டக் கூடியதாக இருந்தது. கியூபாவின் பின் தங்கிய பொருளாதார சமூக சூழ்நிலைகள்தான். அதாவது அங்கு 1.5 சதவீதம் பேர் 40 சதவீதம் நிலங்களைத் தங்கள் கைவசம் வைத்திருந்தனர். 20 சதவீதம் பேருக்கு வேலையில்லை, 37 சதவீதம் பேர் எழுதப் படிக்கத் தெரியாதவர்களாக இருந்தனர். வர்த்தக ரீதியாக அமெரிக்காவிற்குச் செலுத்த வேண்டிய கடன் அந்நாட்டிற்கு மிகமிக அதிகம் இருந்தது.
செ குவேராவின் பொலிவிய சோதனையும் இந்தப் பின்னணியிலேயே செய்யப்பட்டது. மக்களின் பின்தங்கிய, கல்வியறிவு அற்ற, மருத்துவ வசதிகள் போன்றவை அறவே இல்லாத நிலை ஆகியவற்றை அடிப்படையாக வைத்து மக்கள் எழுச்சியை உருவாக்க முடியும் என்று செ நம்பினார். லத்தீன் அமெரிக்க நாடுகளின் அக்கால கட்ட நிலை எவ்வாறு இருந்தது என்பதற்கு ஒரு பொருத்தமான உதாரணம், செ மருத்துவப் பட்டம் பெற்ற ஒரு டாக்டர் என்பதால் அவர் செல்லும் இடங்களில் எல்லாம் அவரது படை தங்கியிருந்த இடங்களில் சாதாரண மக்களுக்கு வைத்தியம் செய்தார். அவ்வாறு அவரிடம் வைத்தியம் செய்ய வந்த ஒரு பெண் அவரிடம் எனக்கு வியாதி ஒன்றும் இல்லை ஆனால் நான் இதுவரை டாக்டர் எவரையும் பார்த்ததில்லை; டாக்டர் எப்படி இருப்பார் என பார்ப்பதற்கே வந்தேன் என்று கூறினாராம்.
இவ்வாறு மக்கள் இருந்த பின்தங்கிய நிலையை மட்டுமல்ல பொலிவிய நாட்டின் வடக்குப் பகுதியில் செப்புச் சுரங்கங்களில் நடந்து கொண்டிருந்த வேலை நிறுத்தத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டுதான் செ தனது புரட்சிப் பயணத்தைத் தொடங்கினார். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட சுரங்கத் தொழிலாளர்கள் தங்கள் ஒவ்வொருவரின் ஊதியத்திலிருந்தும் 50 பொலிவியானோ என்று கூறப்படும் அந்நாட்டு ரூபாய்களை புரட்சியாளர்களுக்கு நிதியாக வழங்க முன்வந்தனர். இவ்வாறு செ குவேராவின் பொலிவிய நாடு, அதன் சமூகம் அதில் இருக்கக் கூடிய முரண்பாடுகள் ஆகியவை குறித்த அவரது கணிப்பு மேலோட்டமாகவும் பொதுவிலும் சரியாகவே இருந்தது.
லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கே உரிய அவற்றின் ஏகாதிபத்திய பொம்மையாட்சியாளர்களை ஆயுதந்தாங்கி எதிர்கொண்டால் மக்கள் ஆதரவு தானே வரும் என்று அவர் நம்பினார். அந்த நம்பிக்கைக்கு உகந்த விதத்தில் பொலிவிய மக்களின் மனநிலை இல்லை. கியூபாவின் மக்களைப் போல் அல்லாது அவர்களிடம் அரசு குறித்த அச்ச உணர்வு மேலோங்கி இருந்தது. புரட்சியாளர்கள் மீதான நம்பிக்கை குறைவாக இருந்தது. அந்த ஒரு அம்சத்தைத் தவிர வேறு அனைத்து சூழ்நிலைகளையும் கணிப்பதில் செ சரியாகவே இருந்தார்.
ஆனால் இந்தியாவில் அவரது வழியில் செல்வதாகக் காட்டிக் கொள்ளக் கூடியவர்கள் அனைத்துக் கணிப்புகளிலுமே தவறு செய்தவர்களாகவே உள்ளனர். இங்கு நாடாளுமன்ற ஜனநாயகம் என்ற பெயரளவிலான ஜனநாயகம் நிலவுகிறது; இங்கு லத்தீன் அமெரிக்க நாடுகளைக் காட்டிலும் மிக அதிக அளவில் தொழிலாளர்கள் உள்ளனர். இங்கு விவசாயமும் லாப நோக்குடன் அதாவது முதலாளித்துவ உற்பத்திமுறையில் நடப்பதால் இங்கு விவசாயத் தொழிலாளர்களே உள்ளனர். ஆலைத் தொழிலாளர்களுடன் விவசாயத் தொழிலாளரையும் சேர்த்தால் மிக அதிக எண்ணிக்கையில் உழைக்கும் பாட்டாளி வர்க்கமே உள்ளது.
அந்த நிலையில் அரசியல் சட்டம் வழங்கி இருக்கக் கூடிய உரிமைகளையும், தொழிற்சங்க உரிமைகளையும் பயன்படுத்தி வர்க்கப் போராட்டம் நடத்துவதன் மூலம் பரந்துபட்ட உழைப்பாளி வர்க்கத்தை அணி திரட்ட இங்கு வாய்ப்பு உள்ளது. ஆனால் இங்குள்ள செ குவேராவின் வழியை பின்பற்றுவதாக காட்டிக் கொள்ள கூடியவர்கள் இவை எதையும் செய்யாமல் மலைவாழ் மக்களை மட்டும் தங்கள் பக்கம் வைத்துக் கொண்டு சமுதாய மாற்றப் புரட்சியில் ஈடுபடுவதாக தங்களைக் காட்டிக் கொள்கிறார்கள்.
கம்யூனிஸ்டுகளிடம் மனிதாபிமானமே இராது - இது முதலாளித்துவ பிரச்சாரகர்கள் மீண்டும் மீண்டும் கூறி நிலைநாட்டியுள்ள கண்ணோட்டம். ஆனால் மார்க்ஸ் கூறினார்: தற்போது நிலவும் மனிதாபிமான கண்ணோட்டத்தில் இருந்து தனிச் சொத்துடைமை என்ற களங்கத்தை நீக்கிவிட்டால் அதன் பின் வரும் உன்னதமான மனிதாபிமானமே கம்யூனிசம் என்று. செ எத்தனை உயர்ந்த மனிதாபிமானியாக இருந்தார் என்றால் அவர் தங்களின் ராணுவத்திற்கான உணவுப் பொருட்களை மக்களிடமிருந்து பெறும்போது கூட அவற்றிற்கான விலை என்ன என்பதை அவர்களிடம் கேட்டு எந்த வற்புறுத்தலுமின்றி விலையைக் கொடுத்து அவர்களிடமிருந்து வாங்கினார்.
புரட்சியாளர்கள் குறித்து எழுதுவதற்காக அங்கு வந்து சிக்கிக் கொண்ட டி ப்ரே போன்ற எழுத்தாளர்களை அந்நிலையில் அவர்கள் இருந்த சிக்கலான பொலிவியப் பகுதியிலிருந்து பத்திரமாக அனுப்புவது மிக மிக சிரமமானது என்றிருந்த நிலையிலும் அவர்களை அனுப்ப பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டார். அவர்களிடம் செ பிரான்ஸ் நாட்டிற்குச் சென்று ஜான்பால் சாத்தர் போன்ற எழுத்தாளர்களிடமும் பிரிட்டன் சென்று பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் போன்ற பகுத்தறிவுவாதிகளிடமும் புரட்சியாளர்களுக்கு ஆதரவான அறிக்கைகள் விடவும் பணம் திரட்டி தரவும் கேட்டுக் கொள்ளுமாறு அவர்களிடம் வேண்டிக்கொண்டார்.
தங்கள் ராணுவத்தில் உள்ளோர் சாதாரண அப்பாவி மக்களை துன்புறுத்தும், பெண்களை மானபங்கம் செய்யும் செயல்களில் ஈடுபட்டால் அவர்களுக்கு கர்ணகடூரமான தண்டனைகளையே வழங்கினார். அதாவது அவர்களை ஈவிரக்கமின்றி சுட்டுத் தள்ளினார். அத்தகைய உயர்ந்த கலாச்சாரத்தையும் ஒழுக்க நெறிமுறையையும் அவர் கொண்டிருந்ததற்குக் காரணம் அவர் ஒரு உயர்ந்த சித்தாந்தத்தை தன்வசம் கொண்டிருந்ததும் அதன் அடிப்படையில் அவர் வாழ்ந்த சமூகத்தை கணிக்க முடிந்ததுமே ஆகும்.
இன்று விடுதலைப் போராளி குழுக்கள் என்று அழைக்கப்படும் குழுக்களிலும் கம்யூனிஸ்ட் அதிதீவிரக் குழுக்கள் என்று அறியப்படும் குழுக்களிலும் அக்குழுக்கள் அவர்கள் எந்த நாட்டை எப்படிப்பட்ட ஆட்சியை நிலைநிறுத்த விரும்புகிறார்களோ அவை சார்ந்த நடவடிக்கைகள் ஒரு உயரிய சித்தாந்தத்தின் வழி காட்டுதலை அடிப்படையாகக் கொண்டு சூழ்நிலைகளை சரியாக கணித்து நடத்தப்படாமல் இருக்கின்றன. அதனால் அந்நடவடிக்கைகளின் போது வழக்கமாக ஆங்காங்கே நிகழும் ஒரு சில மிக மிகக் குறைந்த அளவிலான அத்துமீறல்களோடு நிற்காமல் பல அசாதாரண அத்து மீறல்களும் நடந்துவிடுகின்றன.
எந்த உயரிய இலக்கும் தவறான வழிமுறைகளை நியாயப்படுத்துவதில்லை
அவற்றை அவர்கள் நியாயப்படுத்துவதற்குக் கூறும் ஒரே கருத்து -வழிமுறைகளின் கோளாறுகளை போராட்டத்தின் நோக்கமும் இலக்கும் நியாயப்படுத்தும் என்பதாகும். செ-யின் புரட்சிகர வரலாற்றில் இது போன்ற சால்சாப்புகளைக் கூற வேண்டிய அவசியமே நேரவில்லை. ஏனெனில் நாம் ஏற்கனவே பார்த்தது போல் அவரிடம் சித்தாந்தப் புரிதல், அதனை அமலாக்குவதில் உறுதித் தன்மை, புறச் சூழ்நிலைகளைப் பொதுவாகச் சரியாகக் கணிக்கும் போக்கு, இவை எல்லாவற்றிற்கும் மேலாக சித்தாந்தம் கற்பித்த உயர்ந்த ஒழுக்க நெறி அனைத்தும் இருந்தது.
அந்த உயர்ந்த ஒழுக்க நெறிமுறை மக்களுக்காக உயிரைக் கொடுக்கும் மகத்தான தியாக உணர்வினை அவரிடம் உருவாக்கியிருந்தது. அவர் ஒரு குட்டி முதலாளித்துவ குணங்களை அதிகம் கொண்ட மத்தியதர வர்க்கத்திலிருந்து வந்தவராக இருந்த போதிலும் அவரால் தன்னை உழைக்கும் வர்க்கச் கலாச்சாரத்தை மனமுவந்து கைக் கொள்பவராக ஆக்கிக் கொள்ள முடிந்தது. குட்டி முதலாளித்துவ அவசரத் தன்மையும், பல இடங்களில் தங்களது தனிப்பட்ட சிந்தனைக்குகந்த விதத்தில் புறச்சூழலைத் திரித்துப் பார்க்கும் போக்கும் அவரிடம் இல்லை. எனவே அவர் உண்மையான மார்க்சியப் புரட்சியாளனாக இருந்தார். அதாவது மனித குலத்தின் மீதான நேசமே அவரைப் புரட்சிப் பாதைக்கு இட்டுச் சென்றது. யார் மீதான எந்தவகை வெறுப்பும் அவரை அப்பாதைக்கு இட்டுச் செல்லவில்லை.
மார்க்ஸ் இறந்த வேளையில் எங்கெல்ஸ் கூறினார்; சிந்தாந்த ரீதியில் மார்க்சுக்கு பல பகைவர்கள் இருந்தனர். ஆனால் தனி மனித ரீதியில் பகைவர் என்று எவருமே அவருக்கு இல்லை. எனவே அவர் வழியில் வந்த செ யும் பெரும்பாலான சமயங்களில் மலரினும் மென்மையான மனிதாபிமான மனநிலை கொண்டவராக இருந்தார். அவரைக் காட்டிக் கொடுத்தவர்களைக் கூட அவர் வெறுக்கவில்லை.
அவரது சிறைக்காவலர்கள் மனதிலும் ஒரு செல்வாக்கைச் செலுத்தினார். அவர் தனது கைவிலங்குகளைக் கழட்டிவிட முடியுமா என்று கேட்ட போது முடியாது என்று அவர் முகத்தைப் பார்த்து அந்த சிறைக் காவலரால் சொல்ல முடியவில்லை. அதே சமயத்தில் மக்கள் விரோதிகளை அவர்கள் தங்கள் அணியில் இருந்தவர்களாகவே இருந்த போதும் அவர்களை மன்னிக்காத மன உறுதி கொண்டவராக இருந்தார். அந்த மலரை ஒத்த இதயத்தின் மறுபக்கத்தில் உருக்கின் உறுதியும் இருந்தது. அதனால் தான் உலக அளவில் உழைக்கும் வர்க்கப் புரட்சியாளர்களின் இதயத்தில் உணர்வாக, உத்வேகமாக, உந்து சக்தியாக, ஒரு அழகுணர்வாக அவர் வாழ்கிறார்.
அவரைப் பொறுத்தவரை பொலிவிய ஆட்சியாளர்களும் அத்தனை கொடூரமானவர்களாக இருந்தனர். விசாரணை போன்ற நாடகங்களை நடத்துவதற்கு முன்னரே செ-யை கொல்வது என்ற முடிவிற்கு அவர்கள் வந்துவிட்டனர். அவர்களில் மிக முக்கிய இராணுவ தளபதி ஒருவன் கூறினான்: கியூபாவில் பாடிஸ்டா செய்த பெரும் தவறே அவர் பிடியில் சிக்கிய பிடலை கொல்லாமல் விட்டதுதான் என்று.
கடந்த ஆண்டு வெளிவந்து கேன்ஸ் திரைப்பட விருதுகளில் ஒன்றினைப் பெற்ற செ குறித்த திரைப்படம் செ-யின் வாழ்க்கையினையும் அவர் குறித்த பல சரியான புரிதல்களையும் மேலே பார்த்த விதத்தில் முன் வைக்கிறது. அத்துடன் லத்தீன் அமெரிக்க நாடுகளின் ஆளும் வர்க்கம், அங்கு செயல்பட்ட புரட்சியாளர்களின் நடைமுறை, மக்களுக்கும் அரசிற்கும் இருந்த உறவு - மக்களுக்கும் புரட்சியாளர்களுக்கும் இருந்த உறவு, அவற்றின் தன்மைகள் போன்றவற்றையும் தெளிவாக சித்தரிக்கிறது. அந்த வகையில் அது ஒரு திரைப்படம் மட்டுமல்ல; அது ஒரு உண்மைப் புரட்சியாளன் குறித்த ஆவணமும் ஆகும்.
[கருத்து:2 கருவூலம்:1 மே 2009 இதழ்]
இன்னொருவர் அர்ஜென்டைனாவில் பிறந்து கியூபா அதிபர் பிடல் காஸ்ட்ரோவுடன் இணைந்து கியூபா விடுதலைக்காகப் போராடி அந்த நாட்டின் வெளியுறவு மந்திரியாகவும் இருந்தவர். அதன்பின்னர் பொலிவியா நாட்டில் சமூக மாற்றத்தை கொண்டு வருவதற்காக தன் நாட்டையும் வகித்த பதவியையும் தூக்கி எறிந்துவிட்டு பொலிவியா சென்றவர், மிகக் குறைந்த வயதிலேயே பொலிவியா ராணுவத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டவர்.
இவரும் தன்னை ஒரு கம்யூனிஸ்ட் என பகிரங்கமாக பிரகடனப்படுத்திக் கொண்டவர். அவரை அவரது புரட்சிகரப் பணிக்காக நேசிக்கும் ஒரு பெண் அவரிடம் நீங்கள் ஒரு கம்யூனிஸ்டா என்று கேட்க, அதற்கு அவர் கம்யூனிஸ்டுகள் எப்படி இருப்பார்கள் என்று திருப்பி கேட்க, அதற்கு அவர் உங்களைப் போல் இருக்க மாட்டார்கள் என்று கூற, நாங்கள் அனைத்து வர்ணங்களிலும் இருப்போம் என தன் கம்யூனிஸ்ட் அடையாளத்தைக் காட்டிக் கொண்டவர்.
லட்சியத்துடனான முழுப்பிணைப்பு
புரட்சிகர வாழ்க்கை என்பது பல சிரமங்கள் நிறைந்தது. அவ்வாழ்க்கையில் ஈடுபடுவோரின் உயிருக்கு உத்திரவாதம் இருப்பதில்லை. ஆனால் அத்தகைய புரட்சியாளர்களிலும் ஒருபடி மேலே சென்று இவ்விருவரும் நன்கு அறிந்தே தங்கள் உயிரைக் கொடுத்தவர்கள். தங்களைக் காப்பாற்றிக் கொள்ள ஏராளமான வாய்ப்புகள் இருந்தும் அவற்றைத் தூக்கி எறிந்து விட்டு தங்களது இன்னுயிரைப் பொருட்படுத்தாது தங்களது முடிவை நோக்கிய பயணத்தை ஒரு லட்சியத்திற்காக மிக வேகமாக தாங்களே தொடங்கியவர்கள்.
பகத்சிங்கை பாராளுமன்றத்தில் வெடிகுண்டு வீச அனுப்புவதற்கு இந்துஸ்தான் ரிபப்ளிக்கன் ராணுவத்தின் தளபதி சந்திர சேகர் ஆசாத் மிகவும் தயங்கினார். ஏனெனில் அது வரையில் சாண்டர்ஸ் என்ற வெள்ளைப் போலீஸ் அதிகாரியை கொன்றவர்களில் இவரும் ஒருவர் என்பது வெள்ளை அரசுக்குத் தெரியாது. அவர்கள் குண்டு வீசச் சென்றது குண்டை வீசிவிட்டு தப்பி வருவதற்காக அல்ல. தீங்கு செய்யாத அக்குண்டு வெடித்தவுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனம் தங்கள் பக்கம் திரும்பும் வண்ணம் தங்களது அமைப்பின், கொள்கைகள் நோக்கங்கள் ஆகியவற்றை எடுத்துக் கூறுவதற்காகவே அவர்கள் சென்றனர். அதன் மூலம் இந்திய இளைஞர்களை தங்களின் பாதைக்குத் திருப்ப வேண்டும் என்பது அவர்களது திட்டம். அந்த வகையில் அவர்கள் தாமாகவே கைதாகச் சென்றவர்களே ஆவார்.
அவ்வாறு அவர்கள் கைதானால் குண்டு வீசிய குற்றத்தைக் காட்டிலும் மிகப் பெரிய குற்றமான சாண்டர்ஸ் கொலைக் குற்றத்தில் அவர் சிக்கிவிடுவார் என்று ஆசாத் மிகவும் பயந்தார். இருந்தாலும் பகத்சிங்கே அங்கு ஏற்படும் சூழ்நிலை அனைத்தையும் சமாளிக்கும் திறம் கொண்டவர் என்பதாலும் மிகவும் தெளிவாக கருத்துக்களை முன் வைக்கக் கூடியவர் என்பதாலும் நாடாளுமன்றத்தில் குண்டு வீசும் குழுவில் பகத்சிங் இருக்க வேண்டும் என்று சுகதேவ் விரும்பினார். ஏற்கனவே அவ்விருப்பத்தை தம் நெஞ்சம் நிறையக் கொண்டிருந்த பகத்சிங் மிகுந்த மகிழ்ச்சியுடன் அதனை ஏற்றுக் கொண்டார். ஆசாத்தின் கருத்திற்கு சிறிதளவு செவிமடுத்திருந்தால் கூட பகத்சிங்கின் உன்னதமான உயிர் அத்தனை இளம் வயதில் அவரது உடலைவிட்டுப் பிரிந்திருக்காது.
அதைப் போலவே செ குவேராவிடம் பிடல் காஸ்ட்ரோ பொலிவியா செல்லும் திட்டத்தை செ தெரிவித்த போது அதில் தனக்கிருந்த தயக்கத்தை வெளிப்படுத்தினார். 'உங்களைப் பொறுத்த வரையில் கியூபா விடுதலையை சாதிப்பது என்ற உங்களது எண்ணம் நிறைவேறிவிட்டது. இனி அந்த நாட்டை புனரமைக்கும் மாபெரும் பணி உங்கள் முன் உள்ளது. ஆனால் என்னைப் பொறுத்தவரை என் கடமை முடிந்துவிட்டதாக நான் எண்ணவில்லை. எனவே நான் பொலிவியா செல்கிறேன்' என்று ஒரு கடிதம் மூலம் பிடல் காஸ்ட்ரோவிடம் செ தெரிவித்த போது பிடல் கேட்டார்: பொலிவியாவின் சமூக மாற்றம் ஏற்படுவதற்கான புறச்சூழ்நிலைகள் கனிந்துள்ளனவா என்று. அவ்வாறு காலம் கனியும் என்று காத்திருந்தால் 50 ஆண்டுகள் ஆனால்கூட அது கனியாது என பிடலிடம் கூறிவிட்டுச் சென்றார் செ. செ குவேராவைப் பொறுத்தவரை அத்தனை அவசரமாக பொலிவியாவிற்கு சென்று அத்தனை பெரிய இடரை எதிர்கொண்டிருக்க வேண்டியதேயில்லை. இருந்தும்கூட தெரிந்தே தனது உயிரைப் பணயமாகக் கேட்கும் ஒரு லட்சியத்தை நோக்கி அவர் திட்டவட்டமாகச் சென்றார்.
மரணத்தையே துச்சமெனக் கருதும் இத்தகைய மனப்பான்மையால் பகத்சிங் - சே இருவரும் உலகெங்கிலும் உள்ள இளம் புரட்சியாளர்களின் லட்சிய முன்னோடிகளாக விளங்குகிறார்கள். சாதாரண மனிதர்களைப் பொறுத்த வரையில் இந்த குணம் நினைத்துப் பார்க்கவும் முடியாதது. புரட்சியாளர்களைப் பொறுத்தவரையிலும் கூட இது ஒரு அருங்குணமே. லட்சியத்துடன் ஒருவர் தன்னை முழுமையாக இணைத்துக் கொள்ளும்போதே இத்தகைய அருங்குணங்கள் உருவாகின்றன. அதைப் புரிந்து கொள்ள முடியாத பல சாதாரண மனிதர்கள் அதனை பைத்தியக்காரத்தனம் என்று கூறுகின்றனர். அதற்கு செ அளித்த பதில் மிகவும் சுவையானது இத்தகைய பைத்தியக்காரத்தனங்களை ஓரளவு கொண்டிருப்பது நல்லதே என்று அவர் கூறினார்.
இப்படிப்பட்ட ஒரு குணத்தைக் கொண்டிருந்ததால் இவ்விருவரைப் பற்றியும் பல புனை கதைகளும் மக்களால் பரப்பப்படுகின்றன. அப் புனை கதைகள் அவர்களது வீரத்தை சற்றே மிகைப்படுத்தி கூறும் ஆக்கப்பூர்வ பணியினையே ஆற்றுகின்றனவேயன்றி எதிர்மறைத் தன்மை எதையும் கொண்டிருக்கவில்லை. இவர்களது வாழ்க்கை வரலாறு போதிய ஆதாரங்களுடன் முழுமையாக வெளிக்கொணரப்படாததால் இவர்களில் குறிப்பாக செ குவேராவைப் பற்றிய பல்வேறு புரிதல்கள் அவையாகவே மக்கள் பலரிடம் ஏற்பட்டன. அதுமட்டுமின்றி அவரை தங்களது ஆதர்ச சக்தியாக வெளிப்படையாக காட்டிக் கொண்டவர்களின் நடைமுறையை வைத்தும் பல புரிதல்கள் தாமாகவே இடதுசாரி ஆர்வலர்களிடம் ஏற்பட்டன.
இந்தியாவில் செ குவேராவை தங்களது ஆதர்ச சக்தியாக ஏற்றுக் கொண்டவர்களாக பல அதிதீவிர கம்யூனிஸ்ட் குழுக்களைச் சேர்ந்தவர்கள் காட்டிக்கொள்கின்றனர். அவர்களிடம் நாம் காணும் பல குணங்களைப் பார்த்து இவர்கள் இப்படி என்றால் இவர்களின் முன்னோடியான செ குவேராவும் இவ்வாறுதான் இருந்திருப்பார் என்பது போன்ற பல எண்ணப் போக்குகளை உருவாக்கிக் கொள்கிறோம். எடுத்துக்காட்டாக எதையுமே வெளிப்படையாக கூறாத தன்மைகள் அதாவது ஒருவரை, ஒரு வேலையில் அதைப் பற்றி எதையும் கூறாது இறக்கி விட்டுவிட்டு, அவர் அதில் சிக்கிக் கொண்டபின் அதை வைத்தே அதிலிருந்து மீளமுடியாதவராக அவரை ஆக்கிவிடுவதும், அவரை தங்களின் அணியில் நிரந்தரமாகச் சேர்த்துக் கொள்வதுமான ஒரு வழிமுறையை இந்தியாவின் அதீத கம்யூனிஸ்ட் குழுக்கள் என்று அறியப்படும் பல குழுக்களிடம் பல சமயங்களில் பார்க்க முடிகிறது. இதை வைத்து இவர்களின் முன்னோடியான செ குவேரா போன்றவர்களைப் பற்றியும் அவர்களும் இப்படித்தான் இருந்திருப்பார்கள் என்ற எண்ணப்போக்கு இயற்கையாகவே பலரிடம் ஏற்படுகிறது.
முழுமையான வெளிப்படைத் தன்மை
ஆனால் உண்மையில் செ-யும், அவரது குழுவினரும் அப்படிப்பட்டவர்களா என்று வரலாற்று ஆதாரங்களை வைத்து பார்த்தால் நாம் ஏமாந்து போவோம். அதாவது கியூபா புரட்சி ஆரம்பித்த அந்த வேளைகளில் புரட்சிப் படையினரை ஒன்றாக நிறுத்தி அவர்களிடம் செ-யும் பிடலும் முழங்குகிறார்கள்; அதாவது நாம் பயணிக்கப் போகும் பாதை பல இடர்பாடுகளைக் கொண்டது. இதில் நாங்களும் உங்களில் பலரும் கூட உயிரிழக்க நேரலாம். எனவே உயிர்ப்பயம் உள்ளவர்கள் யாரேனும் இங்கு இருந்தால் முதலில் வெளியே வந்துவிடுங்கள். அவர்களுக்கு அரைமணிநேரம் அவகாசம் தருகிறோம்- இவ்விடத்தைவிட்டு ஓடிவிடுவதற்கு என்று தெளிவாகக் கூறியபிறகே தங்களது புரட்சிப் பயணத்தை அவர்கள் மேற்கொண்டனர். அது மட்டுமின்றி தங்களை தங்களது படையில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொண்ட இரண்டு 18 வயது நிரம்பாத சிறுவர்களை செ படையில் சேர்த்துக் கொள்ள மறுத்துவிட்டதால் தங்களைச் சேர்த்துக் கொள்ளாவிடில் தாங்கள் அவ்விடத்தைவிட்டு நகரப்போவதில்லை என அவர்கள் சத்தியாக்கிரகம் செய்தபின்னரே அவர்களை செ சேர்த்துக் கொண்டார். இன்று விடுதலைப் படை என்று அழைக்கப்படும் பல படைகளில் சிறுவர்களைக் கட்டாயப்படுத்திச் சேர்ப்பதாக புகார்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் செ கடைபிடித்த மரபு எத்தனை உயர்வாக நிமிர்ந்து நிற்கிறது.
மக்களிடமிருந்து அந்நியப்பட்டிருந்த அரசுகள்
இந்தியா போன்ற பல தேசிய இனங்களைக் கொண்ட பெரிய நாடுகளைப் போல் இல்லாது பல லத்தீன் அமெரிக்க நாடுகள் பரப்பளவில் சிறியவையாகவும் ஆரம்பம் முதற்கொண்டு ஏதாவதொரு ஏகாதிபத்தியத்தின் பிடியிலும் அல்லது அவற்றின் பொம்மை அரசுகளின் பிடியிலும் இருந்தவையே. அவற்றில் ஆட்சி மாற்றங்கள் பல சமயங்களில் ராணுவச் சதிகள் மூலமாகவே நடந்தன. எனவே அந்த ஆட்சியாளர்கள் மக்களின் நன்மதிப்பை சிறிது கூடப் பெற்றவர்களாக இருக்கவில்லை.
அவர்கள் தங்களின் ஆயுத வலிமையினால் மக்களை அச்சுறுத்தி ஆட்சி செய்தார்களே தவிர அவர்களை ஜனநாயகம் போன்ற பெயர்களில் ஏமாற்றி ஆட்சிபுரியவில்லை. எனவே மக்களின் மனநிலை எப்போதுமே பெரும்பாலும் அவர்களின் ஆட்சியாளர்களுக்கு எதிராகவே இருந்தது. அந்த ஆட்சியாளர்களை எதிர்ப்பதற்கும் தேர்தல் முறை போன்ற வழிமுறைகள் அங்கு பல காலம் அமுலில் இல்லை. அந்தச் சூழ்நிலையில் மக்களின் வெறுப்பின் காரணமாக அவ்வரசுகளை ஆயுதம் தாங்கிய கிளர்ச்சிகள் மூலம் எதிர்கொள்ளத் தயாராக இருந்தவர்கள் அனைவருக்கும் மக்களின் ஒட்டுமொத்த ஆதரவு கிடைத்தது.
புறச்சூழ்நிலை குறித்த கணிப்பும் அது அளித்த உத்வேகமும்
அதனால்தான் 82 பேர் கொண்ட பிடல் காஸ்ட்ரோ தலைமையிலான ஒரு குழு மெக்சிக்கோவிலிருந்து ஒரு படகில் புறப்பட்டு கியூபாவை சென்றடையும் போது அதில் உயிருடன் இருந்த 12 பேரைக் கொண்டு ஒரு மிகப் பெரிய ஆயுதம் தாங்கியப் புரட்சியை நடத்த முடிந்தது. அதன் விளைவாக பிடல்காஸ்ட்ரோவால் கியூபாவின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடிந்தது.
அவர்கள் கியூபாவிற்குப் புறப்படுகையில் அவர்களுக்கு நம்பிக்கையூட்டக் கூடியதாக இருந்தது. கியூபாவின் பின் தங்கிய பொருளாதார சமூக சூழ்நிலைகள்தான். அதாவது அங்கு 1.5 சதவீதம் பேர் 40 சதவீதம் நிலங்களைத் தங்கள் கைவசம் வைத்திருந்தனர். 20 சதவீதம் பேருக்கு வேலையில்லை, 37 சதவீதம் பேர் எழுதப் படிக்கத் தெரியாதவர்களாக இருந்தனர். வர்த்தக ரீதியாக அமெரிக்காவிற்குச் செலுத்த வேண்டிய கடன் அந்நாட்டிற்கு மிகமிக அதிகம் இருந்தது.
செ குவேராவின் பொலிவிய சோதனையும் இந்தப் பின்னணியிலேயே செய்யப்பட்டது. மக்களின் பின்தங்கிய, கல்வியறிவு அற்ற, மருத்துவ வசதிகள் போன்றவை அறவே இல்லாத நிலை ஆகியவற்றை அடிப்படையாக வைத்து மக்கள் எழுச்சியை உருவாக்க முடியும் என்று செ நம்பினார். லத்தீன் அமெரிக்க நாடுகளின் அக்கால கட்ட நிலை எவ்வாறு இருந்தது என்பதற்கு ஒரு பொருத்தமான உதாரணம், செ மருத்துவப் பட்டம் பெற்ற ஒரு டாக்டர் என்பதால் அவர் செல்லும் இடங்களில் எல்லாம் அவரது படை தங்கியிருந்த இடங்களில் சாதாரண மக்களுக்கு வைத்தியம் செய்தார். அவ்வாறு அவரிடம் வைத்தியம் செய்ய வந்த ஒரு பெண் அவரிடம் எனக்கு வியாதி ஒன்றும் இல்லை ஆனால் நான் இதுவரை டாக்டர் எவரையும் பார்த்ததில்லை; டாக்டர் எப்படி இருப்பார் என பார்ப்பதற்கே வந்தேன் என்று கூறினாராம்.
இவ்வாறு மக்கள் இருந்த பின்தங்கிய நிலையை மட்டுமல்ல பொலிவிய நாட்டின் வடக்குப் பகுதியில் செப்புச் சுரங்கங்களில் நடந்து கொண்டிருந்த வேலை நிறுத்தத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டுதான் செ தனது புரட்சிப் பயணத்தைத் தொடங்கினார். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட சுரங்கத் தொழிலாளர்கள் தங்கள் ஒவ்வொருவரின் ஊதியத்திலிருந்தும் 50 பொலிவியானோ என்று கூறப்படும் அந்நாட்டு ரூபாய்களை புரட்சியாளர்களுக்கு நிதியாக வழங்க முன்வந்தனர். இவ்வாறு செ குவேராவின் பொலிவிய நாடு, அதன் சமூகம் அதில் இருக்கக் கூடிய முரண்பாடுகள் ஆகியவை குறித்த அவரது கணிப்பு மேலோட்டமாகவும் பொதுவிலும் சரியாகவே இருந்தது.
லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கே உரிய அவற்றின் ஏகாதிபத்திய பொம்மையாட்சியாளர்களை ஆயுதந்தாங்கி எதிர்கொண்டால் மக்கள் ஆதரவு தானே வரும் என்று அவர் நம்பினார். அந்த நம்பிக்கைக்கு உகந்த விதத்தில் பொலிவிய மக்களின் மனநிலை இல்லை. கியூபாவின் மக்களைப் போல் அல்லாது அவர்களிடம் அரசு குறித்த அச்ச உணர்வு மேலோங்கி இருந்தது. புரட்சியாளர்கள் மீதான நம்பிக்கை குறைவாக இருந்தது. அந்த ஒரு அம்சத்தைத் தவிர வேறு அனைத்து சூழ்நிலைகளையும் கணிப்பதில் செ சரியாகவே இருந்தார்.
ஆனால் இந்தியாவில் அவரது வழியில் செல்வதாகக் காட்டிக் கொள்ளக் கூடியவர்கள் அனைத்துக் கணிப்புகளிலுமே தவறு செய்தவர்களாகவே உள்ளனர். இங்கு நாடாளுமன்ற ஜனநாயகம் என்ற பெயரளவிலான ஜனநாயகம் நிலவுகிறது; இங்கு லத்தீன் அமெரிக்க நாடுகளைக் காட்டிலும் மிக அதிக அளவில் தொழிலாளர்கள் உள்ளனர். இங்கு விவசாயமும் லாப நோக்குடன் அதாவது முதலாளித்துவ உற்பத்திமுறையில் நடப்பதால் இங்கு விவசாயத் தொழிலாளர்களே உள்ளனர். ஆலைத் தொழிலாளர்களுடன் விவசாயத் தொழிலாளரையும் சேர்த்தால் மிக அதிக எண்ணிக்கையில் உழைக்கும் பாட்டாளி வர்க்கமே உள்ளது.
அந்த நிலையில் அரசியல் சட்டம் வழங்கி இருக்கக் கூடிய உரிமைகளையும், தொழிற்சங்க உரிமைகளையும் பயன்படுத்தி வர்க்கப் போராட்டம் நடத்துவதன் மூலம் பரந்துபட்ட உழைப்பாளி வர்க்கத்தை அணி திரட்ட இங்கு வாய்ப்பு உள்ளது. ஆனால் இங்குள்ள செ குவேராவின் வழியை பின்பற்றுவதாக காட்டிக் கொள்ள கூடியவர்கள் இவை எதையும் செய்யாமல் மலைவாழ் மக்களை மட்டும் தங்கள் பக்கம் வைத்துக் கொண்டு சமுதாய மாற்றப் புரட்சியில் ஈடுபடுவதாக தங்களைக் காட்டிக் கொள்கிறார்கள்.
கம்யூனிஸ்டுகளிடம் மனிதாபிமானமே இராது - இது முதலாளித்துவ பிரச்சாரகர்கள் மீண்டும் மீண்டும் கூறி நிலைநாட்டியுள்ள கண்ணோட்டம். ஆனால் மார்க்ஸ் கூறினார்: தற்போது நிலவும் மனிதாபிமான கண்ணோட்டத்தில் இருந்து தனிச் சொத்துடைமை என்ற களங்கத்தை நீக்கிவிட்டால் அதன் பின் வரும் உன்னதமான மனிதாபிமானமே கம்யூனிசம் என்று. செ எத்தனை உயர்ந்த மனிதாபிமானியாக இருந்தார் என்றால் அவர் தங்களின் ராணுவத்திற்கான உணவுப் பொருட்களை மக்களிடமிருந்து பெறும்போது கூட அவற்றிற்கான விலை என்ன என்பதை அவர்களிடம் கேட்டு எந்த வற்புறுத்தலுமின்றி விலையைக் கொடுத்து அவர்களிடமிருந்து வாங்கினார்.
புரட்சியாளர்கள் குறித்து எழுதுவதற்காக அங்கு வந்து சிக்கிக் கொண்ட டி ப்ரே போன்ற எழுத்தாளர்களை அந்நிலையில் அவர்கள் இருந்த சிக்கலான பொலிவியப் பகுதியிலிருந்து பத்திரமாக அனுப்புவது மிக மிக சிரமமானது என்றிருந்த நிலையிலும் அவர்களை அனுப்ப பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டார். அவர்களிடம் செ பிரான்ஸ் நாட்டிற்குச் சென்று ஜான்பால் சாத்தர் போன்ற எழுத்தாளர்களிடமும் பிரிட்டன் சென்று பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் போன்ற பகுத்தறிவுவாதிகளிடமும் புரட்சியாளர்களுக்கு ஆதரவான அறிக்கைகள் விடவும் பணம் திரட்டி தரவும் கேட்டுக் கொள்ளுமாறு அவர்களிடம் வேண்டிக்கொண்டார்.
தங்கள் ராணுவத்தில் உள்ளோர் சாதாரண அப்பாவி மக்களை துன்புறுத்தும், பெண்களை மானபங்கம் செய்யும் செயல்களில் ஈடுபட்டால் அவர்களுக்கு கர்ணகடூரமான தண்டனைகளையே வழங்கினார். அதாவது அவர்களை ஈவிரக்கமின்றி சுட்டுத் தள்ளினார். அத்தகைய உயர்ந்த கலாச்சாரத்தையும் ஒழுக்க நெறிமுறையையும் அவர் கொண்டிருந்ததற்குக் காரணம் அவர் ஒரு உயர்ந்த சித்தாந்தத்தை தன்வசம் கொண்டிருந்ததும் அதன் அடிப்படையில் அவர் வாழ்ந்த சமூகத்தை கணிக்க முடிந்ததுமே ஆகும்.
இன்று விடுதலைப் போராளி குழுக்கள் என்று அழைக்கப்படும் குழுக்களிலும் கம்யூனிஸ்ட் அதிதீவிரக் குழுக்கள் என்று அறியப்படும் குழுக்களிலும் அக்குழுக்கள் அவர்கள் எந்த நாட்டை எப்படிப்பட்ட ஆட்சியை நிலைநிறுத்த விரும்புகிறார்களோ அவை சார்ந்த நடவடிக்கைகள் ஒரு உயரிய சித்தாந்தத்தின் வழி காட்டுதலை அடிப்படையாகக் கொண்டு சூழ்நிலைகளை சரியாக கணித்து நடத்தப்படாமல் இருக்கின்றன. அதனால் அந்நடவடிக்கைகளின் போது வழக்கமாக ஆங்காங்கே நிகழும் ஒரு சில மிக மிகக் குறைந்த அளவிலான அத்துமீறல்களோடு நிற்காமல் பல அசாதாரண அத்து மீறல்களும் நடந்துவிடுகின்றன.
எந்த உயரிய இலக்கும் தவறான வழிமுறைகளை நியாயப்படுத்துவதில்லை
அவற்றை அவர்கள் நியாயப்படுத்துவதற்குக் கூறும் ஒரே கருத்து -வழிமுறைகளின் கோளாறுகளை போராட்டத்தின் நோக்கமும் இலக்கும் நியாயப்படுத்தும் என்பதாகும். செ-யின் புரட்சிகர வரலாற்றில் இது போன்ற சால்சாப்புகளைக் கூற வேண்டிய அவசியமே நேரவில்லை. ஏனெனில் நாம் ஏற்கனவே பார்த்தது போல் அவரிடம் சித்தாந்தப் புரிதல், அதனை அமலாக்குவதில் உறுதித் தன்மை, புறச் சூழ்நிலைகளைப் பொதுவாகச் சரியாகக் கணிக்கும் போக்கு, இவை எல்லாவற்றிற்கும் மேலாக சித்தாந்தம் கற்பித்த உயர்ந்த ஒழுக்க நெறி அனைத்தும் இருந்தது.
அந்த உயர்ந்த ஒழுக்க நெறிமுறை மக்களுக்காக உயிரைக் கொடுக்கும் மகத்தான தியாக உணர்வினை அவரிடம் உருவாக்கியிருந்தது. அவர் ஒரு குட்டி முதலாளித்துவ குணங்களை அதிகம் கொண்ட மத்தியதர வர்க்கத்திலிருந்து வந்தவராக இருந்த போதிலும் அவரால் தன்னை உழைக்கும் வர்க்கச் கலாச்சாரத்தை மனமுவந்து கைக் கொள்பவராக ஆக்கிக் கொள்ள முடிந்தது. குட்டி முதலாளித்துவ அவசரத் தன்மையும், பல இடங்களில் தங்களது தனிப்பட்ட சிந்தனைக்குகந்த விதத்தில் புறச்சூழலைத் திரித்துப் பார்க்கும் போக்கும் அவரிடம் இல்லை. எனவே அவர் உண்மையான மார்க்சியப் புரட்சியாளனாக இருந்தார். அதாவது மனித குலத்தின் மீதான நேசமே அவரைப் புரட்சிப் பாதைக்கு இட்டுச் சென்றது. யார் மீதான எந்தவகை வெறுப்பும் அவரை அப்பாதைக்கு இட்டுச் செல்லவில்லை.
மார்க்ஸ் இறந்த வேளையில் எங்கெல்ஸ் கூறினார்; சிந்தாந்த ரீதியில் மார்க்சுக்கு பல பகைவர்கள் இருந்தனர். ஆனால் தனி மனித ரீதியில் பகைவர் என்று எவருமே அவருக்கு இல்லை. எனவே அவர் வழியில் வந்த செ யும் பெரும்பாலான சமயங்களில் மலரினும் மென்மையான மனிதாபிமான மனநிலை கொண்டவராக இருந்தார். அவரைக் காட்டிக் கொடுத்தவர்களைக் கூட அவர் வெறுக்கவில்லை.
அவரது சிறைக்காவலர்கள் மனதிலும் ஒரு செல்வாக்கைச் செலுத்தினார். அவர் தனது கைவிலங்குகளைக் கழட்டிவிட முடியுமா என்று கேட்ட போது முடியாது என்று அவர் முகத்தைப் பார்த்து அந்த சிறைக் காவலரால் சொல்ல முடியவில்லை. அதே சமயத்தில் மக்கள் விரோதிகளை அவர்கள் தங்கள் அணியில் இருந்தவர்களாகவே இருந்த போதும் அவர்களை மன்னிக்காத மன உறுதி கொண்டவராக இருந்தார். அந்த மலரை ஒத்த இதயத்தின் மறுபக்கத்தில் உருக்கின் உறுதியும் இருந்தது. அதனால் தான் உலக அளவில் உழைக்கும் வர்க்கப் புரட்சியாளர்களின் இதயத்தில் உணர்வாக, உத்வேகமாக, உந்து சக்தியாக, ஒரு அழகுணர்வாக அவர் வாழ்கிறார்.
அவரைப் பொறுத்தவரை பொலிவிய ஆட்சியாளர்களும் அத்தனை கொடூரமானவர்களாக இருந்தனர். விசாரணை போன்ற நாடகங்களை நடத்துவதற்கு முன்னரே செ-யை கொல்வது என்ற முடிவிற்கு அவர்கள் வந்துவிட்டனர். அவர்களில் மிக முக்கிய இராணுவ தளபதி ஒருவன் கூறினான்: கியூபாவில் பாடிஸ்டா செய்த பெரும் தவறே அவர் பிடியில் சிக்கிய பிடலை கொல்லாமல் விட்டதுதான் என்று.
கடந்த ஆண்டு வெளிவந்து கேன்ஸ் திரைப்பட விருதுகளில் ஒன்றினைப் பெற்ற செ குறித்த திரைப்படம் செ-யின் வாழ்க்கையினையும் அவர் குறித்த பல சரியான புரிதல்களையும் மேலே பார்த்த விதத்தில் முன் வைக்கிறது. அத்துடன் லத்தீன் அமெரிக்க நாடுகளின் ஆளும் வர்க்கம், அங்கு செயல்பட்ட புரட்சியாளர்களின் நடைமுறை, மக்களுக்கும் அரசிற்கும் இருந்த உறவு - மக்களுக்கும் புரட்சியாளர்களுக்கும் இருந்த உறவு, அவற்றின் தன்மைகள் போன்றவற்றையும் தெளிவாக சித்தரிக்கிறது. அந்த வகையில் அது ஒரு திரைப்படம் மட்டுமல்ல; அது ஒரு உண்மைப் புரட்சியாளன் குறித்த ஆவணமும் ஆகும்.
[கருத்து:2 கருவூலம்:1 மே 2009 இதழ்]
கம்யூனிஸ்டுகளின் தேர்தல் பார்வையும் கடந்த கால தேர்தல் அனுபவங்களும்
Posted by
மாற்றுக்கருத்து
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள சூழ்நிலையில் தேர்தல் குறித்த சில விசயங்களை அலசிப் பார்ப்பது அவசியமாகிறது. மார்க்சிய அடிப்படையில் பார்க்கும்போது தேர்தல்கள் எப்போதுமே சாதாரண உழைக்கும் மக்களின் விருப்பங்களை பிரதிபலிப்பவையாக இருப்பதில்லை. எனவேதான் நாடாளுமன்றவாதத்தை மார்க்சிய அரசியல் அறிஞர்கள் எப்போதுமே எதிர்த்து வந்துள்ளனர். அதன் மேல் உழைக்கும் மக்கள் முழுமையான நம்பிக்கை வைப்பது தவறானது என்று எச்சரித்தும் வந்துள்ளனர்.
இருந்தாலும் மாமேதை லெனினால் தலைமை தாங்கப்பட்ட ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்றங்களில் பங்கேற்கவும் செய்துள்ளது. எப்போதெல்லாம் மக்கள் இயக்கங்கள் நடத்துவதற்கு உரிமைகள் மறுக்கப்பட்டு ஒரு அடக்குமுறைச் சூழ்நிலை நிலவுவியதோ அப்போதெல்லாம் பாராளுமன்றத் தேர்தலில் அது பங்கேற்றுள்ளது. அடக்குமுறை அதிக அளவில் ஏவிவிடப்படாமல் இயக்கங்கள் நடத்துவதற்கு அதிகத் தடை எதுவும் இல்லாமல் மக்கள் இயக்கங்கள் முழுவீச்சில் நடைபெறும் போது நாடாளுமன்றங்களின் பக்கம் கவனம் திசை திருப்பிவிடப்படுவது கடுமையாக அக்கட்சியால் விமர்சிக்கவும் பட்டுள்ளது.
பொதுவான கம்யூனிஸ்டுகளின் புரிதல் நாடாளுமன்ற அரசியல் மூலம் உழைக்கும் மக்களின் ஆட்சியை நிலைநாட்ட முடியாது என்பதே. அதாவது ஒரு பிரத்யேகச் சூழ்நிலையில் நாடாளுமன்றத்தில் வெற்றி பெற்று ஒரு உண்மையான கம்யூனிஸ்டு கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஆளும் முதலாளி வர்க்கத்திற்குச் சேவை புரிவதற்காக வளர்த்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றத்தை உள்ளடக்கிய அரசு எந்திரத்தை அப்படியே உழைக்கும் வர்க்கத்திற்கு ஆதரவானதாக மாற்ற முடியாது; அந்நிலையில் சமாதானப்பூர்வமாகவே அதைக் கலைத்துவிட்டு உழைக்கும் வர்க்கத்திற்கான அரசு எந்திரத்தை உருவாக்க வேண்டியது அவசியமாகும்; இதுவே தேர்தல்கள், ஜனநாயகம் குறித்த மார்க்சியப் புரிதலாகும்.
1957ல் இந்திய அனுபவம்
இந்தப் புரிதலுக்கு முரணாக அமைந்த முதல் நிகழ்வு இந்தியாவில்தான் ஏற்பட்டது. எந்த நாடாளுமன்ற முறை உழைக்கும் மக்களின் அரசியல் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்கு உகந்ததல்ல என்று கருதப்பட்டதோ அந்த நாடாளுமன்ற ஆட்சி முறையின் படி நடத்தப்பட்ட தேர்தல்கள் மூலம் 1957ம் ஆண்டு கேரள மாநிலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது. ஆட்சிக்கு வந்தவுடன் கேரள கம்யூனிஸ்டு மந்திரி சபையில் முதல்வராகப் பொறுப்பேற்ற இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் அவர்கள் நாடாளுமன்றங்கள் மூலமே கம்யூனிஸ்டுகள் சமூக மாற்றத்தை கொண்டு வர முடியும் என்பதை உலகிற்கு நாம் நிரூபித்துக் காட்டுவோம் என்று கூறினார். அதன் பின் அமிர்தஸரசில் கூடிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 5வது கட்சிக் காங்கிரசும் அக்கருத்தை பிரதிபலித்தது.
அதே சமயத்தில் குருச்ஷேவ் தலைமையிலான சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி தனது 20வது காங்கிரசில் செய்த கொள்கை ரீதியான தடம் புரலல்களுக்கும் அது ஒத்ததாக இருந்தது, அதாவது இருபதாவது கட்சி காங்கிரஸின் தீர்மானம் ஒன்றின் மூலம் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி சமாதானப்பூர்வ நாடாளுமன்ற வழிமுறையின் மூலம் சோசலிசத்தை கொண்டு வர முடியும் என்று கூறியது. அதை ஏற்றுக் கொள்ளும் விதத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஐந்தாவது கட்சி காங்கிரஸ் கட்சி அதன் குறிக்கோளை சமாதானப்பூர்வ முறையில் அடையப் பாடுபடும்' என்ற சரத்தை புதிதாக அதன் அமைப்புச் சட்டத்தின் முன்னுரையில் சேர்த்தது. ஆனால் அந்த அரசு அதிக நாள் நீடித்துச் செயல்பட அனுமதிக்கப்படவில்லை. விமோச்சன சமரம் என்ற பெயரில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி அவர்களால் தலைமை தாங்கி நடத்தப்பட்ட போராட்டத்தின் மூலம் முதல் கம்யூனிஸ்ட் அமைச்சரவை பதவியிலிருந்து இறக்கப்பட்டது.
சிலி - அனுபவம்
அதன் பின்னர் உலகறிந்த அளவில் நாடாளுமன்றத் தேர்தல்கள் மூலம் வெற்றி பெற்று ஆட்சி அதிகாரத்தில் கம்யூனிஸ்டுகள் அமர்ந்தது லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியில் ஆகும். அங்கு 70-களில் சால்வடார் அலென்டே அவர்கள் தலைமையில் தேர்தல் மூலமான கம்யூனிஸ்ட் கட்சியின் அரசு அமைந்தது. ஆனால் அவரது தேர்தல் வாக்குறுதியான அமெரிக்க முதலாளிகளுக்குச் சொந்தமான செப்புச் சுரங்கங்களை தேசியமயமாக்கியது, அவரது ஆட்சி அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலையீட்டினால் தூக்கிஎறியப்படுவதற்கு காரணமாக அமைந்தது. அந்நடவடிக்கை இத்தகைய தலையீட்டை உருவாக்கும் என்று அவருடைய நெருங்கிய சகாக்கள் எச்சரித்தனர். அதனை எதிர்கொள்ள உரிய தயாரிப்புகளை மேற்கொள்ளுமாறு அவர்கள் அவரைக் கேட்டுக் கொள்ளவும் செய்தனர்.
ஆனால் அவர் அவற்றை புறக்கணித்தார். அதனால் இந்த துயர சம்பவம் அங்கு நிகழ்ந்தது, கம்யூனிஸ்ட் ஆட்சியை தூக்கி எறிந்ததோடு அமெரிக்காவினால் அங்கு ஆட்சியாளனாக நியமிக்கப்பட்ட பினோசே, அலெண்டே உள்பட பல்லாயிரக் கணக்கில் கம்யூனிஸ்டுகளைக் கொன்று குவிக்கும் கொடும்பாதகச் செயலிலும் ஈடுபட்டான். அமைதியான முறையில் சோசலிஸத்தை அமைத்துக் காட்டுவோம் என்ற விசயத்தில் அவர் மிகவும் பிடிவாதமாக இருந்தது அவருடைய உயிரையும், பாப்லோ நெருடா போன்ற உலகப் புகழ் பெற்ற நோபல் பரிசு வாங்கிய கவிஞர் மற்றும் பல்லாயிரக்கணக்கான கம்யூனிஸ்டுகளின் உயிர்களையும் காவு கொண்டது.
நேபாளத்தின் புத்தம் புது அனுபவம்
இத்தகைய விதிவிலக்குகள் தவிர மார்க்சிஸத்தின் தேர்தல் குறித்த அடிப்படையான அரசியல் கண்ணோட்டத்தை நடைமுறைப் பூர்வமாக மறுதலிக்கும் சம்பவங்கள் வேறெங்கும் நடந்ததில்லை. மிக நீண்ட நாட்களுக்குப்பின்பு அத்தகைய ஒரு நிகழ்வு நேபாளத்தில் நிகழ்ந்தது. அதாவது நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவேயிஸ்ட்) தேர்தல் மூலம் ஆட்சிக்கு வந்தது. மார்க்சிஸம் என்பதும் அதன் பார்வையும் பல வறட்டுச் சூத்திரங்களின் தொகுப்பல்ல. ஒவ்வொரு நாட்டின் பிரத்யேகச் சூழ்நிலைக்கும் உகந்த வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டு செழுமைப்படுத்தப்பட வேண்டியதே மார்க்சிய விஞ்ஞானமாகும்.
அந்த அடிப்படையில் இந்த நிகழ்வுகளைப் பார்த்தோமானால் அவற்றின் தனித்தன்மைகளை அலசி ஆராய்ந்தோமானால் அந்த நிகழ்வுகள் ஏற்பட்டதற்கும், அதன்பின் ஏற்பட்ட விளைவுகளுக்குமான காரணங்களை நன்கு அறிய முடியும்.
கம்யூனிஸ்ட் என்ற பெயரில் செயல்பட்ட ஒரு கட்சியின் வெற்றியே அது
அவ்விதத்தில் கேரளாவில் தேர்தல் மூலமான கம்யூனிஸ்ட் அமைச்சரவை ஏற்பட்டதற்கும் காரணங்கள் உண்டு. கேரளத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை உருவாக்கியவர்கள் காங்கிரஸ் கட்சியின் பெரும் தலைவர்களாக விடுதலைப் போராட்டக் காலத்தில் விளங்கி அதன் பின் அக்கட்சியில் இருந்து வெளியேறியவர்கள் ஆவர். கம்யூனிச சித்தாந்தத்தின் மேல் மக்களுக்கு இருந்த புரிதல் மற்றும் உணர்வு அடிப்படையில் ஏற்பட்ட வெற்றி என்பதைக் காட்டிலும் 1957ல் அங்கு கம்யூனிஸ்ட் கட்சி பெற்ற தேர்தல் வெற்றி ஏ.கே.கோபாலன், இ.எம்.எஸ். போன்ற முன்னாள் காங்கிரஸ் கட்சியையும் அதன் பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியையும் சார்ந்த தலைவர்களின் மேல் கேரள மக்களுக்கு இருந்த அபிமானத்தின் காரணமாக பெறப்பட்ட வெற்றியே ஆகும்.
இதனை குடியரசு தலைவரால் ஆட்சி கலைக்கப்பட்ட பின்னர் இ.எம்.எஸ். அவர்கள் நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு முன்வைத்த வாதங்களே புலப்படுத்தும். தனது மந்திரி சபை அதீதமாக எதையும் செய்து விடவில்லை காங்கிரஸ் கட்சி உள்பட அனைத்து தீவிர ஜனநாயக இயக்கங்களும் செய்ய விரும்பியதே என்றே அவர் பிரச்சாரம் செய்தார். அவரது மந்திரி சபை கொண்டு வந்த கல்வி மசோதாவும் நிலச் சீர்திருத்த மசோதாவும் கொள்கை ரீதியாக அன்றைய நிலையில் காங்கிரஸ் கட்சிக்கும் உடன்பாடானதே.
எனவே அங்கு 1957ல் ஏற்பட்டது ஒரு முழுமையான வடிவத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம் பெற்ற வெற்றியல்ல. எத்தனையோ தியாகங்கள் புரிந்த தலைவர்களையும் தொண்டர்களையும் கொண்டதாக அன்றைய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இருந்த போதும் அது ஒரு கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்பட வேண்டிய விதத்தில் உருவாகி வளர்ந்த கட்சி அல்ல. அதன் தலைவர்கள் தொண்டர்கள் அனைவரும் ஒத்த நோக்கம், ஒருமித்த சிந்தனை போன்ற மிக அத்தியாவசியமான மார்க்சிய சிந்தனைப் போக்கை கொண்டவர்களாக இருக்கவில்லை. அதன் அடிப்படையில் ஒரு கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்படுவதற்குத் தேவையான தத்துவார்த்த மத்தியத்துவம் அக்கட்சியில் ஏற்படவில்லை.
எனவே உண்மையான அர்த்தத்தில் 1957ல் கேரளாவில் அக்கட்சிக்குக் கிடைத்த வெற்றி கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெயரில் செயல்பட்ட ஒரு கட்சிக்கு தியாக சிந்தனையுடன் கூடிய அக்கட்சியின் தலைவர் மற்றும் தொண்டர்களின் மேல் இருந்த அபிமானத்தின் காரணமாக கிடைத்த வெற்றியே தவிர, உண்மையான அர்த்தத்தில் ஒரு சோசலிஸ அமைப்பை ஏற்படுத்த விரும்பி அதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்த ஒரு கம்யூனிஸ்ட் கட்சிக்குக் கிடைத்த வெற்றி அல்ல.
நாடாளுமன்ற விசுவாசத்திற்கு கொடுக்கப்பட்ட விலை
அதைப் போல் சிலியில் அலெண்டே பெற்ற வெற்றி தங்கள் தேச வளங்கள் தங்கள் நாட்டின் மேம்பாட்டிற்குப் பயன்படாமல் அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் கொள்ளை கொள்ளப்படுவதற்கு எதிராகக் கிடைத்ததே தவிர, சுரண்டல் முறையை அப்படியே தூக்கிஎறிய வேண்டும் என்ற கம்யூனிஸ்ட் கோட்பாட்டின் அடிப்படைக்கு கிடைத்த வெற்றியல்ல. சில நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன்பு அவற்றை எடுத்தால் எத்தகையப் பின்விளைவுகள் ஏற்படும் என்பதை முன்கூட்டியே சிந்தித்துப் பார்த்து அதற்கான தயாரிப்புகளை செய்த பின்னரே அவற்றை எடுக்க வேண்டும்.
ஆனால் சிலியில் அமெரிக்க முதலாளிகளுக்குச் சொந்தமான செப்புச் சுரங்கங்களை தேசியமயமாக்குவதற்கு முன்பு அலெண்டே அதன் பின்விளைவாக அமெரிக்காவின் தாக்குதல் வரும் என்பதை பார்க்கத் தவறிவிட்டார். அவரது பல நண்பர்கள் வற்புறுத்திக் கூறியும் கூட அவர் அமெரிக்கத் தாக்குதல் வரும் பட்சத்தில் அதனை எதிர்கொள்ள மக்களின் தொண்டர்படை எதையும் உருவாக்கவில்லை. இதன் விளைவாகவே ஒரு ராணுவ அதிகாரி அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் விலைக்கு வாங்கப்பட்டு அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை ராணுவ சதியின் மூலம் அகற்ற முடிந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் சிலியின் சோஸலிஸ்ட் கட்சியும் பெரும்பான்மை மக்கள் ஆதரவை பெற்று ஆட்சிக்கு வந்தவுடன் முதலாளித்துவ நாடாளுமன்ற ஆட்சி முறைக்கு விசுவாசமானவர்களாக ஆகிவிட்டனர். தாங்கள் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருப்பது ஒரு வர்க்க கருவியே என்பதையும் அதனை வேறொரு வர்க்கத்தின் நலனுக்கானதாக மாற்ற முடியாது என்பதையும் மறந்துவிட்டனர்.
முற்றிலும் புதிய நேபாள அனுகுமுறை
மிக சமீபத்தில் நடந்த நேபாள நிகழ்வுகள் உண்மையிலேயே மிகவும் சுவைகரமானவையும், தேர்தல் ஜனநாயகம் குறித்த மார்க்சிய லெனினிய கருத்துக் கருவூலத்தில் ஒரு புதிய அத்தியாயத்தை சேர்ப்பவையாகவும் அமைந்தன. மார்க்சிய கட்சிகள் எவையும் அதுவரை முன்வைத்திராத ஒரு புதிய கருத்தை தோழர் பிரச்சந்தா தலைமையிலான சி.பி.என் (மாவோயிஸ்ட்) கட்சி வைத்தது. அதாவது பல கட்சி ஜனநாயகம் நேபாளத்தில் நிலைநாட்டப்படும் என்று அது அறிவித்தது. அது குறித்த ஐயப்பாடுகள் எழுப்பபட்ட பொழுது பல கட்சி ஜனநாயக முறையை மனப்பூர்வமாக தாங்கள் கடைபிடிக்கப் போவதாகவும் சி.பி.என் (மாவோயிஸ்ட்)கள் தயக்கமின்றி உறுதி கூறினர்.
வர்க்கங்களை அடிப்படையாகக் கொண்டே கட்சிகள் உருவாகின்றன; அதனால் உழைக்கும் வர்க்கத்தின் நலன் ஒன்றையே பிரதானமாக கருதும் கம்யூனிஸ்ட்களின் தலைமையிலான ஆட்சிமுறையில் பல கட்சி ஆட்சி முறைக்கு இடமில்லை. ஏனெனில் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் ஏற்படும் ஆட்சி முறையில் உழைக்கும் வர்க்கம் ஒன்றின் நலன் மட்டுமே பிரதானமாக கருத்தில் கொள்ளப்படும். மற்ற சுரண்டும் வர்க்கங்கள் அனைத்தும் படிப்படியாக சமூகக் கட்டு மானத்திலிருந்தே அகற்றப்படும்.
எனவே அங்கு பலகட்சி ஆட்சிமுறைக்கு வாய்ப்பே இல்லை என்பது தான் மார்க்சிஸத்தின் இன்றுவரை நிலவி நிலைபெற்றிருக்கும் கருத்தாகும். இதிலிருந்து மாறுபட்டு பலகட்சி ஆட்சி முறைக்கு ஆதரவாக நேபாளின் சி.பி.என். (எம்) கட்சி முதல் முறையாக ஒரு புதிய கருத்தினை முன் வைத்தது.
இது உலகின் பல நாடுகளின் கம்யூனிஸ்டுகள் என்ற பெயரில் செயல்படும் கட்சிகள் சென்றது போல் வர்க்க சமரசப் பாதையில் நேபாள் மாவோயிஸ்டுகளும் சென்றுவிட்டனர் என்பதை காட்டுகிறதா என்பது நம் முன் எழும் கேள்வியாகும். இது போன்ற கேள்விகளுக்கு விடை தேடுகையில் மிகவும் பொறுமையுடன் கூடிய ஒரு அணுகுமுறையை நாம் கடைபிடிக்க வேண்டும். ஏனெனில் நேபாளின் ஜனநாயகப் போராட்டம் ஒரு தியாகம் செறிந்த வரலாற்றினை கொண்டது. அரசின் நிரந்தர ராணுவத்தை மட்டுமல்ல, ஏறக்குறைய மூன்றில் இரண்டு பங்கு நேபாளத்தின் கிராமப்பகுதிகளில் பெருநில உடைமையாளர்களை எதிர்த்தும் அது போராடியது. நிலத்தை அவர்களிடமிருந்து கைப்பற்றி அவற்றில் கூட்டு விவசாய முறையை ஏற்படுத்தியது. பல அடிப்படையான சமூக மாற்றப் பணிகளை வெற்றிகரமாக திட்டமிட்டு, அதற்காக தனது அருமைத்தோழர் பலரின் உயிர்களை இழந்து செய்து முடித்த கட்சி சி.பி.என் (மாவோயிஸ்ட்) ஆகும். அத்தகையை கட்சியை எடுத்த எடுப்பில் அது அங்கீகரிக்கப்பட்ட ஒரு மார்க்ஸிய நிலைபாட்டிலிருந்து மாறுபட்ட ஒரு கருத்தை முன் வைக்கிறது என்பதற்காக ஒரு வர்க்க சமரச சக்தி என்று கூறிவிட முடியாது;
நேபாள நாட்டின் பிரத்தியேக நிலை
நேபாளத்தில் நிலவும் பிரத்தியேக நிலையை முழுமையாக கணக்கில் எடுத்துக் கொண்டே இது குறித்த எந்த முடிவிற்கும் வரவேண்டும். அந்த அடிப்படையில் பார்த்தால் நேபாளத்தின் கிராமப்புற மக்களை அடிப்படை சமூக மாற்றப்பாதையில் ஏற்கனவே அணி திரட்டிவிட்ட சி.பி.என்.(மாவோயிஸ்ட்) அமைப்பு பிற கட்சிகளுடன் இணைந்து ஜனநாயக அமைப்பை கொண்டுவருவதற்கான போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதின் மூலம் நகர்ப்புற முற்போக்கு சக்திகளையும் வெற்றிகரமாக தன்பக்கம் அணிதிரட்டி உள்ளது. பல கட்சி ஆட்சிமுறை என்ற பெயரில் சுரண்டல் வர்க்கங்களை பிரதிநித்துவப்படுத்தும் கட்சிகளுக்கும் சுதந்திரமாகச் செயல்படும் உரிமை கொடுப்பதன் மூலம் அவை அந்நாட்டில் அதிகபட்சம் எதைச் செய்துவிட முடியும்?
அந்த உரிமையைப் பயன்படுத்தி சமுதாய மாற்றப் போக்கிற்கு பல முட்டுக்கட்டைகளை அக்கட்சிகள் போட முடியும். அந்த அனைத்து முட்டுக் கட்டைகளையும் மக்கள் சக்தியை ஒருங்கிணைத்து அந்த பிற்போக்கு சக்திகளுக்கு எதிராக நிறுத்துவதன் மூலம் அப்பிரச்னையை சி.பி.என்(மாவோயிஸ்ட்) போன்ற ஒரு கட்சி எளிதாகவே அகற்ற முடியும்.
ரஷ்ய அனுபவமும் நோபள அனுபவமும் வெவ்வேறானவை
சமூக மாற்றத்தைக் கொண்டுவருவதில் அனைத்து நாடுகளிலும் ஒரே மாதிரியான வழி பின்பற்றப்படவில்லை; பின்பற்றப்படவும் முடியாது. ஏனெனில் எந்த இரண்டு சூழ்நிலைகளும் முழுக்க முழுக்க ஒரே மாதிரியானவையாக இருக்க முடியாது. முதன்முதலில் உலகில் தோன்றிய சமூக மாற்ற எழுச்சி ரஷ்யாவில் ஏற்பட்ட சோசலிஸ்ட் புரட்சியாகும். அதில் ஆளும் வர்க்கத்தின் பல பலவீனங்களையும் அச்சயமத்தில் நடந்து கொண்டிருந்த முதல் உலக யுத்த சூழ்நிலையையும் அதனால் மக்கள்பட்ட துயரங்களையும் பயன்படுத்தி உரியதருணத்தில் ரஷ்ய முதலாளிவர்க்கத்தின் கையிலிருந்து ஆட்சி அதிகாரத்தை தொழிலாளி வர்க்க கட்சி, ஆயுதம் தாங்கிய புரட்சி மூலம் பறித்தது. உண்மையான சோசலிஸப் புரட்சியின் கட்டுமான வேலைகள் அதன் பின்னரே தொடங்கின.
எனவே அந்த முதல் சோசலிஸ அரசை நசுக்குவதற்கு உலக முதலாளிவர்க்கம் முழுவதும் தயார் நிலையில் இருந்ததால் அப்போது ஏற்பட்ட தொழிலாளி வர்க்க அரசின் வடிவம் மிகவும் கடுமையானதாக இருக்க வேண்டியதாயிற்று. அவ்வாறு இல்லாவிடில் புரட்சியை காப்பாற்ற முடியாது என்பதே அன்று நிலவிய வெளிப்படையான நிலையாகும். மேலும் அந்த நாடு மிகப்பரந்த நாடு. எதிர்ப்புரட்சி சக்திகள் அந்நாட்டின் ஏதாவது ஒரு மூலையில் தங்களது சீர்குலைவு நடவடிக்கைகளை ஆரம்பித்தால் அங்கு தொழிலாளி வர்க்க இயக்கம் அத்தனை முனைப்புடன் இல்லாவிட்டால் அச்சூழ்நிலையை சமாளிப்பது மிகக் கடினம். எனவே பாட்டாளி வர்க்கத்தின் அரசு வடிவமான பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை மிக கடுமையாக அங்கு அமுல்படுத்த வேண்டியிருந்தது.
ஆனால் இன்றைய நேபாளமோ அத்தனை பரந்த நாடல்ல. மேலும் அங்கு அரசு நிர்வாகம் எட்டமுடியாத இடங்களில் எல்லாம் சி.பி.என்(எம்) கட்சிக்கு அந்நாட்டில் அமைப்புகள் ஏற்கனவே ஏற்பட்டுவிட்டன. அக்கட்சியின் பலவீனமான பகுதியே நகர்ப்புறங்கள்தான். எனவே அரசின் ராணுவ நடவடிக்கைகளைப் பயன்படுத்தி பிற்போக்கு சக்திகளின் சுரணடல் அமைப்பைத் தக்க வைக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளை எதிர்கொள்வதற்குப் பதிலாக, மக்கள் இயக்கங்கள் மூலமாகவே அவற்றை எதிர்கொள்வது மிகச் சரியான வழிமுறை ஆகும். அதன் மூலம் என்றும் நிமிர முடியாத அளவிற்கு உடைமை வர்க்க சக்திகளை உழைக்கும் மக்களே ஓரங்கட்டி நிறுத்த முடியும்.
எனவே பல கட்சி ஆட்சிமுறையில் வெளிவரும் சுரண்டல் வர்க்க கட்சிகளில் கருத்துக்களை வெளிப்படையாக வரவிட்டு, அவற்றின் உள்ளார்ந்த சுரண்டல் வர்க்க தன்மைகளை அம்பலப்படுத்தி அவற்றிற்கு எதிரான மக்களின் கருத்துக்களை திரட்டி முறியடிப்பது ஒரு மிகச் சரியான வழிமுறையாகும். இவ்வாறு சமூக இயக்கங்களை இதுவரையில் எந்த கம்யூனிஸ்டு கட்சியும் செய்திராத விதத்தில் இயக்கப் பாதையின் மூலம் நேபாளத்தில் அமுல்படுத்துவது ஒரு புது வரலாறாகவே இருக்கும்.
தெருவில் அரங்கேறும் ஜனநாயகம்
இத்தகைய கம்யூனிஸ்டுகள் தேர்தல்களை சந்திக்கும் முறையிலிருந்து சற்றே மாறுபட்டு நிகழ்ந்து கொண்டுள்ளவை தான் தெருவில் அரங்கேறும் ஜனநாயகம் என்ற பெயரில் பல லத்தீன் அமெரிக்க நாடுகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஜனநாயகமாகும். அந் நாடுகளில் பல்வேறு வாக்குறுதிகளை முன் வைத்து வெற்றி பெற்ற கட்சிகளும் அவற்றின் தலைவர்களும் அவற்றை அமுல்படுத்தாது மக்களை ஏமாற்றினால் அவர்கள் எத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்ய தேர்ந்தெடுக்கப்பட்டார்களோ அத்தனை ஆண்டுகள் ஆட்சியில் இருந்து கொண்டு மக்களை ஏமாற்ற அங்குள்ள மக்கள் அனுமதிப்பதில்லை.
உடனடியாக தெருவில் இறங்கி அவர்கள் போராடத் தொடங்கிவிடுவர். ஆனாலும்கூட அந்நாடுகளில் அடுத்தடுத்து வரும் ஆட்சியாளர்கள் -அவர்களில் சிலர் நல்லவர்களாக இருந்தாலும்கூட-இந்த முதலாளித்துவ ஜனநாயக அரசு இயந்திரத்தை அப்படியே வைத்துக் கொண்டு மக்கள் நலனை பராமரிக்க முயல்வதால் அடுத்தடுத்து தோல்விகளையே சந்தித்துக் கொண்டுள்ளனர். எனவே மக்கள் அடிக்கடி தெருவில் இறங்கிப் போராட வேண்டியுள்ளது.
இந்த நிகழ்வுகளை எல்லாம் தொகுத்துப் பார்ப்பதன் மூலம் நாம் அறிந்து கொள்ள முடிவது என்ன?. அதாவது தேர்தல் முறையின் மூலம் உண்மையான முற்போக்காளர்கள் ஆட்சிக்கு வந்தாலும், அந்த ஆட்சிகள் எத்தனை தூரம் ஜனநாயக இயக்கப் பின்பலத்துடன் நடக்கின்றனவோ அவ்வளவு தூரமே ஓரளவேனும் மக்கள் ஆதரவுப் பணிகளை ஆற்ற முடிந்தவையாக இருந்திருக்கின்றன என்பதுதான்.
எனவே மக்கள் இயக்கப் பின்னணி ஏதுமின்றி நமது நாடு போன்ற நாடுகளில் நடைபெறும் தேர்தல்கள் பொதுவில் எந்த மாற்றத்தையும் கொண்டு வருவதில்லை. மாறாக தேர்தல்கள் படிப்படியாக முன்பிருந்த அளவிற்குக் கூட ஜனநாயகத்தன்மை இல்லாதவையாக ஆகி பாசிஸ தன்மை கொண்டவையாக ஆகி வருகின்றன.
[கருத்து:2 கருவூலம்:1 மே 2009 இதழ்]
இருந்தாலும் மாமேதை லெனினால் தலைமை தாங்கப்பட்ட ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்றங்களில் பங்கேற்கவும் செய்துள்ளது. எப்போதெல்லாம் மக்கள் இயக்கங்கள் நடத்துவதற்கு உரிமைகள் மறுக்கப்பட்டு ஒரு அடக்குமுறைச் சூழ்நிலை நிலவுவியதோ அப்போதெல்லாம் பாராளுமன்றத் தேர்தலில் அது பங்கேற்றுள்ளது. அடக்குமுறை அதிக அளவில் ஏவிவிடப்படாமல் இயக்கங்கள் நடத்துவதற்கு அதிகத் தடை எதுவும் இல்லாமல் மக்கள் இயக்கங்கள் முழுவீச்சில் நடைபெறும் போது நாடாளுமன்றங்களின் பக்கம் கவனம் திசை திருப்பிவிடப்படுவது கடுமையாக அக்கட்சியால் விமர்சிக்கவும் பட்டுள்ளது.
பொதுவான கம்யூனிஸ்டுகளின் புரிதல் நாடாளுமன்ற அரசியல் மூலம் உழைக்கும் மக்களின் ஆட்சியை நிலைநாட்ட முடியாது என்பதே. அதாவது ஒரு பிரத்யேகச் சூழ்நிலையில் நாடாளுமன்றத்தில் வெற்றி பெற்று ஒரு உண்மையான கம்யூனிஸ்டு கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஆளும் முதலாளி வர்க்கத்திற்குச் சேவை புரிவதற்காக வளர்த்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றத்தை உள்ளடக்கிய அரசு எந்திரத்தை அப்படியே உழைக்கும் வர்க்கத்திற்கு ஆதரவானதாக மாற்ற முடியாது; அந்நிலையில் சமாதானப்பூர்வமாகவே அதைக் கலைத்துவிட்டு உழைக்கும் வர்க்கத்திற்கான அரசு எந்திரத்தை உருவாக்க வேண்டியது அவசியமாகும்; இதுவே தேர்தல்கள், ஜனநாயகம் குறித்த மார்க்சியப் புரிதலாகும்.
1957ல் இந்திய அனுபவம்
இந்தப் புரிதலுக்கு முரணாக அமைந்த முதல் நிகழ்வு இந்தியாவில்தான் ஏற்பட்டது. எந்த நாடாளுமன்ற முறை உழைக்கும் மக்களின் அரசியல் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்கு உகந்ததல்ல என்று கருதப்பட்டதோ அந்த நாடாளுமன்ற ஆட்சி முறையின் படி நடத்தப்பட்ட தேர்தல்கள் மூலம் 1957ம் ஆண்டு கேரள மாநிலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது. ஆட்சிக்கு வந்தவுடன் கேரள கம்யூனிஸ்டு மந்திரி சபையில் முதல்வராகப் பொறுப்பேற்ற இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் அவர்கள் நாடாளுமன்றங்கள் மூலமே கம்யூனிஸ்டுகள் சமூக மாற்றத்தை கொண்டு வர முடியும் என்பதை உலகிற்கு நாம் நிரூபித்துக் காட்டுவோம் என்று கூறினார். அதன் பின் அமிர்தஸரசில் கூடிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 5வது கட்சிக் காங்கிரசும் அக்கருத்தை பிரதிபலித்தது.
அதே சமயத்தில் குருச்ஷேவ் தலைமையிலான சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி தனது 20வது காங்கிரசில் செய்த கொள்கை ரீதியான தடம் புரலல்களுக்கும் அது ஒத்ததாக இருந்தது, அதாவது இருபதாவது கட்சி காங்கிரஸின் தீர்மானம் ஒன்றின் மூலம் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி சமாதானப்பூர்வ நாடாளுமன்ற வழிமுறையின் மூலம் சோசலிசத்தை கொண்டு வர முடியும் என்று கூறியது. அதை ஏற்றுக் கொள்ளும் விதத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஐந்தாவது கட்சி காங்கிரஸ் கட்சி அதன் குறிக்கோளை சமாதானப்பூர்வ முறையில் அடையப் பாடுபடும்' என்ற சரத்தை புதிதாக அதன் அமைப்புச் சட்டத்தின் முன்னுரையில் சேர்த்தது. ஆனால் அந்த அரசு அதிக நாள் நீடித்துச் செயல்பட அனுமதிக்கப்படவில்லை. விமோச்சன சமரம் என்ற பெயரில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி அவர்களால் தலைமை தாங்கி நடத்தப்பட்ட போராட்டத்தின் மூலம் முதல் கம்யூனிஸ்ட் அமைச்சரவை பதவியிலிருந்து இறக்கப்பட்டது.
சிலி - அனுபவம்
அதன் பின்னர் உலகறிந்த அளவில் நாடாளுமன்றத் தேர்தல்கள் மூலம் வெற்றி பெற்று ஆட்சி அதிகாரத்தில் கம்யூனிஸ்டுகள் அமர்ந்தது லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியில் ஆகும். அங்கு 70-களில் சால்வடார் அலென்டே அவர்கள் தலைமையில் தேர்தல் மூலமான கம்யூனிஸ்ட் கட்சியின் அரசு அமைந்தது. ஆனால் அவரது தேர்தல் வாக்குறுதியான அமெரிக்க முதலாளிகளுக்குச் சொந்தமான செப்புச் சுரங்கங்களை தேசியமயமாக்கியது, அவரது ஆட்சி அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலையீட்டினால் தூக்கிஎறியப்படுவதற்கு காரணமாக அமைந்தது. அந்நடவடிக்கை இத்தகைய தலையீட்டை உருவாக்கும் என்று அவருடைய நெருங்கிய சகாக்கள் எச்சரித்தனர். அதனை எதிர்கொள்ள உரிய தயாரிப்புகளை மேற்கொள்ளுமாறு அவர்கள் அவரைக் கேட்டுக் கொள்ளவும் செய்தனர்.
ஆனால் அவர் அவற்றை புறக்கணித்தார். அதனால் இந்த துயர சம்பவம் அங்கு நிகழ்ந்தது, கம்யூனிஸ்ட் ஆட்சியை தூக்கி எறிந்ததோடு அமெரிக்காவினால் அங்கு ஆட்சியாளனாக நியமிக்கப்பட்ட பினோசே, அலெண்டே உள்பட பல்லாயிரக் கணக்கில் கம்யூனிஸ்டுகளைக் கொன்று குவிக்கும் கொடும்பாதகச் செயலிலும் ஈடுபட்டான். அமைதியான முறையில் சோசலிஸத்தை அமைத்துக் காட்டுவோம் என்ற விசயத்தில் அவர் மிகவும் பிடிவாதமாக இருந்தது அவருடைய உயிரையும், பாப்லோ நெருடா போன்ற உலகப் புகழ் பெற்ற நோபல் பரிசு வாங்கிய கவிஞர் மற்றும் பல்லாயிரக்கணக்கான கம்யூனிஸ்டுகளின் உயிர்களையும் காவு கொண்டது.
நேபாளத்தின் புத்தம் புது அனுபவம்
இத்தகைய விதிவிலக்குகள் தவிர மார்க்சிஸத்தின் தேர்தல் குறித்த அடிப்படையான அரசியல் கண்ணோட்டத்தை நடைமுறைப் பூர்வமாக மறுதலிக்கும் சம்பவங்கள் வேறெங்கும் நடந்ததில்லை. மிக நீண்ட நாட்களுக்குப்பின்பு அத்தகைய ஒரு நிகழ்வு நேபாளத்தில் நிகழ்ந்தது. அதாவது நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவேயிஸ்ட்) தேர்தல் மூலம் ஆட்சிக்கு வந்தது. மார்க்சிஸம் என்பதும் அதன் பார்வையும் பல வறட்டுச் சூத்திரங்களின் தொகுப்பல்ல. ஒவ்வொரு நாட்டின் பிரத்யேகச் சூழ்நிலைக்கும் உகந்த வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டு செழுமைப்படுத்தப்பட வேண்டியதே மார்க்சிய விஞ்ஞானமாகும்.
அந்த அடிப்படையில் இந்த நிகழ்வுகளைப் பார்த்தோமானால் அவற்றின் தனித்தன்மைகளை அலசி ஆராய்ந்தோமானால் அந்த நிகழ்வுகள் ஏற்பட்டதற்கும், அதன்பின் ஏற்பட்ட விளைவுகளுக்குமான காரணங்களை நன்கு அறிய முடியும்.
கம்யூனிஸ்ட் என்ற பெயரில் செயல்பட்ட ஒரு கட்சியின் வெற்றியே அது
அவ்விதத்தில் கேரளாவில் தேர்தல் மூலமான கம்யூனிஸ்ட் அமைச்சரவை ஏற்பட்டதற்கும் காரணங்கள் உண்டு. கேரளத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை உருவாக்கியவர்கள் காங்கிரஸ் கட்சியின் பெரும் தலைவர்களாக விடுதலைப் போராட்டக் காலத்தில் விளங்கி அதன் பின் அக்கட்சியில் இருந்து வெளியேறியவர்கள் ஆவர். கம்யூனிச சித்தாந்தத்தின் மேல் மக்களுக்கு இருந்த புரிதல் மற்றும் உணர்வு அடிப்படையில் ஏற்பட்ட வெற்றி என்பதைக் காட்டிலும் 1957ல் அங்கு கம்யூனிஸ்ட் கட்சி பெற்ற தேர்தல் வெற்றி ஏ.கே.கோபாலன், இ.எம்.எஸ். போன்ற முன்னாள் காங்கிரஸ் கட்சியையும் அதன் பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியையும் சார்ந்த தலைவர்களின் மேல் கேரள மக்களுக்கு இருந்த அபிமானத்தின் காரணமாக பெறப்பட்ட வெற்றியே ஆகும்.
இதனை குடியரசு தலைவரால் ஆட்சி கலைக்கப்பட்ட பின்னர் இ.எம்.எஸ். அவர்கள் நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு முன்வைத்த வாதங்களே புலப்படுத்தும். தனது மந்திரி சபை அதீதமாக எதையும் செய்து விடவில்லை காங்கிரஸ் கட்சி உள்பட அனைத்து தீவிர ஜனநாயக இயக்கங்களும் செய்ய விரும்பியதே என்றே அவர் பிரச்சாரம் செய்தார். அவரது மந்திரி சபை கொண்டு வந்த கல்வி மசோதாவும் நிலச் சீர்திருத்த மசோதாவும் கொள்கை ரீதியாக அன்றைய நிலையில் காங்கிரஸ் கட்சிக்கும் உடன்பாடானதே.
எனவே அங்கு 1957ல் ஏற்பட்டது ஒரு முழுமையான வடிவத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம் பெற்ற வெற்றியல்ல. எத்தனையோ தியாகங்கள் புரிந்த தலைவர்களையும் தொண்டர்களையும் கொண்டதாக அன்றைய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இருந்த போதும் அது ஒரு கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்பட வேண்டிய விதத்தில் உருவாகி வளர்ந்த கட்சி அல்ல. அதன் தலைவர்கள் தொண்டர்கள் அனைவரும் ஒத்த நோக்கம், ஒருமித்த சிந்தனை போன்ற மிக அத்தியாவசியமான மார்க்சிய சிந்தனைப் போக்கை கொண்டவர்களாக இருக்கவில்லை. அதன் அடிப்படையில் ஒரு கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்படுவதற்குத் தேவையான தத்துவார்த்த மத்தியத்துவம் அக்கட்சியில் ஏற்படவில்லை.
எனவே உண்மையான அர்த்தத்தில் 1957ல் கேரளாவில் அக்கட்சிக்குக் கிடைத்த வெற்றி கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெயரில் செயல்பட்ட ஒரு கட்சிக்கு தியாக சிந்தனையுடன் கூடிய அக்கட்சியின் தலைவர் மற்றும் தொண்டர்களின் மேல் இருந்த அபிமானத்தின் காரணமாக கிடைத்த வெற்றியே தவிர, உண்மையான அர்த்தத்தில் ஒரு சோசலிஸ அமைப்பை ஏற்படுத்த விரும்பி அதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்த ஒரு கம்யூனிஸ்ட் கட்சிக்குக் கிடைத்த வெற்றி அல்ல.
நாடாளுமன்ற விசுவாசத்திற்கு கொடுக்கப்பட்ட விலை
அதைப் போல் சிலியில் அலெண்டே பெற்ற வெற்றி தங்கள் தேச வளங்கள் தங்கள் நாட்டின் மேம்பாட்டிற்குப் பயன்படாமல் அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் கொள்ளை கொள்ளப்படுவதற்கு எதிராகக் கிடைத்ததே தவிர, சுரண்டல் முறையை அப்படியே தூக்கிஎறிய வேண்டும் என்ற கம்யூனிஸ்ட் கோட்பாட்டின் அடிப்படைக்கு கிடைத்த வெற்றியல்ல. சில நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன்பு அவற்றை எடுத்தால் எத்தகையப் பின்விளைவுகள் ஏற்படும் என்பதை முன்கூட்டியே சிந்தித்துப் பார்த்து அதற்கான தயாரிப்புகளை செய்த பின்னரே அவற்றை எடுக்க வேண்டும்.
ஆனால் சிலியில் அமெரிக்க முதலாளிகளுக்குச் சொந்தமான செப்புச் சுரங்கங்களை தேசியமயமாக்குவதற்கு முன்பு அலெண்டே அதன் பின்விளைவாக அமெரிக்காவின் தாக்குதல் வரும் என்பதை பார்க்கத் தவறிவிட்டார். அவரது பல நண்பர்கள் வற்புறுத்திக் கூறியும் கூட அவர் அமெரிக்கத் தாக்குதல் வரும் பட்சத்தில் அதனை எதிர்கொள்ள மக்களின் தொண்டர்படை எதையும் உருவாக்கவில்லை. இதன் விளைவாகவே ஒரு ராணுவ அதிகாரி அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் விலைக்கு வாங்கப்பட்டு அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை ராணுவ சதியின் மூலம் அகற்ற முடிந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் சிலியின் சோஸலிஸ்ட் கட்சியும் பெரும்பான்மை மக்கள் ஆதரவை பெற்று ஆட்சிக்கு வந்தவுடன் முதலாளித்துவ நாடாளுமன்ற ஆட்சி முறைக்கு விசுவாசமானவர்களாக ஆகிவிட்டனர். தாங்கள் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருப்பது ஒரு வர்க்க கருவியே என்பதையும் அதனை வேறொரு வர்க்கத்தின் நலனுக்கானதாக மாற்ற முடியாது என்பதையும் மறந்துவிட்டனர்.
முற்றிலும் புதிய நேபாள அனுகுமுறை
மிக சமீபத்தில் நடந்த நேபாள நிகழ்வுகள் உண்மையிலேயே மிகவும் சுவைகரமானவையும், தேர்தல் ஜனநாயகம் குறித்த மார்க்சிய லெனினிய கருத்துக் கருவூலத்தில் ஒரு புதிய அத்தியாயத்தை சேர்ப்பவையாகவும் அமைந்தன. மார்க்சிய கட்சிகள் எவையும் அதுவரை முன்வைத்திராத ஒரு புதிய கருத்தை தோழர் பிரச்சந்தா தலைமையிலான சி.பி.என் (மாவோயிஸ்ட்) கட்சி வைத்தது. அதாவது பல கட்சி ஜனநாயகம் நேபாளத்தில் நிலைநாட்டப்படும் என்று அது அறிவித்தது. அது குறித்த ஐயப்பாடுகள் எழுப்பபட்ட பொழுது பல கட்சி ஜனநாயக முறையை மனப்பூர்வமாக தாங்கள் கடைபிடிக்கப் போவதாகவும் சி.பி.என் (மாவோயிஸ்ட்)கள் தயக்கமின்றி உறுதி கூறினர்.
வர்க்கங்களை அடிப்படையாகக் கொண்டே கட்சிகள் உருவாகின்றன; அதனால் உழைக்கும் வர்க்கத்தின் நலன் ஒன்றையே பிரதானமாக கருதும் கம்யூனிஸ்ட்களின் தலைமையிலான ஆட்சிமுறையில் பல கட்சி ஆட்சி முறைக்கு இடமில்லை. ஏனெனில் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் ஏற்படும் ஆட்சி முறையில் உழைக்கும் வர்க்கம் ஒன்றின் நலன் மட்டுமே பிரதானமாக கருத்தில் கொள்ளப்படும். மற்ற சுரண்டும் வர்க்கங்கள் அனைத்தும் படிப்படியாக சமூகக் கட்டு மானத்திலிருந்தே அகற்றப்படும்.
எனவே அங்கு பலகட்சி ஆட்சிமுறைக்கு வாய்ப்பே இல்லை என்பது தான் மார்க்சிஸத்தின் இன்றுவரை நிலவி நிலைபெற்றிருக்கும் கருத்தாகும். இதிலிருந்து மாறுபட்டு பலகட்சி ஆட்சி முறைக்கு ஆதரவாக நேபாளின் சி.பி.என். (எம்) கட்சி முதல் முறையாக ஒரு புதிய கருத்தினை முன் வைத்தது.
இது உலகின் பல நாடுகளின் கம்யூனிஸ்டுகள் என்ற பெயரில் செயல்படும் கட்சிகள் சென்றது போல் வர்க்க சமரசப் பாதையில் நேபாள் மாவோயிஸ்டுகளும் சென்றுவிட்டனர் என்பதை காட்டுகிறதா என்பது நம் முன் எழும் கேள்வியாகும். இது போன்ற கேள்விகளுக்கு விடை தேடுகையில் மிகவும் பொறுமையுடன் கூடிய ஒரு அணுகுமுறையை நாம் கடைபிடிக்க வேண்டும். ஏனெனில் நேபாளின் ஜனநாயகப் போராட்டம் ஒரு தியாகம் செறிந்த வரலாற்றினை கொண்டது. அரசின் நிரந்தர ராணுவத்தை மட்டுமல்ல, ஏறக்குறைய மூன்றில் இரண்டு பங்கு நேபாளத்தின் கிராமப்பகுதிகளில் பெருநில உடைமையாளர்களை எதிர்த்தும் அது போராடியது. நிலத்தை அவர்களிடமிருந்து கைப்பற்றி அவற்றில் கூட்டு விவசாய முறையை ஏற்படுத்தியது. பல அடிப்படையான சமூக மாற்றப் பணிகளை வெற்றிகரமாக திட்டமிட்டு, அதற்காக தனது அருமைத்தோழர் பலரின் உயிர்களை இழந்து செய்து முடித்த கட்சி சி.பி.என் (மாவோயிஸ்ட்) ஆகும். அத்தகையை கட்சியை எடுத்த எடுப்பில் அது அங்கீகரிக்கப்பட்ட ஒரு மார்க்ஸிய நிலைபாட்டிலிருந்து மாறுபட்ட ஒரு கருத்தை முன் வைக்கிறது என்பதற்காக ஒரு வர்க்க சமரச சக்தி என்று கூறிவிட முடியாது;
நேபாள நாட்டின் பிரத்தியேக நிலை
நேபாளத்தில் நிலவும் பிரத்தியேக நிலையை முழுமையாக கணக்கில் எடுத்துக் கொண்டே இது குறித்த எந்த முடிவிற்கும் வரவேண்டும். அந்த அடிப்படையில் பார்த்தால் நேபாளத்தின் கிராமப்புற மக்களை அடிப்படை சமூக மாற்றப்பாதையில் ஏற்கனவே அணி திரட்டிவிட்ட சி.பி.என்.(மாவோயிஸ்ட்) அமைப்பு பிற கட்சிகளுடன் இணைந்து ஜனநாயக அமைப்பை கொண்டுவருவதற்கான போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதின் மூலம் நகர்ப்புற முற்போக்கு சக்திகளையும் வெற்றிகரமாக தன்பக்கம் அணிதிரட்டி உள்ளது. பல கட்சி ஆட்சிமுறை என்ற பெயரில் சுரண்டல் வர்க்கங்களை பிரதிநித்துவப்படுத்தும் கட்சிகளுக்கும் சுதந்திரமாகச் செயல்படும் உரிமை கொடுப்பதன் மூலம் அவை அந்நாட்டில் அதிகபட்சம் எதைச் செய்துவிட முடியும்?
அந்த உரிமையைப் பயன்படுத்தி சமுதாய மாற்றப் போக்கிற்கு பல முட்டுக்கட்டைகளை அக்கட்சிகள் போட முடியும். அந்த அனைத்து முட்டுக் கட்டைகளையும் மக்கள் சக்தியை ஒருங்கிணைத்து அந்த பிற்போக்கு சக்திகளுக்கு எதிராக நிறுத்துவதன் மூலம் அப்பிரச்னையை சி.பி.என்(மாவோயிஸ்ட்) போன்ற ஒரு கட்சி எளிதாகவே அகற்ற முடியும்.
ரஷ்ய அனுபவமும் நோபள அனுபவமும் வெவ்வேறானவை
சமூக மாற்றத்தைக் கொண்டுவருவதில் அனைத்து நாடுகளிலும் ஒரே மாதிரியான வழி பின்பற்றப்படவில்லை; பின்பற்றப்படவும் முடியாது. ஏனெனில் எந்த இரண்டு சூழ்நிலைகளும் முழுக்க முழுக்க ஒரே மாதிரியானவையாக இருக்க முடியாது. முதன்முதலில் உலகில் தோன்றிய சமூக மாற்ற எழுச்சி ரஷ்யாவில் ஏற்பட்ட சோசலிஸ்ட் புரட்சியாகும். அதில் ஆளும் வர்க்கத்தின் பல பலவீனங்களையும் அச்சயமத்தில் நடந்து கொண்டிருந்த முதல் உலக யுத்த சூழ்நிலையையும் அதனால் மக்கள்பட்ட துயரங்களையும் பயன்படுத்தி உரியதருணத்தில் ரஷ்ய முதலாளிவர்க்கத்தின் கையிலிருந்து ஆட்சி அதிகாரத்தை தொழிலாளி வர்க்க கட்சி, ஆயுதம் தாங்கிய புரட்சி மூலம் பறித்தது. உண்மையான சோசலிஸப் புரட்சியின் கட்டுமான வேலைகள் அதன் பின்னரே தொடங்கின.
எனவே அந்த முதல் சோசலிஸ அரசை நசுக்குவதற்கு உலக முதலாளிவர்க்கம் முழுவதும் தயார் நிலையில் இருந்ததால் அப்போது ஏற்பட்ட தொழிலாளி வர்க்க அரசின் வடிவம் மிகவும் கடுமையானதாக இருக்க வேண்டியதாயிற்று. அவ்வாறு இல்லாவிடில் புரட்சியை காப்பாற்ற முடியாது என்பதே அன்று நிலவிய வெளிப்படையான நிலையாகும். மேலும் அந்த நாடு மிகப்பரந்த நாடு. எதிர்ப்புரட்சி சக்திகள் அந்நாட்டின் ஏதாவது ஒரு மூலையில் தங்களது சீர்குலைவு நடவடிக்கைகளை ஆரம்பித்தால் அங்கு தொழிலாளி வர்க்க இயக்கம் அத்தனை முனைப்புடன் இல்லாவிட்டால் அச்சூழ்நிலையை சமாளிப்பது மிகக் கடினம். எனவே பாட்டாளி வர்க்கத்தின் அரசு வடிவமான பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை மிக கடுமையாக அங்கு அமுல்படுத்த வேண்டியிருந்தது.
ஆனால் இன்றைய நேபாளமோ அத்தனை பரந்த நாடல்ல. மேலும் அங்கு அரசு நிர்வாகம் எட்டமுடியாத இடங்களில் எல்லாம் சி.பி.என்(எம்) கட்சிக்கு அந்நாட்டில் அமைப்புகள் ஏற்கனவே ஏற்பட்டுவிட்டன. அக்கட்சியின் பலவீனமான பகுதியே நகர்ப்புறங்கள்தான். எனவே அரசின் ராணுவ நடவடிக்கைகளைப் பயன்படுத்தி பிற்போக்கு சக்திகளின் சுரணடல் அமைப்பைத் தக்க வைக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளை எதிர்கொள்வதற்குப் பதிலாக, மக்கள் இயக்கங்கள் மூலமாகவே அவற்றை எதிர்கொள்வது மிகச் சரியான வழிமுறை ஆகும். அதன் மூலம் என்றும் நிமிர முடியாத அளவிற்கு உடைமை வர்க்க சக்திகளை உழைக்கும் மக்களே ஓரங்கட்டி நிறுத்த முடியும்.
எனவே பல கட்சி ஆட்சிமுறையில் வெளிவரும் சுரண்டல் வர்க்க கட்சிகளில் கருத்துக்களை வெளிப்படையாக வரவிட்டு, அவற்றின் உள்ளார்ந்த சுரண்டல் வர்க்க தன்மைகளை அம்பலப்படுத்தி அவற்றிற்கு எதிரான மக்களின் கருத்துக்களை திரட்டி முறியடிப்பது ஒரு மிகச் சரியான வழிமுறையாகும். இவ்வாறு சமூக இயக்கங்களை இதுவரையில் எந்த கம்யூனிஸ்டு கட்சியும் செய்திராத விதத்தில் இயக்கப் பாதையின் மூலம் நேபாளத்தில் அமுல்படுத்துவது ஒரு புது வரலாறாகவே இருக்கும்.
தெருவில் அரங்கேறும் ஜனநாயகம்
இத்தகைய கம்யூனிஸ்டுகள் தேர்தல்களை சந்திக்கும் முறையிலிருந்து சற்றே மாறுபட்டு நிகழ்ந்து கொண்டுள்ளவை தான் தெருவில் அரங்கேறும் ஜனநாயகம் என்ற பெயரில் பல லத்தீன் அமெரிக்க நாடுகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஜனநாயகமாகும். அந் நாடுகளில் பல்வேறு வாக்குறுதிகளை முன் வைத்து வெற்றி பெற்ற கட்சிகளும் அவற்றின் தலைவர்களும் அவற்றை அமுல்படுத்தாது மக்களை ஏமாற்றினால் அவர்கள் எத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்ய தேர்ந்தெடுக்கப்பட்டார்களோ அத்தனை ஆண்டுகள் ஆட்சியில் இருந்து கொண்டு மக்களை ஏமாற்ற அங்குள்ள மக்கள் அனுமதிப்பதில்லை.
உடனடியாக தெருவில் இறங்கி அவர்கள் போராடத் தொடங்கிவிடுவர். ஆனாலும்கூட அந்நாடுகளில் அடுத்தடுத்து வரும் ஆட்சியாளர்கள் -அவர்களில் சிலர் நல்லவர்களாக இருந்தாலும்கூட-இந்த முதலாளித்துவ ஜனநாயக அரசு இயந்திரத்தை அப்படியே வைத்துக் கொண்டு மக்கள் நலனை பராமரிக்க முயல்வதால் அடுத்தடுத்து தோல்விகளையே சந்தித்துக் கொண்டுள்ளனர். எனவே மக்கள் அடிக்கடி தெருவில் இறங்கிப் போராட வேண்டியுள்ளது.
இந்த நிகழ்வுகளை எல்லாம் தொகுத்துப் பார்ப்பதன் மூலம் நாம் அறிந்து கொள்ள முடிவது என்ன?. அதாவது தேர்தல் முறையின் மூலம் உண்மையான முற்போக்காளர்கள் ஆட்சிக்கு வந்தாலும், அந்த ஆட்சிகள் எத்தனை தூரம் ஜனநாயக இயக்கப் பின்பலத்துடன் நடக்கின்றனவோ அவ்வளவு தூரமே ஓரளவேனும் மக்கள் ஆதரவுப் பணிகளை ஆற்ற முடிந்தவையாக இருந்திருக்கின்றன என்பதுதான்.
எனவே மக்கள் இயக்கப் பின்னணி ஏதுமின்றி நமது நாடு போன்ற நாடுகளில் நடைபெறும் தேர்தல்கள் பொதுவில் எந்த மாற்றத்தையும் கொண்டு வருவதில்லை. மாறாக தேர்தல்கள் படிப்படியாக முன்பிருந்த அளவிற்குக் கூட ஜனநாயகத்தன்மை இல்லாதவையாக ஆகி பாசிஸ தன்மை கொண்டவையாக ஆகி வருகின்றன.
[கருத்து:2 கருவூலம்:1 மே 2009 இதழ்]